முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன் தோப்பில் அம்பேத்கர் படிப்பகம் திருமாவளவன் எம்.பி திறந்து வைத்தார்

ஷ்யாம் நியூஸ்

14.09.2022

 மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன் தோப்பில் அம்பேத்கர் படிப்பகம் திருமாவளவன் எம்.பி திறந்து வைத்தார்.


தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன் தோப்பில் அம்பேத்கர் படிப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சண்முகக்கனி, கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோபால், பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு சோட்டையன் தோப்பு விடுதலை சிறுத்தை கட்சி முகாம் செயலாளர் ரஞ்சித்குமார், வழக்கறிஞர் பிரிவு அர்ஜுன் ஆகியோர் வரவேற்புரையாற்றினார்கள்.

     விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவரும் எம்.பியுமான தொல் திருமாவளவன் படிப்பகத்தை திறந்து வைத்து வருகை பதிப்வேட்டில் கையெழுத்திட்டு புத்தர் சிலையை திறந்து வைத்து பேசுகையில் இந்த பகுதியில் இப்படி ஓரு படிப்பகம் அமைவதற்கு காரணமாக இருந்த நிர்வாகிகளை முதலில் பாராட்டுகிறேன். ஓவ்வொரு ஊரிலும் இது போன்ற படிப்பகம் உருவாக்கப்பட வேண்டும் என்று எனது 60வது பிறந்தநாள் விழாவில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. அதை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் முதன் முதலில் வடக்கு சோட்டையன் தோப்பில் தான் அதை நிறைவேற்றி கொடுத்துள்ளார்கள்.

இதற்கு உருவாக்கம் கொடுத்த தலைவர் ரவி, செயலாளர் வக்கீல் சார்லஸ், பொருளாளர் செல்வகுமார், துணைத்தலைவர் தங்கம், மற்றும் பல்வேறு உதவிகளை  செய்து கொடுத்த பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், உள்ளிட்டவர்களை மனதார பாராட்டுகிறேன். கல்வி உள்பட அனைத்திலும் நாம் முன்னேற வேண்டும். இதற்கு முன்னோட்டமாக அம்பேத்கர் கல்வி இலக்கியம் அறிவியல் அரசியல் என அனைத்திலும் சாதனை படைத்தார். அவரது படிப்புக்கு மராட்டிய மாநிலத்தில் உள்ள பலர் உதவி செய்ததால் அமெரிக்கா லண்டன், சென்று பட்டப்படிப்பை மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றார்.

ஓடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலராக விளங்கியவரின் வழியில் நாம் பயணித்து வருகிறோம். வருங்கால நமது சந்ததியினர் நல்ல முறையில் படித்து முன்னேற வேண்டும் அதற்கு ஊர் தோறும் இது போன்ற படிப்பகம் அமைக்க வேண்டும் என்று பேசினார். பின்னர் ஓரு குடும்ப தலைவின் பெண் குழந்தைக்கு அறிவுமதி என்று பெயர் சூட்டினார்.

முன்னதாக மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவரும் திமுக கிழக்கு பகுதி ஓன்றிய செயலாளருமான சரவணக்குமார் தலைமையில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணைசெயலாளர் கணேசன், ஒன்றிய துணைச்செயலாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான வசந்தகுமாரி, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், திமுக நிர்வாகிகள் மாரியப்பன், பால ஆனந்த், கௌதம், மைக்கேல் ராஜ், ஆகியோர் ரோஜாப்பூ மாலை அணிவித்து வரவேற்றனர்.

விழாவில் விடுதலை சிறுத்தை கட்சி தென்மண்டல செயலாளர் தமிழினியன், மத்திய மாவட்ட செயலாளர் அகம்மது இக்பால், கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சங்கரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு சோட்டையன் தோப்பு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...