ஷ்யாம் நீயூஸ்
10.02.2022
தூத்துக்குடியில் நகர்மன்ற தேர்தல் திமுக நிர்வாகிகளுடன் சண்முகையா எம்.எல்.ஏ ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டில் போட்டியிடும் தெற்கு மாவட்ட வர்த்தகஅணி துணைச்செயலாளர் ரெங்கசாமி போட்டியிடுகிறார். இதனையொட்டி தி மு க நிர்வாகிகளுடன் ஒட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆலோசனை நடத்தினார். மேலும் அவர் பேசுகையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு திமுக ஆட்சியில் சாதனைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிகளையும் எடுத்துச்சொல்லி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதாராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி வெற்றிக்கனியை முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து நிர்வாகிகளும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், தேர்தல் பொறுப்பாளர்கள் தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நல அணி மாவட்ட செயலாளர் டிடிசி ராஜேந்திரன், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், மற்றும் ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, பகுதி செயலாளர் சிவக்குமார், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மற்றும் ஜாகீர் உசேன், ஜான்ராஜ், ராஜசேகர், வெங்கடேஷன், மாயக்கண்ணன், பாலசுப்பிரமணியன், சங்கரசுப்பிரமணியன், அருணாதேவி, மீனா, பியூலா, செல்வக்குமார், பரமசிவன், ராஜகுமாரசாமி, செல்வராஜ், சேவியர், பால்ராஜ், கண்ணன், காளிமுத்து, ராஜாமணி, அதிசயராஜ், ராஜம், மகேந்திரன், சண்முகராஜ், பொன்ராஜ், சிவன், வெற்றி, துரைராஜ், தெய்வேந்திரன், சுரேஷ், ஷாஜகான், சிவகாமி, சுந்தரி, மரிய சேவியர், அபிராமி, செல்லையா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.