முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் மார்ச் 1ம் தேதி மஹா சிவராத்திரி திருவிழா சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தகவல்

 ஷ்யாம் நீயூஸ்

22.02.2022

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் மார்ச் 1ம் தேதி மஹா சிவராத்திரி திருவிழா!சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தகவல்!


தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் மார்ச் 1ம் தேதி மஹா சிவராத்திரி திருவிழா சிறப்பு வழிபாடுகள் மற்றும் நகைச்சுவை பட்டிமன்றம் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகளுடன் கோலாகலமாக நடைபெறுகிறது., எனவே இவ்விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றிடுமாறு ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் அழைப்பு விடுத்துள்ளார்.

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீசித்தர் பீடத்தில் தென்தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பாக குருபகவான் குருமகாலிங்கேஸ்வராக தனி சந்தியில் இங்கு மட்டுமே எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். 

ஆன்மிக சிறப்புபெற்ற குரு மகாலிங்கேஸ்வரருக்கு ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டிற்கான மஹா சிவராத்திரி விழா மார்ச் 1ம் தேதி(செவ்வாய்கிழமை)  கொண்டாடப்படுகிறது.

1ம் தேதி காலை 10மணிக்கு மஹா கணபதி, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மஹாலெட்சுமி ஹோமத்துடன் மஹா சிவராத்திரி விழா துவங்குகிறது. மாலை 6மணிக்கு நவக்கிர பூஜை, லலிதா சகஸ்ர நாமம், மஹா பூஜை, தீபாரதனையும், இரவு 9மணிக்கு மஹா சிவராத்திரி வழிபாடு பூஜைகளும், மஹா பூர்ணாகுதி, அபிஷேக அலங்கார தீபாரதனைகளும் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடைபெறுகிறது. 

சிறப்பு விருந்தினராக மலேசியா கடாரம் டத்தோ செந்திநாதன் பங்கேற்கிறார். இரவு 10மணிக்கு ''பெண்களுக்கு ஆண்கள் ஹீரோவா..? இல்லை ஜீரோவா..?'' என்ற தலைப்பில் சின்னத்திரை புகழ் பேராசிரியர் செபாஸ்டின் தலைமையிலான குழுவினரின் நகைச்சுவை வழக்காடு மன்றம் நடைபெறுகிறது.

இரவு 12மணிக்கு மஹாஅபிஷேகம், தமிழ்மறையில் தேவார திருவாசக பாராயணமும், தொடர்ந்து அதிகாலை 2மணிக்கு சதுர்வேத பாராயணமும், அதிகாலை 4மணிக்கு அபிஷேக அலங்கார தீபாரதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலுடன் மஹா சிவராத்திரி விழா நிறைவடைகிறது.

இவ்விழாவில் பங்கேற்று ''ஓம் நமச்சிவாய'' ஸ்லோகம் அதிகளவில் எழுதுபவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். இவ்விழாவினைத்தொடர்ந்து 2ம் தேதி(புதன்கிழமை) சர்வ அமாவாசை மஹா வழிபாடு நடைபெறுகிறது.

மஹா சிவராத்திரி விழாவில் சிவபக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று குருமகாலிங்கேஸ்வரரின் பேரருளை பெற்றுச்செல்லுமாறு சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் விழாக்குழுவினர், மகளிரணியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...