முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளிலும் வெற்றி பெற வேண்டும் கனிமொழி எம்.பி பேச்சு!.

 ஷ்யாம் நீயூஸ்

08.02.2022

முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளிலும் வெற்றி பெற வேண்டும் கனிமொழி எம்.பி பேசினார்.


தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் நடைபெற்றது. 

திமுக வேட்பாளர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ., ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த பின் கனிமொழி எம்.பி பேசுகையில், இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் ஆகும். காரணம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறுவதால் நல்லாட்சிக்கு சான்று அளிக்கும் தேர்தலாக உள்ளது. தூத்துக்குடி மாநகரில் பல்வேறு வேலைவாய்ப்புக்கான வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் துவக்கி வைக்க முதலமைச்சர் விரைவில் வர உள்ளார். அதன் மூலம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தேர்தல் களத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாய்ப்பு கிடைக்காதவரும் ஒற்றுமையுடன் பணியாற்றி திமுக வேட்பாளர்கள் உள்பட கூட்டணிக்கட்சியை சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் 60 வார்டுகளிலும் வெற்றி பெற்று முதல்வரின் சாதனைக்கும், கழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றார். வேட்பாளர்கள் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ராஜ்மோகன் செல்வின், வக்கீல் பாலகுருசாமி, நாகேஸ்வரி, அந்தோணிபிரகாஷ் மார்ஷலின், ஜெயசீலி, நிர்மல்ராஜ், பவானி, மார்ஷன், சந்தனமாரி, தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா, ரவீந்திரன், இசக்கிராஜா, கண்ணன், ராமர், ஜான், சோமசுந்தரி, ஜான்சிராணி, மகேஸ்வரி, மெட்டில்டா, மரியகீதா, சரண்யா, முத்துமாரி, கலைச்செல்வி, அதிர்ஷ்டமணி, கனகராஜ், கந்தசாமி, பொன்னப்பன், விஜயலட்சுமி, ரூபவள்ளி, சுரேஷ்குமார், ரிட்டா, பேபி ஏஞ்சல், அன்னலெட்சுமி, ராமகிருஷணன், ஜெனிட்டா, ரெக்ஸிலின் சூசை அந்தோணி, வைதேகி, சரவணக்குமார், முத்துராஜ், முத்துவேல், விஜயகுமார், ரங்கசாமி மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன். பொறியாளர் அணி செயலாளர் அன்பழகன். மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், ராஜ்குமார். ஒன்றிய செயலாளர்கள் காசி விஸ்வநாதன், ஜெயக்கொடி. ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ். தொண்டரணி செயலாளர் வீரபாகு. மாணவரணி துணை செயலாளர் பால்மாரி. இளைஞரணி துணைச் செயலாளர் செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...