முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி 60 வார்டு வேட்பாளர்களையும் ஒன்றாக சேர வைத்து இறுதிக் கட்ட பிரச்சாரம் கனிமொழி எம்பி நிறைவு செய்தார்!

ஷ்யாம் நீயூஸ்

17.02.2022

தூத்துக்குடி 60 வார்டு வேட்பாளர்களையும் ஒன்றாக சேர வைத்து இறுதிக் கட்ட பிரச்சாரம் கனிமொழி எம்பி நிறைவு செய்தார்!


உங்கள் தொகுதியில் ஸ்டாலின் 8ஆயிரத்து 411 மனுக்களுக்கு தீர்வ காணப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். கனிமொழி எம்.பி வாக்காளர்களுக்கு வேண்டுகோள்

       தூத்துக்குடி நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளில் வேட்பாளர்களை ஆதரித்து வடக்கு தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றம் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன் வளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் முத்தம்மாள் காலணி மற்றும் அண்ணாநகர் பகுதியில் நடைபெற்ற

    தேர்தல் பிரச்சார நிறைவு நாள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசுகையில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் அரசுக்கு பாலமாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும். அப்படிபட்ட உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தால் தான் உங்கள் பகுதியில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க முடியும். ஏடாகூடமாக வேறு வேட்பாளர்களை தேர்வு செய்தால் அவர்கள் எங்களோடு இணக்கமாக இருக்க மாட்டார்கள். மக்கள் பணி பாதிக்கப்படும். முத்தம்மாள் காலணி பகுதி மழையால் பாதிக்கப்பட்ட போது அதை நேரில் வந்து சந்தித்து உங்களுக்கு ஆறுதல் கூறி அதிகாரிகளை விரைவாக பணி செய்ய உத்திரவிட்டதின் காரணமாக விரைவாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது இனி வரும் மழைகாலங்களில் அதுபோல் பாதிப்பு ஏற்படக்கூடாது. என்று முதலமைச்சர் எங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புகாரில் பெறப்பட்ட மனுக்களில் 8411 மனுக்களுக்கு தீர்வு கானப்பட்டுள்ளது 4200 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. 6653 பேருக்கு கூட்டுப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.

     இப்படி பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்ள மாவட்டத்தில் விரைவில் 4500 கோடி மதிப்பீல் உலகதரம் வாய்ந்த பர்னிச்சர் பார்க் அமைக்கப்படவுள்ளது தகவல் தொழில்நுட்ப பூங்காவும தொடங்கப்படவுள்ளது இதற்கான அடிக்கல் நாட்டுவிழா  நடைபெறவுள்ளது. முதலமைச்சர் தொடங்கி வைக்க வரவுள்ளார். கொரோனா காலக்கட்டத்தில் அரசு மருத்துவமணையில் என்னுடை எம்.பி நிதியிலிருந்து அமைக்கப்பட்ட சில பணிகளை கடந்த கால அதிமுக ஆட்சியில் இழுத்தபடிப்பு செய்யப்பட்டு திமுக ஆட்சி அமைந்ததும் அத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே போல் பல பணிகளை தடுத்ததும் மக்களுக்கான பணிகளை செய்யாமல் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ள வைக்கப்பட்டு முழுமையான வளர்ச்சி மாநகராட்சி பகுதியில் நடைபெறவேண்டும். அதற்கு ஒட்டு மொத்;தமாக அனைவரும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் உதயசூரியன் கை கதிர்அருவாள், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் ஏணி சின்னத்திற்கு வாக்களித்து வெற்ற பெற செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் சண்முகையா எம்.எல்.ஏ, காங்கிரஸ் மாநில துணைதலைவர் சண்முகம், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், சிபிஎம். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், சிபிஐ மாநகர செயலாளர் ஞானசேகர், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாநகர தலைவர் முபாரக், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், ஐஎன்டியுசி தலைவர் ராஜு, சேவா தள தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் கோபால், மண்டல தலைவர் ஐசன்சில்வா, மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, சிபிஎம்.செயலாளர் ராஜா, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மதியழகன், மீனவரணி செயலாளர் அந்தோணிஸ்டாலின், துணைச்செயலாளர் ஜேசையா, பொறியாளர் அணி செயலாளர் அன்பழகன், தொண்டரணி செயலாளர் ரமேஷ், ஆதிதிராவிட நல அணி செயலாளர் பரமசிவம், சுற்றுசூழல் அணி செயலாளர் ஜெபசிங், மாணவரணி துணைச்செயலாளர்கள் வக்கீல் பாலகுருசாமி, சீனிவாசன், அரசு வக்கீல்கள் மோகன் தாஸ் சாமுவேல், சுபேந்திரன், மாலா தேவி, இலக்கிய அணி துணைச்செயலாளர் நலம் ராஜேந்திரன், மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி தங்கம், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், நிர்மல்ராஜ், ஜெயக்குமார், ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் இசக்கிராஜா, சக்திவேல், கதிரேசன், மாநகர மருத்துவ அணி செயலாளர் அருண்குமார், மாநகர இளைஞர் அணி துணைச்செயலாளர் செல்வின், மீனவரணி துணைச்செயலாளர் ஆர்தர்மச்சாது, பகுதி இளைஞர் அணி செயலாளர் சூர்யா, ரவி, வட்ட செயலாளர்கள் பொன்ராஜ், சாரதி, சிங்கராஜ், நாராயணன், தெய்வேந்திரன், வக்கீல் சதீஷ்குமார், சுரேஷ், மைக்கேல், நவநீதன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், செந்தில்குமார், கருணா, அல்பட், லிங்கராஜா, பிரபாகர்,

தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நல அணி செயலாளர் டிடிசி ராஜேந்திரன், சுற்றுசூழல் அணி செயலாளர் ரவி என்ற பொனபாண்டி, மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் அம்பாசங்கர், மாவட்ட வர்த்தக அணி துணைச்செயலாளர் ரெங்கசாமி, மாணவரணி துணைச்செயலாளர் மாரிச்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின்,  மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், பகுதி செயலாளர் சிவக்குமார், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மற்றும் ஜாகீர் உசேன், ஜான்ராஜ், ராஜசேகர், வெங்கடேஷன், மாயக்கண்ணன், பாலசுப்பிரமணியன், சங்கரசுப்பிரமணியன், அருணாதேவி, மீனா, பியூலா, செல்வக்குமார், பரமசிவன், ராஜகுமாரசாமி, செல்வராஜ், சேவியர், பால்ராஜ், கண்ணன், காளிமுத்து, ராஜாமணி, அதிசயராஜ், ராஜம், மகேந்திரன், சண்முகராஜ், பொன்ராஜ், சிவன், வெற்றி, துரைராஜ், தெய்வேந்திரன், சுரேஷ், ஷாஜகான், சிவகாமி, சுந்தரி, மரிய சேவியர், அபிராமி, செல்லையா, ஜோதிடர் முருகன் தர்மராஜ், ஒன்றிய கவுன்சிலர் நவநீத கிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...