ஷ்யாம் நீயூஸ்
15.02.2022
அதிமுக வேட்பாளர் சேவியரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் துணை மேயரும் பகுதி செயலாளருமான சேவியரை ஆதரரித்து முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் வாக்களர்களிடம் நடந்தே சென்ற வீதிவீதியாக வாக்கு சேகரித்தார். அப்போது கூறுகையில் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை என்னிப்பாருங்கள் குரூஸ்பர்னாந்து பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்து இன்று கொண்டாடப்படுகிறது என்றால் அந்த உத்தரவு பிறப்பித்தது அதிமுக ஆட்சிகாலத்தில் தான் மீனவர்கள் நலன் மட்டுமின்றி அனைவருடைய நலமும் அக்கறையுள்ள கட்சி அதிமுக எளிமையான வேட்பாளரை தேர்ந்தெடுத்து ஆடம்பரம் இல்லாத அரசியலுக்கு வழிவகை செய்ய வேண்டும். உங்களுக்காக உழைத்திட சேவியருக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பிரச்சாரத்தில் பகுதி செயலாளர் முருகன், தலைமை பேச்சாளர் கருணாநிதி, ஜெ பேரவை மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி சேவியர் ராஜ், வட்ட செயலாளர் சுயம்பு, மீனவரணி பகுதி செயலாளர் வினோத், வட்டப்பிரதிநிதிகள் லூர்து ராஜன், சுரேஷ், நிர்வாகிகள் உத்திரஜெயம், கணபதி, முருகையா, ஜேசுராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.