முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொட்டு விஷம் கலந்தாலும் குளம் முழுவதும் விஷமாக மாறிவிடும்! அதிமுக விஷம் போன்றது ஒரு இடத்தில் கூட வெற்றி பெற கூடாது தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி ஆவேசம். !

 ஷ்யாம் நீயூஸ்

09.02.2022

சொட்டு விஷம் கலந்தாலும் குளம் முழுவதும் விஷமாக மாறிவிடும்! அதிமுக விஷம் போன்றது ஒரு இடத்தில் கூட வெற்றி பெற கூடாது தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி ஆவேசம்.!

  தூத்துக்குடி நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சண்முகபுரம் சந்திப்பு பி&டி காலனி பகுதியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட தலைவர் முரளிதரன், வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

       திமுக வேட்பாளர்கள் ரூபவள்ளி, அன்னலட்சுமி, பேபி ஏஞ்சலின், ஜெனிட்டா, ரிட்டா ஆர்தர்மச்சாது, ரெக்ஸின் சூசை, இசக்கிராஜா, கண்ணன், விஜயலட்சுமி, முத்துராஜ், காங்கிரஸ் வேட்பாளர் சந்திரபோஸ், ஆகியோரை அறிமுகப்படுத்தி

     கனிமொழி எம்.பி பேசுகையில் கொரோனா காலக்கட்டத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் ஒன்றினைவோம் வா என்று மக்களை ஓருங்கினைத்து பல்வேறு பணிகளை மேற்கொண்டார். அதே போல் மழை வெள்ளக்காலத்திலும் மக்கள் பணியாற்றினார். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக எந்த பணியையும் முறையாக செய்யவில்லை அதனால் பல பகுதிகளில் வடிகால் வசதி சரியில்லாமல் தண்ணீர் தேங்கி பலர் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் பாதிப்புகள் குறைவாக இருந்தது. விரைவாக போர்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டோம். இதற்கிடையில் முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடிக்கு நேரடியாக வந்து பார்வையிட்டு பல பணிகளை விரைவுப்படுத்தினார். ஆனால் சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமி எங்கள் ஆட்சியில் செய்த சாதனை ஏராளம் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். அவர் ஆட்சியில் தூத்துக்குடிக்கு செய்த சாதனை 13 பேரை சுட்டுக் கொன்றது தான் அந்த சம்பவம் நடைபெற்ற போது கூட இங்கு வந்து பார்த்து ஆறுதல் கூட கூறவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு படிப்புக்கு ஏற்ற பணியும் வழங்கவில்லை திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் படிப்புக்கேற்ற பணிகளை வழங்கியுள்ளோம். மழை காலங்களில் கூட வந்து பார்க்கவில்லை.

      ஆனால் இங்கு களத்திலிருந்து பணியாற்றக்கூடிய அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்ட வேட்பாளர்கள் எப்போதும் உங்களுடன் இருந்து பணியாற்றுபவர்கள் தமிழகத்தில் மதம் மற்றும் பிரிவினைகளுக்கு இடம் கிடையாது. தேச பக்தியை பற்றி பேசுபவர்கள் அருகிலுள்ள மாநிலங்களில் தேசியகொடியை இறக்கிவிட்டு கட்சி கொடியையேற்றுகிறர்கள். இதுதான் தேச பக்தியா அரசுக்கு பாலம் போல் இருப்பதற்கும் உங்களுக்காக குரல் கொடுக்க உங்கள் பகுதி பிரச்சனைகளை முழுமையாக தீர்க்க இந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் குளத்தில் ஓரு சொட்டு விஷம் கலந்தாலும் குளம் முழுவதும் விஷமாக மாறிவிடும் அதுபோல் அதிமுக ஓரு இடத்தில் கூட வெற்றி பெற கூடாது என்று பேசினார்.

      பிரச்சாரத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினரும் வேட்பாளருமான ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் ரவீந்திரன், மீனவரணி செயலாளர் அந்தோணிஸ்டாலின், துணைச்செயலாளர் ஜேசையா, இளைஞர் அணி செயலாளர் மதியழகன், தொண்டரணி செயலாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, செயற்குழு உறுப்பினர் ராஜா, மாணவரணி துணைச்செயலாளர் சீனிவாசன், அரசு வக்கீல் மோகன்தாஸ், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், மாநில மதிமுக மீனவரணி செயலாளர் நக்கீரன், இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், மாநகர செயலாளர் முருகபூபதி, இலக்கிய அணி மகாராஜன், அனல் செல்வராஜ், விநாயகமூர்த்தி, காங்கிரஸ் ஐஎன்டியுசி தலைவர் ராஜு, மாநகர தொண்டரணி செயலாளர் முருகஇசக்கி, மீனவரணி துணைச்செயலாளர் ஆர்தர்மச்சாது, வட்டச்செயலாளர்கள் ஜெயசிங், பொன்ராஜ், ஏசுவடியான், டென்சிங், மாவட்ட தொமுச செயலாளர் மரியதாஸ், தலைமை பேச்சாளர்கள் சரத்பாலா, தமிழ்பிரியன், மாநகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பிரபு, காங்கிரஸ் தலைவர் வெள்ளச்சாமி, பகுதி திமுக இளைஞர் அணி செயலாளர்கள் ரவி, சூர்யா, பினோ, கருணா, உத்திரபாண்டி, தேன்ராஜ், சற்குணம், மதியழகன், மகேஸ்வரசிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...