முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி 60 வார்டுகளிலும் திமுக உள்ளிட்ட கூட்டணி வெற்றி பெற வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தனலட்சுமி வெற்றிக்கு உழைக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்

 ஷ்யாம் நீயூஸ்

11.02.2022

தூத்துக்குடி 60 வார்டுகளிலும் திமுக உள்ளிட்ட கூட்டணி  வெற்றி பெற வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தனலட்சுமி வெற்றிக்கு உழைக்க வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்

  தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலை யொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 23வது வார்டு ஓதுக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி அப்பகுதியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்திற்கு திமுக வட்ட செயலாளர் சேகர் தலைமை வகித்தார். திமுக பிரதிநிதிகள் அனந்தப்பன், சங்கர், ராமகிருஷ்ணன், சீதாராமன், காங்கிரஸ் வார்டு தலைவர் மகாலிங்கம், பெட்டின், விமோலியன், அந்தோணி, டைசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தனலட்சுமியை ஆதரித்து வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் மக்களுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் உழைக்கின்ற இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்களை நாம் நிறுத்தியுள்ளோம் இப்பகுதியில் கடந்த காலத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்பை விட திமுக ஆட்சி அமைந்த பின்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டதால் பாதிப்பு சற்று குறைவாக இருந்தது. இனி வரும் காலங்களில் அதுபோன்ற நிலை வராது இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் மழைகாலம் மட்டுமின்றி பொதுமக்களுக்காக நல்ல முறையில் பணியாற்றி வருகின்றார். அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருந்ததை மக்களுக்கான திட்டங்கள் செயல்பாடுகள் முழுமையாக உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் சென்றடைய வேண்டும் என்று கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை அறிவித்துள்ளார். ஆளும் கட்சிக்கு இணக்கமான உறுப்பினர் தேர்வு செய்யப்படுவதின் மூலம் நிர்வாகமும் நல்ல முறையில் நடைபெறும் மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கும் 60 வார்டுகளிலும் வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க வேண்டும் அதற்கு அனைவரும் ஓற்றுமையாக உழைக்க வேண்டும். கதிர்அருவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் சண்முகம் உள்பட பலர் பேசினார்கள்.

பிரச்சாரத்;தில் திமுக பொதுக்குழு உறுப்பினரும் வேட்பாளருமான ஜெகன் பெரியசாமி, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் மாடசாமி, பொருளாளர் சுப்பிரமணியன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மண்டலத்தலைவர் ஐசன்சில்வா, ஐஎன்டியுசி தொழிறசங்க தலைவர் ராஜு, அனைத்திந்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வக்கீல் சந்தனசேகர், திமுக பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், மாநகர வர்த்தக அணி துணைச்செயலாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், பகுதி இளைஞர் அணி செயலாளர் சூர்யா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...