முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கீதாஜீவன் வாக்கு சேகரித்தார்.

 ஷ்யாம் நீயூஸ்

15.02.2022

தூத்துக்குடியில் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கீதாஜீவன் வாக்கு சேகரித்தார்

  தூத்துக்குடி நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வைதேகி, ராஜேந்திரன், ராமகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் எலிசபெத்ராஜன், கம்யூனிஸ்ட் வேட்பாளர் முத்துமாரி, ஆகியோர்களை அறிமுகப்படுத்தி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் 1லட்சம் கோடி மதீப்பில் புதிய தொழிற்சாலை ஓப்பந்தங்கள் முதலீடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் மூலம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வேலையற்றோர் பயன்பெறுவார்கள் தமிழகத்தில் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு மட்டும் தான் என்ற சட்டத்தின் மூலம் சாதனை படைத்துள்ளார் முதல்வர். ஆட்சியில் இருக்கும் போது எத்தனை திட்டங்கள் சாதனைகள் நடைபெற்றுள்ளது. என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த பணி தொடர்வதற்கு உள்ளாட்சியில் பொதுமக்கள் அனைவரும் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து நல்ல நிர்வாகம் அமைந்திட மாநகராட்சி மேயரை திமுக கைப்பற்ற வேண்டும். அதற்கு உங்கள் பகுதியில் போட்டியிடும் மாமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்த பணிகளுக்கு பின்பு அதிமுக ஆட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை. விட்ட பணிகளையும் தொட்ட பணிகளையும் தொடர்ந்து செய்திட அனைவரும் வாக்களிக்க வேண்டும் மாநகர பகுதியில் கால்வாய் இல்லாத இடங்களுக்கு கழிவுநீர் எடுப்பதற்கு எம்.பி நிதி எம்.எல்ஏ நிதியிலிருந்து தலா 2 கழிவுநீர் எடுக்கும் லாரியை வாங்கப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தது மட்டுமின்றி பல்வேறு நல்ல திட்டங்களை செய்துள்ளனர். குறிப்பாக கொரோன உதவித்தொகை 4ஆயிரம், பால் விலை 3 குறைப்பு, பெட்ரோல் விலை 3 குறைப்பு என பல நடந்துள்ளன. தொடர்ந்து இதுபோன்று பல பணிகள் நடைபெறுவதற்கு திமுக வெற்றி பெற வேண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி குட்டையில் மீன்பிடிக்க நினைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். எந்த சலசலப்புக்கும் திமுக அஞ்சாது எப்போதும் போல் என்னை நீங்கள் எந்த குறைகளாகவும் இருந்தாலும் தொடர்பு கொண்டு பேசலாம் என்றார்.

பிரச்சாரத்தில் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ராஜா, மாநில மதிமுக மீனவரணி செயலாளர் நக்கீரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் முரளிதரன், மாநகர மதிமுக செயலாளர் முருகபூபதி, திமுக வட்டச்செயலாளர்கள் சாரதி, முக்கையா,  சுரேஷ், நவநீதன், வட்டப்பிரதிநிதிகள் சுப்பையா, புதுராஜா, இசக்கி, செந்தமிழ்செல்வன், பாபு, ராம்மோகன், முத்துக்குமார், துணைச்செயலாளர்கள் பண்டாரசாமி நயினார், சப்பாணிமுத்து, பொருளாளர் மாடசாமி, இளைஞர் அணி செயலாளர் கணேஷ்குமார், துணைச்செயலாளர் ரகுபதி, ஆனந்தகுமார், குமார், ஜேசுபாலன், செல்வேந்திரன், மகேஸ்வரசிங், வக்கீல் அணி ரூபராஜா, மாநகர மருத்துவ அணி செயலாளர் அருண்குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட மதிமுக இளைஞர் அணி துணைச்செயலாளர் சரவணபெருமாள், சிபிஐ சேர்ந்த பலவேசம், பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள் பிரசன்னா, செந்தில்குமார், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். பிரச்சாரத்தின் போது கார்கில் போரில் உயிரிழந்த அருணாசலம் நினைவு ஸ்துபியில் உள்ள அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...