முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் 60 வது வார்டில் நடைபெற்றது

 ஷ்யாம் நீயூஸ்

08.02.2022

தூத்துக்குடியில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் 60 வது வார்டில் நடைபெற்றது!

தூத்துக்குடி நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக கூட்டணி 60வது வார்டு வேட்பாளர் வக்கீல் பாலகுருசாமியை ஆதரித்து கோயில்பிள்ளைநகரில் நடைபெற்ற அறிமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வட்டச்செயலாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார். வேட்பாளர் வக்கீல் பாலகுருசாமி வரவேற்புரையாற்றினார். வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தலின் போது இந்த பகுதியில் முழுமையாக தேர்தல் பணி ஆற்றிய பாலகுருசாமி தான் இந்த பகுதி வேட்பாளராக உள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் தான் அனைத்து பகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்றடையும் என்ற அடிப்படையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டின்பிஎஸ்சி, சீருடை பணியாளர்கள், தேர்வு தமிழில் எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்று உத்தரவிட்டு கடந்த காலங்களில் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு அளிக்கப்பட்ட வேலை வாய்ப்புகளை தமிழகத்தில் தமிழ் மூலம் தேர்வு செய்யப்பட்டு தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற நிலையை உருவாக்கி கொடுத்து தமிழர்களுக்காகவும் தமிழ் நலனுக்காகவும் ஞாயிற்றுகிழமையிலும் கோட்டைக்கு வந்து முதலமைச்சர் பணியாற்றுகிறார். 10 ஆண்டுகளாக எதையும் ஓழுங்காக செய்யாத அதிமுக அரசுக்கு பாடம் புகட்டிட உள்ளாட்சியில் அரசுடன் இணைந்து பணியாற்ற நல்ல நேர்மையான நிர்வாகம் அமைய வேண்டும். அதற்கு நமது திமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். ஓரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெற கூடாது என்ற இலக்கோடு அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றார்.

      மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், ஐஎன்டியுசி தலைவர் ராஜு, அம்பேத்கர் யூனியன் தலைவர் முருகன், பார்வர்ட் ப்ளாக் அமைப்பை சேர்ந்த நடராஜன், மாரிமுத்து, மருதபாண்டியன், சம்மேளன அமைப்பை சோந்த முத்துக்குமார் ராஜேந்திரன், கோ.பிள்ளைநகர் அபிவிருத்தி சங்கத்தை சேர்ந்த காட்வின், சிவக்குமார், வீராஜான், செந்தில்குமார், மதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த அனல் செல்வராஜ், கார்த்திகேயன், இலக்கிய அணி மகாராஜன், மதிமுக மாணவரணி துணைச்செயலாளர் சரவணபெருமாள், வட்டச்செயலாளர் விநாயகமூர்த்தி, பிரம்மநாயகம், ஐஎன்டியுசி சர்தார், திமுக மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அனல்மின்நிலைய கூட்டுறவு சங்க தலைவர் துரை, பொறியாளர் அணிசெயலாளர் முத்தையாபுரம் பகுதி தேர்தல் பொறுப்பாளர் அன்பழகன், துணைச்செயலாளர் சின்னத்துரை, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், முருகராஜ், திமுக தொமுச தொழிற்சங்க நிர்வாகிகள் ஜான் பிரான்சிஸ், தமிழ்ச்செல்வன், துரைபாண்டி, நம்பிராஜ், கந்தன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர ஆதிதிராவிட நல அணி துணைச்செயலாளர் பால்ராஜ், பகுதி இளைஞர் அணி செயலாளர் ஜார்ஜ்புஷ், முத்தையாபுரம் பகுதி பிரதிநிதிகள் அனல் சக்திவேல், ராபின், முத்தையாபுரம் பகுதி செயலாளர் மேகநாதன், மாவட்ட ஆதிதிராவிட நல அணி துணை செயலாளர் நலம் ராஜேந்திரன், மற்றும் ஆரோக்கியசாமி உள்பட பல்வேறு அணியை சார்ந்த நிர்வாகிகள் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...