முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதல்வரை ஒருமையில் பேசிய சண்முகநாதன் லெப்ட் அண்ட் ரைட் விட்ட அமைச்சர் கீதா ஜீவன்

 ஷ்யாம் நீயூஸ்

16.02.2022

முதல்வரை ஒருமையில் பேசிய சண்முகநாதன் லெப்ட் அண்ட் ரைட் விட்ட அமைச்சர் கீதா ஜீவன்!

  தூத்துக்குடி வரும் 19 ஆம் தேதி நகர் மன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது  வெற்றி அடைந்தே தீரவேண்டும் என்று திவிரமாக இரு கட்சிகளும் மக்களிடம் வாக்குகளை கேட்டு வருகின்றனர் நேற்று மாலை 38வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் அதிமுக வேட்பாளர் சந்திரா செல்லப்பாவிற்க்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார் அப்போது பேசும்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை பிரச்சார கூட்டங்களில் ஒருமையில் பேசினார் (அதுபோல அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது 2021 சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய தூத்துக்குடி வந்த முன்னாள் முதல்வர் பழனிச்சாமியின் கூட்டத்தின் போதும் அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் மிகக்கடுமையாக கலைஞர் கருணாநிதியும் ஸ்டாலினையும் ஒருமையில் பேசி வந்தார் ) நேற்று கூட்டத்தில்  ஸ்டாலின் மகன் ஸ்டாலின் என்று உதயநிதி பெயர் தெரியாமல் பலமுறை உளறினார்.  சிறுது நேரத்தில் அதே இடத்திற்கு திமுக மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்  மும்தாஜுக்கு ஏணி சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு கேட்டு அமைச்சர் கீதா ஜீவன்   வந்தார். அதிமு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் பேசியதை கேள்விப்பட்ட கீதாஜீவன் அதே பாணியில் பதிலளித்தார். அரசியல் நாகரிகம் என்று தெரியாத கட்சியில் இருந்து வந்த உனக்கு நாகரீகமாக பேச உனக்கு தெரியாது முதல்வரை ஒருமையில் பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது. 25 ரூபாய் விளக்குமாற 200 கொடுத்து வாங்கி  ஊழல் செஞ்ச அதிமுக வில் இருந்து வந்த உனக்கு என்ன தகுதி இருக்கு நல்ல  எரிகின்ற டியூப் லைட்டை எடுத்து விட்டு எல்இடி லைட் என்று போலி லைட்டைப் பொருத்தி ஊழல் செஞ்ச  உனக்கு என்ன தகுதி இருக்கு திமுக குடும்ப கட்சி என்று சொல்லி வரும் நீ பெருங்குளத்தில் உன் மகளையும தூத்துக்குடியில் உன் மகனையும் பதவியில் உட்கார வைக்க அதிமுக சார்பில் போட்டியிட வைத்து இருக்கிறாயே உனக்கு என்ன தகுதி இருக்கு தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலைகளை தூத்துக்குடி ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்காமல் வெளிமாவட்டத்தில் உள்ள பழனிச்சாமியின் உறவினருக்கு கொடுத்த உன் கட்சிக்கும் உனக்கும் என்ன தகுதி இருக்கு விவசாய சட்டம் நீட் சட்டம் என அனைத்துக்கும் கையெழுத்து போட்டுவிட்டு வெட்கமில்லாமல் மக்களிடம் ஓட்டு கேட்க வருகிறிர்களே உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்று பதில் தாக்குதல் நடத்தினார்.

காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சண்முகம் பேசும்போது படிப்பு கல்வியறிவு என்பது தெரியாத கட்சியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி கம்பராமாயணத்தை எழுதிய சேக்கிழார் என்ற அளவுக்கு அறிவுள்ளவர் உள்ள கட்சியில் இருக்கும் சண்முகநாதனிடம் நாகரீகமான வார்த்தைகளை எதிர்பார்க்கமுடியாது அவர்களை பொருட்படுத்தாமல் தூத்துக்குடி நகரின் வளர்ச்சிக்கு பாடுபடும் திமுக  மதசர்பற்ற கூட்டணி வேட்பாளர் போட்டியிடும் ஏணி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...