முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி 39வது வார்டு திமுக வேட்பாளர் சுரேஷ்குமார் உதயசூரியன் சின்னத்திற்கு வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார்

 ஷ்யாம் நீயூஸ்

15.02.2022

தூத்துக்குடி 39வது வார்டு திமுக வேட்பாளர் சுரேஷ்குமார் உதயசூரியன் சின்னத்திற்கு வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார்!

தூத்துக்குடி உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. திமுக வேட்பாளராக 39வது வார்டில் சுரேஷ்குமார் போட்டியிடுகிறார். ரெங்கநாதபுரம் கிழக்கு மேலரதவீதி, வடக்குரதவீதி தொடர்ச்சி, பத்திரகாளியம்மன் கோவில் தெரு, ராஜாபிள்ளை லேன், வரதராஜபுரம் வடக்கு சம்மந்தமூர்த்தி தெரு, கிழக்கு ரதவீதி, பெருமாள் கோவில் தெரு, தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, உள்ளிட்ட வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு கடந்த பல வருடங்களாக பொதுமக்களுக்கு தேவையான  சான்றிதழ்,  என பல்வேறு பொது பணிகளை பகுதி மக்களுக்காக செய்து கொண்டு வருகிறார். மதசார்பற்று பேதமின்றி முடிந்தவரை அனைத்து மக்களுக்கும்  உதவி செய்து  மனிதநேயத்தை வளர்த்து மக்களோடு மக்களாக வாழ்ந்து வருபவர் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடித்தண்ணீர், சாலை வசதி, கால்வாய் வசதி, மின்விளக்கு போன்ற குறைபாடுகளை தெரிவிக்கும் மக்களுக்கு அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வரை தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து அந்த குறைகளை தீர்ப்பதற்கும், பகுதி மக்களின் மேம்பாட்டிற்காக தன்னையே முழுமையாக அர்பணித்து கொண்டு பணியாற்றி வரும் அவர் ஏற்கனவே மாநகராட்சியில் 3 முறை மாமன்ற உறுப்பினராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அனைவரையும் அரவணைத்து செல்லும் குணமுடைய இவர் பகுதிக்குட்பட்ட பகுதியில் அலுவலகம் அமைத்து மக்கள் பணியாற்றுவது மட்டுமின்றி தான் இல்லாத நேரங்களில் தனது அலுவலகப் பணியாளர்கள் மூலம் மக்களின் குறைகளையும் கேட்டறிந்து தீர்த்து வைக்கும் குணமுடையவர். எல்லோரும் எளிதில் சந்திக்கக்கூடியவர். அரசியலிலும் வாழ்க்கையை தொடங்கி பணியாற்றி வரும் சுரேஷ்குமார் வாக்களர்களிடம் கூறுகையில் என்னை உதயசூரியன் சின்னத்தில் தேர்ந்தெடுத்து வெற்றி பெற செய்தால் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் முதன்மை வார்டாக மாற்றுவேன். உங்களுக்கு பணி செய்வதற்கு ஊழியனாக களத்தில் போட்டியிடுகிறேன். தேர்தல் நேரத்தில் மற்றவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் மறைந்து போகும். நான் சொல்லும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கொரோனா காலக்கட்டத்தில் பகுதி மக்களுக்கு செய்த உதவிகளையும், நன்மைகளையும் எண்ணிப்பார்த்து எளியவனாகிய எனக்கு இனிமையாக பழகும் உங்கள் வீட்டு வேலைக்காரனாக பணியாற்றுவதற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். உங்களுக்காக உழைப்பேன். உண்மையாக இருப்பேன் என்று அனைத்து பகுதிகளிலும் வாக்கு சேகரித்து வரும் சுரேஷ்குமார் வாக்களரிடம் வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்டு வருகிறார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...