முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

த வெ க தலைவர் விஜய் மீது அவதூறு செய்தி புகார்! தூத்துக்குடி சைபர் க்ரைம் போலிஸ் விசாரணை !

ஷ்யாம் நீயூஸ் 09.12.2024  த வெ க தலைவர் விஜய் மீது அவதூறு செய்தி புகார்!  தூத்துக்குடி சைபர் க்ரைம் போலிஸ் விசாரணை ! தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்  குறித்து தனியார் youtube சேனலில் (MY INDIA 24x7) விஜய் விபச்சார அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை விமர்சிக்காமல் திமுகவை மட்டும் விமர்சிக்க வேண்டும் என அவருக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பாஜகவின் மொத்த ஏஜெண்டாக விஜய் மாறி உள்ளார். லண்டனில் வைத்து அண்ணாமலையை சந்தித்து கூட்டணி குறித்து பேசி உள்ளார் என்றும் உள்நோக்கத்தோடு சமூக வலைதளங்களில் இந்த சேனலால் அவதூறு பரப்பப்பட்டுள்ளதாக த.வெ.க நிர்வாகிகள் குற்றம் சாட்டி வந்தனர். வதந்தியை பரப்பிய இந்த தனியார் youtube சேனல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினராகவும், சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான எஸ்.எம்.ஏ. காந்திமதிநாதன்  காவல்துறை இயக்குனர், நெல்லை சரக டிஐஜி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அனுப்பியிருந்தார். இதன...

தூத்துக்குடியில் பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா

 ஷ்யாம் நீயூஸ் 08.12.2024 தூத்துக்குடியில் பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா! டிசம்பர் மாதம் வந்ததும் நினைவில் வருவது கிறிஸ்து பிறப்பு விழா தான். அவ்வகையில் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைவராலும் பல்வேறு நிலைகளில் கிறிஸ்து பிறப்பு விழா டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் இவ்வாண்டும் கிறிஸ்துமஸ் விழா கச்சனா விளை குழந்தைகள் காப்பகத்தில் (06-12-2024) நடைபெற்றது. இறைவேண்டலுடன் நிகழ்ச்சி துவங்க, பல்சமய உரையாடல் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மைக்கிலின் மேரி வரவேற்க, பணிக்குழுவின் செயலர் அருட்தந்தை பென்சிகர் லூசன் தலைமை தாங்கினார். காப்பகத்து குழந்தைகள் மகிழும்படியான நடனங்கள், பாடல்கள் நாடகங்கள் என கலை நிகழ்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கி, அனைவருக்கும் உணவு பறிமாறப்பட்டு விழா நிறைவுற்றது.சுமார் 75 குழந்தைகள் உள்பட கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இல்லத்து அருட் சகோதரிகள் நன்றி கூறினர். விழாவிற்கான ஏற்...

யானைப்பாகனுக்கு ஒரு நீதி! டாஸ்மாக் ஊழியருக்கு ஒரு நீதியா?!!!

 ஷ்யாம் நீயூஸ் 07.12.2024 யானைப்பாகனுக்கு ஒரு நீதி! டாஸ்மாக் ஊழியருக்கு ஒரு நீதியா?!!! தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உதவி  யானைப்பாகன் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தன் உறவினரை யானை இருக்கும் இடத்திற்கு 18.11.2024 அன்று அழைத்து சென்று செல்பி எடுத்தபோது யானை தாக்கி இருவரும் உயிரிழந்தனர். பாகனின் குடும்ப வாழ்வாதார சூழ்நிலையை கருதி அரசு நிதியும் வழங்கி யானைப்பாகன் மனைவிக்கு அரசு பணி நியமன ஆணையும் இன்று (07.12.024) வழங்கியுள்ளது.ஆனால் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தின் போது விழுப்புரம் மாவட்ட மேலாளர் டாஸ்மாக் கடைகளில் தண்ணீர் புகுந்துள்ளதா சேதாரம் ஏதும் மேற்பட்டு உள்ளதா என்று கடை ஊழியர்களை கடைக்கு செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.  அதை செயல்படுத்துவதற்காக 01.12.2024 அன்று சென்ற  டாஸ்மாக் கடை எண் 11405 ஊழியர் சக்திவேல் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு அவர் குடும்பத்திற்கு நிதி கேட்டும் அவரது குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு குடும்பத்தில் ஒருவருக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என்றும் டாஸ்மாக் சங்கங்கள் கோர...

தூத்துக்குடி டாஸ்மாக் பணியாளர் சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!

 ஷ்யாம் நீயூஸ் 06.11.2024 தூத்துக்குடி டாஸ்மாக் பணியாளர் சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!  தூத்துக்குடியில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி போல்டன் புரத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பணியின்போது  வெள்ளத்தில் மரணம் அடைந்த ஊழியர் சக்திவேல் மரணத்துக்கு நீதி கேட்டும். தமிழக அரசு சார்பில் அவருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டியும் அவரது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க கோரியும், வருங்காலங்களில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க அரசு முழு பாதுகாப்பு வழங்க கோரியும் 11. 12. 2024 அன்று சிதம்பரம் நகர் பஸ் ஸ்டாப் அருகில் காலை 10 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி டாஸ்மாக் பணியாளர்கள் அனைத்து சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி வருவாய் துறையினர் பணி புறக்கணிப்பு போராட்டம்! தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

 ஷ்யாம் நீயூஸ் 26.11.2024 தூத்துக்குடி வருவாய் துறையினர் பணி புறக்கணிப்பு போராட்டம்! தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்றாம் கட்ட போராட்டமாக 26 நவம்பர் முதல் காத்திருப்பு மற்றும் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இளநிலை முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசானையை உடன் வெளியிட வேண்டும் .மூன்று ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். முதல்நிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்கு நிலையை கலைந்து ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக தெளிவுரைகளை வருவாய் நிர்வாக ஆணையர் உடன் வெளியிட வேண்டும் கருணை அடிப்படையிலான பணி நியமன உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்திட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும். இரண்டு ஆண்டுகள...

தூத்துக்குடி பாதிரியாரை தாக்கியதாக மாஜி அதிமுக அமைச்சர் இருவர் மீது வாழக்கு.பாதிக்கபட்டவருக்கு அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல்.

 ஷ்யாம் நீயூஸ் 15.10.2024 தூத்துக்குடி பாதிரியாரை தாக்கியதாக மாஜி அதிமுக அமைச்சர் இருவர் மீது வாழக்கு.பாதிக்கபட்டவருக்கு அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல். முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோர் இணைந்து திருச்செந்தூரில் இருந்து  தூத்துக்குடியில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவசரமாக வரும் பொழுது  அவர்களது காருக்கு இடையூறாக வழி கொடுக்காமல் வந்ததாக கூறி ஆறுமுகநேரி சிஎஸ்ஐ சர்ச் பாதிரியார் ஜெகன் என்பவரை சரமாரியாக இரண்டு முன்னாள் அமைச்சர்களின்  ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர் . படுகாயம் அடைந்த பாதிரியார் ஜெகன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையை சேர்ந்த நடேசன் என்பவரது மகன் ஜெகன் இவர் ஆறுமுகநேரி மடத்துவிளை சிஎஸ்ஐ ஆலய பாதிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஏவிஎம் மருத்துவமனையில் உடல் குறைவால் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்ப்பதற்காக தனது...

20 சதவீதம் போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

 ஷ்யாம் நீயூஸ் 14.10.2024 20 சதவீதம் போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. மிகை ஊதியம், கருணைத் தொகையை கூடுதலாக வழங்க கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் ரூ.52 ஆயிரம் கோடி வரி வருவாயாக ஈட்டி தரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.16,800 மட்டுமே மிகை ஊதியம் கிடைக்கும் என்பதை கருத்தில்கொண்டு, மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை அறிவிப்பை மறுபரிசீலனை செய்து கூடுதல் மிகை ஊதியம் வழங்கவேண்டும் என டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் மற்றும் கருணைத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ம் ஆண்டின்படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரம் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி மாதாந்திர சம்பள உச்சவரம்பான ரூ.21 ஆயிரம் என்பதனை தளர்த்தி அனைத்து சி மற்றும் டி பிரிவு பணியாளர்க...

தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னஸ் அழைப்பு!

 ஷ்யாம் நீயூஸ் 25.09.2024 தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் அழைப்பு! தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று செப் -23  திரேஸ்புரம் பகுதி  தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வில் கேக் வெட்டி கொண்டாடினார். அனைத்து மக்களையும் மாநாட்டிற்கு  அழைக்கும் விதமாக ஆட்டோகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடங்கினார்.மேலும் பொதுமக்களுக்கு தாகத்தை தணிக்கும் பொருட்டு மோர் வழங்கி சிறப்பித்தார். தூத்துக்குடி தெப்பக்குளம் அருகில் உள்ள truth full எனும் மனநலம் குன்றிய மற்றும் குழந்தைகள் காப்பகத்தில்  மதிய உணவு வழங்கப்பட்டது..இந்நிகழ்வு அனைத்தையும் திரேஸ்புரம் தமிழக வெற்றி கழக தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

தூத்துக்குடி பிஜேபினர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்

 ஷ்யாம் நீயூஸ் 25.08.2025 தூத்துக்குடி பிஜேபினர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்   தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையையேற்று பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர்.    இந்நிலையில் தூத்துக்குடி வடக்குமாவட்ட பிஜேபி கல்வியாளர் பிாிவு செயலாளர் கல்யாணசுந்தரம் மகளிர் அணியை சேர்ந்த மதிவாணி உள்பட 30க்கும் மேற்பட்ட பிஜேபியை சேர்ந்தவர்கள் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.     பின்னர் சால்வை அணிவித்து வாழ்த்து தொிவித்து கூறுகையில் திராவிட முன்னேற்றக்கழகம் 75 ஆண்டு பவள விழாவை கொண்டாடிய இயக்கமாகும். இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியார் தலைமையேற்ற நீங்கள் எல்லாம் கட்சியில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் ஏராளம் உங்கள் பகுதிக்கும் நீங்கள் வைக்கும் கோாிக்கைகள் அனைத்தும் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. எதிர்வரும் 2026ல...

26.09.24 அன்று தூத்துக்குடி டாஸ்மாக் கடைகள் அடைப்பு!

 ஷ்யாம் நீயூஸ் 24.09.2024 26.09.24 அன்று தூத்துக்குடி டாஸ்மாக் கடைகள் அடைப்பு! வரும் 26 9 24 அன்று வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட கடைகள் மூட தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவுக்கிணங்க தூத்துக்குடி மாவட்டம் மேலாளர் அய்யப்பன் கீழ்கண்ட 11 கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் டிப்டாப் போலி பெண் IAS மற்றும் பாஜக பிரமுகர் கைது.

 ஷ்யாம் நீயூஸ் 19.09.2024 தூத்துக்குடியில் டிப்டாப் போலி பெண் IAS மற்றும் பாஜக பிரமுகர் கைது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 18.09.2024 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ் ஆக கல்வித் துறையில் செயலாளராக பணிபுரிவதாக போலியாக கூறி ஏமாற்ற  முயன்ற நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மங்கையர்கரசி என்ற பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த  நெல்லை மாவட்ட பாஜக இலக்கிய அணி தலைவர் ரூபி நாத் ஆகிய இருவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் சிப்காட் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் பொதுமக்களின் புகார்கள் குறித்த குறைதீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறும் அந்த வகையில் 18.09.24 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது  இந்த கூட்டத்திற்கு டிப் டாப்பா...

தூத்துக்குடி மாநகராட்சியில் கிழக்கு மண்டல பொதுமக்களில் குறைகளை கேட்டறிந்தார் மேயர் ஜெகன் பெரியசாமி!

 ஷ்யாம் நீயூஸ் 18.09.2024 தூத்துக்குடி மாநகராட்சியில் கிழக்கு மண்டல பொதுமக்களில் குறைகளை கேட்டறிந்தார் மேயர் ஜெகன் பெரியசாமி! தூத்துக்குடி மாநகராட்சி பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும்  மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமி  தலைமையில் அலுவலர்கள் மண்டல வாரியாக முகாம்களில் கலந்து  கொண்டு பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக  கிழக்கு மண்டலத்தில் இன்று(18.09.2024) முகாம் நடைபெற்றது     கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட ( வார்டு எண்கள்  21முதல் 29,38 முதல் 41,46,47)   ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது  முகாமில் சொத்து வரி நிர்ணயம், சொத்துரி பெயர் மாற்றம், திருத்தங்கள், தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை, ...

தூத்துக்குடி:இமானுவேல் சேகரன் நினைவு நாள் திருவுருவப்படத்திற்கு கனிமொழி எம்.பி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 ஷ்யாம் நீயூஸ் 11.09.2024 தூத்துக்குடி:இமானுவேல் சேகரன் நினைவு நாள் திருவுருவப்படத்திற்கு  கனிமொழி எம்.பி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தியாகி இம்மானுவேல் சேகரனின் 67வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்படுகிறது. தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் அலங்கரிக்கப்பட்ட இமானுவேல் சேகரன் திரு உருவப்படத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழிஎம்.பி, சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை அமைச்சர்  கீதா ஜீவன் ,மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கோரம்பள்ளம் குளத்தில் மூழ்கி புரோட்டா மாஸ்டர் பலி!

 ஷ்யாம் நீயூஸ் 06.09.2024 கோரம்பள்ளம் குளத்தில் மூழ்கி புரோட்டா மாஸ்டர் பலி!  தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற புரோட்டா மாஸ்டர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார் மேல தட்டப்பாறை அம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் பெருமாள்(42) த/ பெ சிவன். இவரது தனது நண்பர்களுடன் கோரம்பள்ளம் குளத்தில் குளித்துள்ளார் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார் தகவல் அறிந்த சிப்காட் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு புதுக்கோட்டை ஆய்வாளர் வனசுந்தரிடம் ஒப்படைத்தனர் உடலை கைப்பற்றிய புதுக்கோட்டை ஆய்வாளர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் . இவருக்கு மனைவி கவிதா பெண் குழந்தை சிவாசினி ஆகியோர் உள்ளனர் . இதுகுறித்து புதுக்கோட்டை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ஷ்யாம் நீயூஸ் 06.08.2024 தூத்துக்குடி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.  தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தில் உள்ள மீனவர்கள்  ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 22 பேர்களை கைது செய்தனர்.  தருவைகுலத்தைச் சார்ந்த அந்தோணி மகாராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படையில் 20.07 2024 மற்றும் அந்தோணி தேன் டெனிலா என்பவருக்கு சொந்தமான விசைப்படையில் 23. 07 .2024 தேதிகளில் மீன் பிடிக்க சென்ற தூத்துக்குடி தருவைகுளத்தைச் சார்ந்த 22 மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 05. 08. 2004 அன்று இரண்டு விசைப்படைகளையும் அதில் உள்ள 22 மீனவர்களையும் கைது செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசும் இணைந்து   22 மீனவர்களையும் படகுகளையும் மீட்டுத் தரும்படி தருவைகுளம் தூயமிக்கேல் ஆழ்கடல் செவுல்வலை  தொழில் புரிவோர் முன்னேற்ற சங்கத்தினர் மனு அளித்தனர்.

தூத்துக்குடி நிலா சீ புட்ஸ் மீன் பதன ஆலையில் அமோனியா வாயு கசிவு 25க்கும் அதிகமாக பெண் ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி!

 ஷ்யாம் நீயூஸ் 20.07.2024 தூத்துக்குடி நிலா சீ புட்ஸ் மீன் பதன ஆலையில் அமோனியா வாயு கசிவு 25க்கும் அதிகமாக பெண் ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி! தூத்துக்குடியில் எட்டையாபுரம் சாலையில் உள்ள நிலா சீ புக்ஸ் என்ற தனியார் மீன் பதன ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் 25க்கும் அதிகமான‌ பெண் ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் அமைந்துள்ளது நிலா சீ புட்ஸ் என்ற தனியார் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்  நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்நிலையில் நேற்று(19.07.2024) இரவு சுமார் 11 மணியளவில் அந்த ஆலையில் அமோனியா கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக மீன் பதனிடும் நிறுவனம் முழுவதும் அமோனியா வாயு பரவியது. இதில் அங்கு பணியில் இருந்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகள...

கோரம்பள்ளம் குளம் உடைப்பு அடைப்பில் ஊழலா?.மீண்டும் தூத்துக்குடியை வெள்ளம் சூழும் அபாயம்!

 ஷ்யாம் நீயூஸ் 06.07.2024 கோரம்பள்ளம் குளம் உடைப்பு அடைப்பில் ஊழலா?.மீண்டும் தூத்துக்குடியை வெள்ளம் சூழும் அபாயம்!  தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் காலான்கரை அருகே  ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் தூத்துக்குடி முழுவதும் வெள்ளத்தில் மிதந்து மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். பலர் தங்கள் உடைமைகளையும் உயிர்களையும் இழந்தனர்.  தற்போது இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வந்துள்ளனர். மீண்டும் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோரம்பள்ளம்  குளத்தில் மீண்டும் உடைப்பு ஏற்படாமல் இருக்க  தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இந்தப் பணி தற்போது இரவோடு இரவாக போதிய வெளிச்சம் இல்லாமல் லாரியின் ஹெட்லைட் வெளிச்சத்தில் முட்டு அளவு நீரில் தண்ணீரை வெளியேற்றாமல் சிமெண்ட் கலவையை கொட்டி கட்டுமான பணி நடைபெறுவதாகவும் இதன் உறுதித் தன்மை நம்ப முடியும் அளவில் இல்லை என்பதாலும் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் மழை காலம் ஆரம்பமா...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் போராட்டம் !

 ஷ்யாம் நீயூஸ் 02.07.2024 தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் போராட்டம் ! தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்கள் இன்று காலை கல்லூரி வாசலில் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் காமராஜ் கல்லூரி நிர்வாகம் அதிக கட்டணம் வசூலித்து கொள்ளையடித்து வருகின்றனர் கல்வித்தந்தை காமராஜரின் பெயரில் கல்லூரி வைத்துக்கொண்டு கல்வியின் பெயரில் கொள்ளை அடித்து வருகின்றனர் என்றும் ஏழை எளிய மாணவர்களில் கல்வி கனவை சிதைத்திடும் கல்வி கட்டணத்தை குறைத்திட வேண்டும் கல்வி  கட்டண உயர்வை அனுமதிக்க மாட்டோம் என்றும் ஸ்டுடென்ட் யூனியன் சிந்தாபாத் முழக்கங்கள் இட்டும் சமூக நீதி பேசும் ஸ்டாலின் அரசு தலையிட்டு கேள்வி கேட்க வேண்டும் என்றும் அதிக கட்டணத்தை தடுத்து நிறுத்தி  குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கும் அதிகம் கட்டண வசூலிக்கப்படுவதாகவும்  ரெகுலர் மற்றும் சுயநிதி கல்லூரி மாணவர்கள் எஸ் எப் ஜ மாணவர் சங்க நிர்வாகிகள் தலமையில்  வாசல...

உயிர் பலி வாங்க காத்திருக்கும் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

 ஷ்யாம் நீயூஸ் 22.06.2024 உயிர் பலி வாங்க காத்திருக்கும் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்? தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் இடிந்து போன சிலாப் சிமெண்ட் துண்டுகள் ஆங்காங்கே சிதறி கீழே விழும் நிலையில் உள்ளது கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் பணிபுரியும் ஊழியர்கள் அப்பகுதியில் பொதுமக்கள் யாரேனும் சென்றால் அவர்கள் தலையில் சிமெண்ட் கட்டிகள் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. தினமும் ஏராளமான பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலிருந்து ஆட்சியரை சந்திக்க வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.  திங்கட்கிழமைகளில் அதிகமான பொதுமக்கள் வந்து செல்வதும் உண்டு இந்நிலையில் பொதுமக்கள் யாரேனும் தலையில் இந்த சிலாப் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் தோட்ட தொழிலாளர்கள் அப்பகுதியில் செல்லும்போது அவர்கள் தலையில் விழுந்து விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது ஆகவே மாவட்ட நிர்வாகம் விபத்து ஏற்படுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் ...

ரூ.4 கோடி பணம் பறிமுதல் எதிரொலி: நயினார் நாகேந்திரன் ஓட்டல், உறவினர் வீட்டில் சோதனை

 ஷ்யாம் நீயூஸ் 08.04.2024 ரூ.4 கோடி பணம் பறிமுதல் எதிரொலி: நயினார் நாகேந்திரன் ஓட்டல், உறவினர் வீட்டில் சோதனை சென்னையில் இருந்து நெல்லை செல்லும் ரெயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்லப்படுவதாக பறக்கும் படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இந்த பணம் நெல்லை தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக எடுத்துச் செல்லப்படுவதாகவும் தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து அந்த பணத்தை பிடிக்க பறக்கும் படையினர் அதிரடியாக களம் இறங்கினார்கள். நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்வதற்காக தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயிலை மடக்கி ரூ.4 கோடி பணத்தை கைப்பற்ற பறக்கும் படையினர் முடிவு செய்தனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.40 மணி அளவில் தாம்பரம் ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அங்கு ரெயிலை நிறுத்தி சோதனை செய்வதற்காக பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் தயார் நிலையில் இருந்தனர். பறக்கும் படை அதிகாரியான செந்தில்பாலமணி, துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, உதவி கமிஷனர் நெல்சன் மற்றும் போலீஸ் படையினர் அதிரடியாக ...

தூத்துக்குடியில் வெள்ள நீர் வடியாததால் நோய் தொற்று பரவும் அபாயம்.

 ஷ்யாம் நீயூஸ் 01.04.2024 தூத்துக்குடியில் வெள்ள நீர் வடியாததால் நோய் தொற்று பரவும் அபாயம். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு பாரதி நகர் 5வது தெருவில் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ள நீர் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதால் சாக்கடையாக தேங்கி காட்சியளிக்கிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 17 பாரதிநகர் ஐந்தாவது தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான முத்துகிருஷ்ணன் பிள்ளை நினைவு பூங்கா உள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு இந்த பூங்காவில் இன்னும் வெளியேறாமல் தேங்கியுள்ளதால் கொசுக்கள் அதிகம் உற்பத்தி செய்யும் இடமாக உள்ளது.இதனால் அப்பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் மலேரியா போன்ற நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர். மழை பாதிப்பு முடிந்து பல  மாதங்கள் ஆகியும் தேங்கிய நீரை அகற்றாமல் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதால் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக தற்போது மாறி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி மேயருக்கு மனு ...

தூத்துக்குடியில் கிறிஸ்துவ ஆலயத்தில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளரால் பரபரப்பு!

 ஷ்யாம் நீயூஸ் 24.03.2024 தூத்துக்குடியில் கிறிஸ்துவ ஆலயத்தில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளரால் பரபரப்பு!  இன்று குருத்தோலை ஞாயிறு தினமாகும் தூத்துக்குடி பாராளுமன்ற அதிமுக வேட்பாளரான எஸ் ஆர் சிவசாமி வேலுமணி தூத்துக்குடி சிதம்பரம் நகர் சர்ச்சில் உள்ள ஆலயத்தில் பலிபீடம் வரை சென்று வாக்கு சேகரிப்பதில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு உட்பட்ட அபிஷேகநாதர் ஆலயம் சிதம்பரம் நகரில் உள்ளது இன்று குருத்தோலை ஞாயிறு என்பதால் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் தங்கள் வழிபாட்டுக்காக வந்திருந்தனர் இந்த நிலையில் அபிஷேகநாதர் ஆலய திருமண்டல பெருமன்ற உறுப்பினரும் எஸ் டி கே அணியின் தளபதியுமான இரா. ஹென்றியின் உறவினருமான செயிண்ட் ரவிராஜன் அதிமுக தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளர் எஸ் ஆர் சிவசாமி வேலுமணியை ஆலய பீடம் வரை அழைத்து சென்று ஆலய மக்கள் ஒவ்வொருவரிடமும் வாக்கு சேகரித்தனர்.   இன்று ஒரு புனித நாள் என்பதால் இந்த நிகழ்வு ஆலய மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

ரெட்’ கேட்டகிரியில் உள்ள மற்ற நிறுவனங்கள் மீது ஆக்‌ஷன் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் வாதம்

 SHYAM NEWS 20.02.2024 ரெட்’ கேட்டகிரியில் உள்ள மற்ற நிறுவனங்கள் மீது ஆக்‌ஷன் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் வாதம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான வேதாந்தா நிறுவனத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரெட் கேட்டகிரியில் உள்ள மற்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை இல்லை என வேதாந்தா தரப்பு வாதம் வைத்துள்ளது. தூத்துக்குடியில் 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கடந்த 2018-ல் போராட்டம் நடைபெற்றது. இது, பெரும் போராட்டமாக வெடித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 2018, மே 28 முதல் இந்த ஆலை மூடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து, தடை உத்தரவை நீக்கி மீண்டும் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் பலர் வேலை இழந்துள்ளனர் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் சுமார் 10,000 பேர் வேலை வாய்ப்பை பெறுவார்கள...

தூத்துக்குடியில் மின் மோட்டார் சுவிட்சை போட்டபோது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

 ஷ்யாம் நீயூஸ் 05.02.2024 தூத்துக்குடியில் மின் மோட்டார் சுவிட்சை போட்டபோது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.  தூத்துக்குடி அண்ணா நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் சரவண பெருமாள் மனைவி செல்வி (61), இவர் நேற்று மாலை வீட்டில் மின் மோட்டார் சுவிட்சை போட்டபோது எதிர்பாராத அவரது உடலில் மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல்! போலீசார் கைது!

ஷ்யாம் நீயூஸ் 05.02.2024 தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு  சாலை மறியல்! போலீசார் கைது! தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் ஏஜசிசிடியூ தொழிலாளர்கள் மாநிலத் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது கீழ்க்கண்ட கோஷங்களை வலியுறுத்தினர் தேர்தல் வாக்குறுதி படி தமிழக அரசு சுமைதூக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். 2011ம் ஆண்டு வரன்முறைப்படுத்தபட்டு 2020 ஆண்டு பச்சை அட்டை பெற தகுதி படைத்த  3525 தொழிலாளர்களுக்கும் 2020 ஆம் ஆண்டு முதல் பச்சை அட்டை வழங்க வேண்டும்.வார விடுப்பு ஊதியத்தை அந்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.பணிவேட்டில்2020லிருந்து  பதிவு செய்ய வேண்டும். 2019 ஆம் ஆண்டில் இருந்து பணி செய்துவரும் சுமந்து தூக்கும் தொழிலாளர்களை அரசு உத்தரவுபடி வறைமுறைபடித்தி பி எப் பிடித்தம் செய்ய வேண்டும். தொழிலாளர் விரோத அவுட் சோர்ஸ் முறையை கைவிட வேண்டும். வாகனங்களில் ஓவர்லோடு ஏற்ற இறக்க சுமைதூ...

காம்பவுண்ட் சுவர் மீது அரசு பள்ளி கட்டிடம் !

 ஷ்யாம் நீயூஸ் 05.02.2024 காம்பவுண்ட் சுவர் மீது அரசு பள்ளி கட்டிடம்  கட்டி வருதல்  கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமம் காலான்கரை.இங்கு ஐந்தாம் வகுப்புவரை உள்ள பள்ளி உள்ளது.ஐம்பதுக்கும் அதிகமான மாணவ குழந்தைகள் பயின்று வருகின்றனர்.பள்ளியை சுற்றி ஐந்து அடி உயரத்தில் சுற்று சுவர் உள்ளது.தற்போது மாணவ மாணவிகள் பயன் பெரும் வகையில் கூடுதல் கட்டிடம் கட்ட அரசு 7 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த பணத்தை கையாடல் செய்ய நினைத்த  ஒப்பந்ததாரர் ஏற்கனவே கட்டிய பள்ளியின் சுற்றுசுவர் மீது மீதி கட்டத்தை கட்டி வருகிறார்.இவ்வாறு கட்டும் கட்டிடத்தால் தங்கள் குழந்தைகளுக்கு ஆபத்து வரலாம் என குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகம் பொறியாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது.அப்படியா இடித்து கட்ட சொல்கிறேன் என்று கூறினார்.ஆனால் இது வரை முறையாக நடைபெறவில்லை .இதுவரை கட்டிடம் கட்டிய செலவு அதை இடிக்கும் செலவு ஆகியவற்றுக்கு மீண்டும் பஞ்சாயத்து அலுவலகம் நிதி ஒதுக்கீடு செய்யுமா அல்லது ஏ...

நேற்று டைவர்ஸ் இன்று மனைவிக்கு வெட்டு நண்பருடன் கணவர் வெறிச்செயல்.தூத்துக்குடியில் பரபரப்பு!

ஷ்யாம் நீயூஸ் 30.01.2024  நேற்று டைவர்ஸ் இன்று மனைவிக்கு வெட்டு நண்பருடன் கணவர் வெறிச்செயல்.தூத்துக்குடியில் பரபரப்பு! தூத்துக்குடி  புதுக்கோட்டை அருகே உள்ள கிராமம்  அல்லிக்குளத்தை சேர்ந்தவர் அமராவதி (24) இவருக்கும் திருவை குண்டத்தைச் சேர்ந்த குணாவிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து  தனது தாய் வீடான அல்லி குளத்தில் வசித்து வந்துள்ளார். நேற்று இருவருக்கும் டைவர்ஸ் ஆர்டர் வந்த நிலையில் நேற்று அவரின் கணவர் பிள்ளைகளை அழைத்து சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழுவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய அமராவதியை  கோரம்பள்ளம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் அவரது கணவர் மற்றும் இருவருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளனர் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் இறந்து விட்டதாக கருதி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இவர்களுக்கு  ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருவருக்க...

மோடி உயர் பதவியில் இருந்தாலும் இழி மகன் இழி மகன் தான்-தூத்துக்குடியில் சீமான் அதிரடி பேட்டி!

 ஷ்யாம் நீயூஸ் 28.01.2025 மோடி உயர் பதவியில் இருந்தாலும் இழி மகன் இழி மகன் தான்-தூத்துக்குடியில் சீமான் அதிரடி பேட்டி! நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி சத்யா ரெஸ்டாரண்டில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்துகொண்டனர். மற்றும் கோவில்பட்டியில் நடைபெறும்   பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று காலை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி வருகை தந்தார். நிர்வாகிகள் சந்திப்பு முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது. நாம் தமிழர் கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை  தனித்தே போட்டியிடும் என தெரிவித்தார் . தமிழகம்- பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 20 :20 ஆண் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.வரும் பிப்ரவரி மாதத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார். மற்றும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது முதல்வர் வெளிநாடு செல்வது அவருடைய தனிப்பட்ட பயணம் நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இந்தியா கூட்டணியிலிருந்து மம்தா அரவிந்த் கெஜ்ரிவா...

தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

 ஷ்யாம் நீயூஸ் 27.01.2024 தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.      தூத்துக்குடி மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'மக்களுடன் முதல்வர்” எனும் புதிய திட்டத்தை கடந்த ஆண்டு கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார்.       திட்டத்தின் படி மக்கள் அதிகமாக பயன் பெறும் வகையில் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மின்;சாரத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை, காவல்துறை, மருத்துவதுறை உள்பட அத்தியாவசிய துறைகளின் அதிகாரிகள், ஒரே இடத்தில் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். மழை வெள்ள பாதிப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த முகாம் நடைபெறாமல் இருந்த நிலையில்...

சேலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் எடப்பாடி பழனிச்சாமியிடம் சந்திப்பு

 ஷ்யாம் நீயூஸ் 24.01.2024 சேலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு!    தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் மரியாதை நிமித்தமாக சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளையொட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் இருவரும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி நிலவரமும் தற்போது மாவட்டத்திலுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் கள நிலவரம் குறித்து இருவரும் கலந்துரையாடினார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு முழுமையாக பணியாற்ற வேண்டும். தலைமை கழகத்திற்கும் கட்சியை வளர்ப்பதற்கும் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி பணியாற்றுபவர்களுக்கு உரிய நேரத்தில் அங்கீகாரம் வழங்கப்படும். என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.  வட்டச் செயலாளர் துரைசிங் மற்றும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்ப...

குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட தூத்துக்குடி மாணவிக்கு மத்திய அரசு அழைப்பு !

 தூத்துக்குடி ஷ்யாம் நீயூஸ் 23.01.2024  குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட தூத்துக்குடி மாணவிக்கு மத்திய அரசு அழைப்பு ! சுதந்திரப்  போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி தியாகம் குறித்து கவிதை எழுதிய தூத்துக்குடியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி டிவைனாவிற்கு வரும் 26 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பத்தாயிரம் ரூபாய் வெகுமதி அளிப்பதுடன் குடியரசு தின அணிவகுப்பை மத்திய அரசு செலவில் விமானத்தில் சென்று பெற்றோருடன்  பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்து கொடுத்து கௌரவித்துள்ளது. மத்திய அரசின் பாதுகாப்புத் துறை மற்றும் கல்வித் துறை அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் வீராங்கனை நினைவு கூறும் வகையிலான கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளை பள்ளி மாணவ மாணவியருக்கு நடத்தியது. இந்தியா முழுவதும் சுமார் 2 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த  ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் கவிதை பிரிவில் தூத்துக்குடி பி.எம்.சி பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி டிவைனா சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமி பாய் வீரம் மற்றும் தியாகத்தை...

தூத்துக்குடியில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு! ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு

ஷ்யாம் நீயூஸ் 23.01.2024 தூத்துக்குடியில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு! ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு தமிழ் மொழியை ஆட்சி மொழியாக 27-12-1956 ஆம்  சட்டம் இயற்றப்பட்டது இதை ஆண்டுதோறும் தமிழக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தமிழ் ஆட்சி மொழி வார விழா தூத்துக்குடி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் இருந்து கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொள்ளும் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை  துணை இயக்குனர் கனக லட்சுமி  தலைமையில் தூத்துக்குடி கோட்டாட்சிய தலைவர் மனோகரன் கொடி அசைத்து   பேரணியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நகரின் முக்கிய வீதியில் வழியாக இந்த பேரணி நடைபெற்றது இந்த பேரணியில் தூத்துக்குடி நகரில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கல்லூரியில் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டு தமிழ்  மொழி குறித்த பதாகைகளை ஏந...

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 3வது காலாண்டின் நிகர இலாபம் ரூ.284 கோடியாக உயர்வு.

ஷ்யாம் நீயூஸ் 22.01.2024  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 3வது காலாண்டு நிகர இலாபம் ரூ.284 கோடியாக உயர்வு. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 3வது காலாண்டின் நிகர இலாபம் ரூ.284 கோடி ஈட்டியுள்ளது . ஆண்டு நிகர வட்டி வருமானம் ரூ.537 கோடியாக உயர்ந்துள்ளதாக மூன்றாம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது 1921 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க தனியார் துறை வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருடங்களுக்கும் மேலாக இலாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.  547 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டின் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் 2023-24 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு நிதிநிலை தணிக்கை செய்யப்படாத முடிவுகள் இறுதி செய்யப்...

தூத்துக்குடியில் பேவர் பிளாக் சாலை அமைக்கு பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

 ஷ்யாம் நீயூஸ் தூத்துக்குடியில் பேவர் பிளாக் சாலை அமைக்கு பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு   தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகர பகுதிகளில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் போல்பேட்டை - டிஎம்சி காலனி பகுதியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.      மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு அமைச்சர் உதயநிதிஸ்டாலினிடம் 1 கோடி காசோலையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

 ஷ்யாம் நீயூஸ் 19.01.2024 சேலம் திமுக இளைஞர் அணி மாநாட்டிற்கு அமைச்சர் உதயநிதிஸ்டாலினிடம் 1 கோடி காசோலையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.     தூத்துக்குடி திமுக மாநில இளைஞர் அணி முதல்மாநில மாநாடு அப்போது மாநில செயலாளராக இருந்த முக.ஸ்டாலின் தலைமையில் 2007ல் நெல்லையில் நடைபெற்றது. அதன்பின் 17 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 21ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள 2வது திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்காக நன்கொடையாக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.      மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் இன்பாரகு, வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தூத்துக்குடி மாநகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், உடனிருந்தனர்.

பொங்கல் விளையாட்டு விழா 5 கி.மி ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற வாலிபருக்கு முதல் பரிசு

 ஷ்யாம் நீயூஸ் 18.01.2024 பொங்கல் விளையாட்டு விழா 5 கி.மி  ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற வாலிபருக்கு முதல்  பரிசு தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் தமிழக கிராமங்களில் பொங்கலுக்கு அடுத்த நாள் வீர விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். தூத்துக்குடி மாவட்டம் காலான்கரை கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல்  விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வாலிபர்களுக்கு கிராமம் சார்பாக விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கி வருவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற விளையாட்டுகளில் மிகச் சிறந்த போட்டியாக 5 கிலோமீட்டர் ஓட்டபந்தயமும் . 5கி.மீ சைக்கிளில் ரேஸும் நடைபெற்று. ஓட்ட பந்தயத்தில் முதல் பரிசை  காலான்கரையை சார்ந்த  கன்னி ஈஸ்வரனும் சைக்கிள் ரேஸ்ஸின் முதல் பரிசை முனியசாமியும் தட்டி சென்றனர். ஊர் தலைவர் பொன்னுலிங்கம் தலைமையில் விழா கமிட்டி சார்பாக  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் கோரம்பள்ளம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஞானக்கண். வார்டு உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் செந்தில்குமார் சமுக ஆர்வலர் ஐயப்பன் ஆகியோ...

தூத்துக்குடியில் சமத்துவ பொங்கல் விழா: அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

 ஷ்யாம் நீயூஸ் 14.01.20224 தூத்துக்குடியில் சமத்துவ பொங்கல் விழா: அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு தூத்துக்குடி மூணாவது சென்ட் அந்தோணியார்புரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பித்தார்.  விழாவில் வட்டச் செயலாளர் மூக்கையா தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாமன்ற உறுப்பினர்கள் வைதேகி, ஜெயசீலி, விஜயலட்சுமி, சரவணகுமார், ராஜதுரை, பட்சிராஜன், மாமன்ற உறுப்பினரும் பகுதி செயலருமான ராமகிருஷ்ணன், மண்டல செயலாளர் பால குருசாமி, வட்ட செயலாளர்கள் சுரேஷ், சுப்பையா, சரவணன் உள்பட மகளிர் அணியினர், நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.

நிர்வாக திறன் இல்லாத மாவட்ட நிர்வாகம். காம்பவுண்ட் சுவற்றில் பள்ளி கட்டிடம் கட்டும் அவலம்.

 ஷ்யாம் நீயூஸ் 14.01.2024 நிர்வாக திறன் இல்லாத மாவட்ட நிர்வாகம். காம்பவுண்ட் சுவற்றில் பள்ளி கட்டிடம் கட்டும் அவலம்! தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கிராமம் காலான்கரை.இங்கு 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சத்துணவு பள்ளி கட்டிடத்தை சில நாட்களுக்கு முன் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.தற்பொது கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு 7 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்த பள்ளியின் சுற்று சுவர் மீது 7லட்சம் மதிப்பீலான கட்டித்தை கட்டிவருகிறார் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் .டம்மி ஒப்பந்ததாரர்களை வைத்து சென்டர் விடபட்டு கட்டிடம் கட்டும் பணியை பஞ்சாயத்து தலைவரின் கணவர் அதிசயராஜ் பள்ளியின் சுற்று சுவர் மீது கட்டிடம் கட்டி ஊழலில் செய்து வருகிறார் என்று ஊர் பொது மக்கள் கூறுகின்றனர்.இப்பணிகளுக்கு பில் எழுதுவதற்கு பஞ்சாயத்து தலைவின் மகனை பணியில் அமர்த்தி உள்ளனர் என்றும்  இதற்க்கு தூத்துக்குடி வட்டார வளர்ச...

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

 ஷ்யாம் நீயூஸ் 09.01.2024 தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் 1,200 பேருக்கு 1,750 ரூபாய் மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது . தி.மு.க மாநில இளைஞரணி துணை செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஜோயல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 1200 ஆட்டோ தொழிலாளர்களுக்கும் தன் கையாள் நலத்திட்ட உதவிகளை வழங்குகினார். பொங்கல் தொகுப்பில் கீழ்கண்ட பொருட்கள் இருந்தன 1. ஆட்டோ ஓட்டுநர் சீருடை - ( Pant & Shirt ) ஒரு செட்   2. Uniball eye பேனா - 2 3. பென்சில்  பாக்ஸ் (ஸ்கேல், கட்டர், ரப்பர்) செட் - 1 4. தேர்வு அட்டை - 1 5.போர்வை - 1 6. அரிசி - 5 கிலோ 7. கோதுமை மாவு - 1 கிலோ 8. சமையல் எண்ணெய் - 1/2            லிட்டர் 9. சீனி - 1/2 கிலோ 10. துவரம் பருப்பு - 1/2  கிலோ 11. வத்தல் பொடி - 50 கிராம் 12. சாம்பார் பொடி - 50 கிராம்  13. 3 ரோசஸ் டீ தூள் -  50 கிராம் ஆகியவை இருந்தன   பொங்கல் தொகுப்பை பெ...

தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பல திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்

ஷ்யாம் நீயூஸ் 05.01.2024 தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பல திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக 1933.7 கோடி மதிப்பிலான 206 திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது, சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை பாதுகாப்புத் துறை அமைச்சர் கீதா ஜீவன் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் குத்து விளக்கு ஏற்றினர அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிகள் நிறைவுற்ற சிவந்தா குளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அறிவு சார் மையம், சிதம்பர நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படிப்பகம் மற்றும் தேசிய நகர்ப்புற நல வாழ்வு திட்டத்தின் கீழ் பாத்திமா நகர் மற்றும் லூர்தம்மாள்புரம் பகுதியில் அமையப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம். உள்ளிட்ட முடிவுற்ற திட்ட பணிகளையும்  காணொளி காட்சி மூலம் தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார், சிவந்தா குளம் மாநகராட்சி பள்ளி படிப்பகத்...