முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பல திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்

ஷ்யாம் நீயூஸ்

05.01.2024

தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பல திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்


தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக 1933.7 கோடி மதிப்பிலான 206 திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது, சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை பாதுகாப்புத் துறை அமைச்சர் கீதா ஜீவன் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் குத்து விளக்கு ஏற்றினர

அதன்படி தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணிகள் நிறைவுற்ற சிவந்தா குளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அறிவு சார் மையம், சிதம்பர நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படிப்பகம் மற்றும் தேசிய நகர்ப்புற நல வாழ்வு திட்டத்தின் கீழ் பாத்திமா நகர் மற்றும் லூர்தம்மாள்புரம் பகுதியில் அமையப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம். உள்ளிட்ட முடிவுற்ற திட்ட பணிகளையும்  காணொளி காட்சி மூலம் தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார், சிவந்தா குளம் மாநகராட்சி பள்ளி படிப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர்  தினேஷ்குமார், அன்னலட்சுமி கோட்டு ராஜா உள்ளிட்ட மண்டல தலைவர்கள் மாநகர கவுன்சிலர்கள் அதிகாரிகள் துறை சார்ந்த அலுவலர்கள் மாநகராட்சி பள்ளி மாணவ - மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் பங்கு வரும் மாணவ மாணவியர்களுக்கு இந்த அறிவு சார்ந்த மையம் உபயோகம் உள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை அந்த அளவுக்கு கட்டமைப்புகள் உடன் கூடிய நூலகங்கள் இணையதள வசதியுடன் கூடிய கணிகளை  மேயர் வடி அமைப்பு செய்து உள்ளார். பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டு உள்ளார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...