12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி : தூத்துக்குடியில் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
ஷ்யாம் நீயூஸ்
02.01.2023
அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மண்டல செயலாளர் கல்விக்குமார்த தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக அண்ணா தொழிற்சங்க பேரவை பொருளாளர் அப்துல் ஹமீது கலந்துகொண்டார்.
இதில், 15வது ஓய்வூதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை விரைந்து முடிக்கவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள டி.ஏ வை உடனடியாக வழங்கிடவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டியும், போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்கி உடனடியாக ஆணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலக நகர பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட போக்குவரத்து தொழிலாளர்கள் 12 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாத திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதில் அண்ணா தொழிற்சங்க செயலாளர், டேக்.ராஜா, வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கப்பல் ராஜன் மண்டல பொருளாளர் லட்சுமணகுமார், மண்டல இணைச்செயலாளர் லட்சுமணன், மண்டல துணைத் தலைவர் பார்வதி,உள்ளிட்ட
தூத்துக்குடி நகர, புறநகர் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய பணிமனை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.