முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 3வது காலாண்டின் நிகர இலாபம் ரூ.284 கோடியாக உயர்வு.

ஷ்யாம் நீயூஸ்

22.01.2024

 தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 3வது காலாண்டு நிகர இலாபம் ரூ.284 கோடியாக உயர்வு.


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 3வது காலாண்டின் நிகர இலாபம் ரூ.284 கோடி ஈட்டியுள்ளது . ஆண்டு நிகர வட்டி வருமானம் ரூ.537 கோடியாக உயர்ந்துள்ளதாக மூன்றாம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது 1921 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க தனியார் துறை வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருடங்களுக்கும் மேலாக இலாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

 547 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டின் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் 2023-24 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு நிதிநிலை தணிக்கை செய்யப்படாத முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தணிக்கை செய்யப்படாத மூன்றாவது காலாண்டு நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஆண்டு  நிகரமதிப்பு ரூ.6,741 கோடியிலிருந்து ரூ.7,668 கோடியாக உயர்ந்துள்ளது. பங்குகளின் புத்தக மதிப்பு ரூ.426 லிருந்து ரூ.484 ஆக உயர்ந்துள்ளது. 2023-2024 ன் மூன்றாவது காலா

ண்டு நிகர இலாபம் ரூ.280 கோடியிலிருந்து ரூ.284 கோடியாக உயர்ந்துள்ளது. ஆண்டு நிகர வட்டி வருமானம் ரூ.537 கோடியாக உயர்ந்துள்ளது

சில்லரை, விவசாயம், சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் கடன் தொகை 89 சதவீதத்திலிருந்து 91 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த வருமானம் ரூ.1173 கோடியிலிருந்து ரூ.1,387 கோடியாக உயர்ந்துள்ளது.


மொத்த வாராக் கடன் 1.70% இலிருந்து 1.69% ஆகக் குறைந்துள்ளது. SMA கணக்குகள், கடன் தொகையில் 8.41% இருந்து 5.34% ஆக குறைந்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 8.87% வளர்ச்சியடைந்து ரூ.85,185 கோடியை எட்டியுள்ளது. வைப்புத்தொகை ரூ.46,799 கோடி மற்றும் கடன் தொகை ரூ.38,386 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது.

நிகர இலாபம் ரூ.284 கோடியாக உள்ளது. (முந்தைய ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.280 கோடியாக இருந்தது.) நிகரமதிப்பு (Net worth) ரூ.7,668 கோடியாக உயர்ந்துள்ளது. (முந்தைய ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.6,741 கோடியாக இருந்தது) இது ரூ.927 கோடி உயர்ந்து 13.75 % வளர்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்தார் 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிதி நிலை தனிக்கை அதிகாரி பி.கே. கிருஷ்ணன், பொது மேலாளர்கள் ரமேஷ், சூரிய ராஜ், இன்பமணி, சுந்தரேசன், ஜெயராம், உதவி பொது மேலாளர்கள் அசோக் குமார், பார்ததசாரதி, தலைமை நிர்வாக அதிகாரி ராஜா மற்றும் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...