முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட தூத்துக்குடி மாணவிக்கு மத்திய அரசு அழைப்பு !

 தூத்துக்குடி


ஷ்யாம் நீயூஸ்

23.01.2024 

குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட தூத்துக்குடி மாணவிக்கு மத்திய அரசு அழைப்பு !

சுதந்திரப்  போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி தியாகம் குறித்து கவிதை எழுதிய தூத்துக்குடியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி டிவைனாவிற்கு வரும் 26 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பத்தாயிரம் ரூபாய் வெகுமதி அளிப்பதுடன் குடியரசு தின அணிவகுப்பை மத்திய அரசு செலவில் விமானத்தில் சென்று பெற்றோருடன்  பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்து கொடுத்து கௌரவித்துள்ளது.

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை மற்றும் கல்வித் துறை அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் வீராங்கனை நினைவு கூறும் வகையிலான கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளை பள்ளி மாணவ மாணவியருக்கு நடத்தியது. இந்தியா முழுவதும் சுமார் 2 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த  ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் கவிதை பிரிவில் தூத்துக்குடி பி.எம்.சி பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி டிவைனா சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமி பாய் வீரம் மற்றும் தியாகத்தை நினைவு கூறும் வகையிலான கவிதையை ஆங்கிலத்தில் எழுதி உள்ளார். மாணவி டிவைனாவின் கவிதை சிறந்த கவிதையாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மற்றும் கல்வித் துறையால் தேர்வு செய்யப்பட்டது.. இதைத் தொடர்ந்து மாணவி டிவைனாவிற்கு ரூபாய் 10 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டதுடன் வரும் 26 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட டெல்லிக்கு விமான மூலம் பெற்றோருடன்  சென்று வர விமான டிக்கெட் மேலும் நிகழ்ச்சியில் விருது வழங்கிகவுரவப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இருந்து 100 பேரும் தமிழகத்திலிருந்து  ஒரு பிரிவிற்கு ஒருவர் வீதம் மொத்தம் மூன்று 3 பேர்  தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தான் சுதந்திர போராட்ட வீரர்களின் கவிதை எழுதி தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என மாணவி தெரிவித்தார் இந்த சாதனையை படைத்த மாணவி டிவைனாவை பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...