ஷ்யாம் நீயூஸ்
18.09.2024
தூத்துக்குடி மாநகராட்சியில் கிழக்கு மண்டல பொதுமக்களில் குறைகளை கேட்டறிந்தார் மேயர் ஜெகன் பெரியசாமி!
தூத்துக்குடி மாநகராட்சி பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும் மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் அலுவலர்கள் மண்டல வாரியாக முகாம்களில் கலந்து கொண்டு பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கிழக்கு மண்டலத்தில் இன்று(18.09.2024)
முகாம் நடைபெற்றது கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட ( வார்டு எண்கள் 21முதல் 29,38 முதல் 41,46,47) ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது முகாமில் சொத்து வரி நிர்ணயம், சொத்துரி பெயர் மாற்றம், திருத்தங்கள், தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை, பிறப்பு மற்றும் இறப்பு சான்று திருத்தங்கள் உள்ளிட்ட மாநகராட்சி சேவைகள் குறித்து கோரிக்கை மனுக்கள் பெறபெற்றன. பல மனுக்களுக்கு உடனடியாக மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் தீர்வு காணப்பட்டது.