தூத்துக்குடி பாதிரியாரை தாக்கியதாக மாஜி அதிமுக அமைச்சர் இருவர் மீது வாழக்கு.பாதிக்கபட்டவருக்கு அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல்.
ஷ்யாம் நீயூஸ்
15.10.2024
தூத்துக்குடி பாதிரியாரை தாக்கியதாக மாஜி அதிமுக அமைச்சர் இருவர் மீது வாழக்கு.பாதிக்கபட்டவருக்கு அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல்.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோர் இணைந்து திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடியில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவசரமாக வரும் பொழுது அவர்களது காருக்கு இடையூறாக வழி கொடுக்காமல் வந்ததாக கூறி ஆறுமுகநேரி சிஎஸ்ஐ சர்ச் பாதிரியார் ஜெகன் என்பவரை சரமாரியாக இரண்டு முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர் . படுகாயம் அடைந்த பாதிரியார் ஜெகன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையை சேர்ந்த நடேசன் என்பவரது மகன் ஜெகன் இவர் ஆறுமுகநேரி மடத்துவிளை சிஎஸ்ஐ ஆலய பாதிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் இன்று ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஏவிஎம் மருத்துவமனையில் உடல் குறைவால் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்ப்பதற்காக தனது காரில் வந்துள்ளார் .
அப்போது அவருக்கு பின்னால் திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடியில் நடைபெற உள்ள அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள விரைவாக வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் முன்னாள் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோரின் ஆதரவாளர்கள் இவரது காருக்கு முன்னே செல்ல வழி கேட்டு ஒலி எழுப்பியுள்ளனர்.
ஆனால் முன்னாள் சென்று கொண்டிருந்த பாதிரியார் ஜெகன் தனது காரை ஒதுக்க முடியாமல் திகைத்துள்ளார்
இந்த நிலையில் தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாத்து ஓடை பாலம் அருகே வந்தபோது இவர் தனது வாகனத்தை ஒதுக்கிய போது இவருக்கு முன்பாக இரண்டு கார்கள் மற்றும் இவருக்கு பின்னாள் வந்த மூன்று கார்களில் வந்த அதிமுக அமைச்சர்கள் வேலுமணி மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் இவரது காரை எடுக்க விடாமல் நிறுத்தி அவரது கார் கதவை திறந்து அடித்துள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த இவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிஎஸ்ஐ போதகர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
பாதிக்கப்பட்ட போதகர் ஜெகனுக்கு சிடி ஸ்கேன் போன்ற மருத்துவ பரிசோதனைகள் செய்ய மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியதின் பேரில் அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தை அறிந்த தமிக அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெகனை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், ஆறுமுகநேரி குருவானவர் ஜெகன் அதிமுகவினரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரை கடுமையாக மிரட்டியுள்ளனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் கடம்பூர் ராஜூ அவர்களின் ஆதரவாளர்கள் இவரை தாக்கியதாக அவர் தெரிவித்ததாக கூறிய அவர், அடக்கு முறையை கையாள வேண்டும் என நினைக்கிறார்கள் இது ஜனநாயக முறையானது அல்ல, சாமானியர் சாலைகளில் பயணிக்க கூடியது இதில் பயணம் செய்யக்கூடியவர்களை தாக்கி கெட்ட வார்த்தைகளால் ஏசியதோடு மட்டுமில்லாமல் அவரை மிரட்டியுள்ளனர் நிச்சயமாக அரசு தாக்கியவர்கள் மீது கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இந்த நிலையில் அதிமுக முன்னால் அமைச்சரும் தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் தற்போதைய கோவில்பட்டி எம் எல் ஏ கடம்பூர் ராஜூ, அதிமுக தலைமை நிலைய செயலாளர் முன்னால் அதிமுக அமைச்சரும் கோவை புறநகர் தெற்க்கு மாவட்ட செயலாளரும் தற்போதைய தொண்டாமுத்தூர் எம். எல் .ஏ வேல் மணி உள்பட 17 நபர்கள் மீது ஜெகன் புகார் கொடுத்ததை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் பாதிரியார் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.