முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கு பரதர் நலசங்கம் நன்றி தெரிவித்தனர்.

ஷ்யாம் நியூஸ்

27.10.2022

 தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கு பரதர் நலசங்கம் நன்றி தெரிவித்தனர்.


    தூத்துக்குடி மாநகருக்கு முதலில் வல்லநாட்டிலிருந்து குடிதண்ணீர் திட்டம் கொண்டு வந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்துக்கு தமிழக அரசின் சார்பில் அவரது புகழை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடற்கரை சாலையில் உள்ள ரோச்பூங்காவில் அமைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு நிதி ஓதுக்கீடும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு அமைப்புகள் மாநகர மைய பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.


       இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெணகள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் கலெக்டர் செந்தில்ராஜ், முன்னிலையில் பல்வேறு அமைப்புகள் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடைபெற்றது.


    பின்னர் பாளை ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர் பூங்கா பகுதியில் கிழக்கு பக்கம் 20 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டதற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து ஏற்கனவே குரூஸ்பர்னாந்து சிலை இருக்கும் அதை அரசு சார்பில் அகற்றும் திட்டம் எதுவும் இல்லை வீண் வதந்திகளை நம்பவேண்டாம் புதிய இடம் தேர்வு குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து அனுமதி கோரப்படும் இதுசம்பந்தமாக மாநகராட்சி நிர்வாகம் அனுமதி பெறப்படும் இந்தப்பணிகள் முடிந்த பின்னர் குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் அமைக்கும் பணி தொடங்கும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்திருந்தார்.


      பரதர் நல தலைமைச்சங்க கோரிக்கையை ஏற்று குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் நமது மக்கள் விரும்பிய இடத்தில் அனுமதி அளித்து விரைந்து பணி முடிக்க உறுதி தந்த அமைச்சர் மேயர் ஆகியோருக்கு இதனையடுத்து பரதர் நல தலைமைச் சங்கம் சார்பில் தலைவர் ரெனால்;டு வில்லவராயர், பொதுச் செயலாளர் அந்தோணிச்சாமி, பொருளாளர் காஸ்ட்ரோ, செயலாளர் இன்னாசி, பாத்திமா நகர் பங்குதந்தை ஜேசுதாஸ், பர்னாந்து உதவி பங்குதந்தை விமல்ஜென், ஓலிபர், சில்வா, நிர்வாகிள் சேவியர் வாஸ், ஞாயம் ரோமால்ட், உள்ளிட்ட பலர் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக கலைஞர் அரங்கில் அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டர், ஆகியோருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில திமுக மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், கவுன்சிலர் பவாணி மார்ஷல், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மற்றும் கருணா, ஜோஸ்பர், அல்பட், பரதர்நல அமைப்பை சேர்ந்த பலர் உடனிருந்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...