மாப்பிள்ளையூரணி பகுதியில் தூய்மை பணியை சிறப்பாக செய்ய வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆலோசனை கூட்டத்தில் வேண்டுகோள்.
ஷ்யாம் நியூஸ்
29.10.2022
மாப்பிள்ளையூரணி பகுதியில் தூய்மை பணியை சிறப்பாக செய்ய வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆலோசனை கூட்டத்தில் வேண்டுகோள்.
தூத்துக்குடி மத்திய அரசு இந்தியா முழுவதும் தூய்மை பாரதம் திட்டத்தை தொடங்கி கிராமங்கள் முதல் மாநகரம் வரை அனைத்து பகுதிகளும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று திட்டத்தை தொடங்கி வைத்து நடைபெற்று வருகின்றன. தமிழக அரசும் இதே போல் கிராம ஊராட்சி திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தூய்மை காவலர்கள் மூலம் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் தூய்மை காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் பேசுகையில் ஓரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது கிராம ஊராட்சி தான் ஊராட்சி வளர்ச்சி மூலம் தான் நாட்டின் வளர்ச்சியும் அமையும் என்று தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுரையின் படி தெற்கு மாவட்;ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னிலை பெற்ற வளர்ச்சியடைந்த ஊராட்சியாக மாற்றுவதற்கு அனைத்து பணிகளையும் தமிழக அரசின் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லோரும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் அரசு தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பை உபயோகப்படுத்தாமல் தேவையற்ற பொருட்களை மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு விதமாக பொதுமக்கள் தரம் பிரித்து கொடுத்து தூய்மை காவலர்களிடம் வழங்கி மாப்பிள்ளையூரணி ஊராட்சி வளர்ச்சிக்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும். சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் எல்லா பகுதிகளிலும் தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்கு பிளிச்சிங்பவுடர் போடுவதற்கான பணிகளும் நடைபெறவுள்ளது. பொதுமக்களின் சுகாதாரத்தை முழுமையாக பாதுகாக்கும் வகையில் சுகாதார துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறோம் என்று பேசினார்.
கூட்டத்தில் செயற்பொறியாளர் தளவாய், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் உள்பட தூய்மை காவலர்களின் ஓருங்கிணைப்பாளர்கள தூய்மை காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்;சி செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.