முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி சிவன் கோவில் தேரோட்டம் வடம் பிடித்து அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.

 ஷ்யாம் நியூஸ்

தூத்துக்குடி. அக்.20,


தூத்துக்குடி சிவன் கோவில் தேரோட்டம் வடம் பிடித்து அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.


தூத்துக்குடியில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீசங்கரராமேஸ்வரர் திருக்கோவிலின் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் பூஜையுடன் நடைபெற்ற நிலையில், இன்று ஐப்பசி தேரோட்டத்தை முன்னிட்டு யானை, குதிரை, சிலம்பாட்டம், வால்சுருள் விளையாட்டு, தப்பாட்டம், கரகாட்டம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சியுடன் பெரிய தேரில் பாகம்பிரியாள் அம்பாள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தீபாராதனை காட்டினார். பக்தர்களின் கரகோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு ஒலித்தது. தேர் துவங்கிய நிலையில் இருந்து தெற்கு ரதவீதி, மேல ரத வீதி, வடக்கு ரதவீதி, கீழ ரத வீதி வழியாக  தேர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சிவன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். 

விழாவில் முக்கிய தொழிலதிபர்கள் ஏவிஎம் மணி, தெய்வநாயகம், கமலஹாசன், பாஸ்கர், லாரிபுக்கிங் சங்க தலைவர் சுப்புராஜ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் அன்னலெட்சுமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, பகுதி திமுக செயலாளர் சுரேஷ்குமார், மாநகர திமுக மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி, மாணவரணி துணை அமைப்பாளர்கள் பால் மாரி, சோமநாதன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், திமுக வட்ட செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், கங்கா ராஜேஷ், பொன்ராஜ், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, பிஜேபி மாவட்ட துணை தலைவர் சிவராமன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, பிஜேபி தலைமை செயற்குழு உறுப்பினர் கனகராஜ், பிரதோஷ கமிட்டி ஆறுமுகம், கவுன்சிலர் பேபி ஏஞ்சலின், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், ராதாகிருஷ்ணன், கணக்கர் சுப்பையா, கண்ணன் பட்டர், மற்றும் பிரபாகர் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

இத்தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி முன்னதாக சிவன் கோவில் தேரோட்ட வீதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...