முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் வேண்டுகோள்

ஷ்யாம் நியூஸ்

20.10.2022

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் வேண்டுகோள்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணையில் உண்மையை வெளிக்கொண்டு வந்த அருணா ஜெகதீசனுக்கு நன்றி தெரிவித்தனர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர்

தூத்துக்குடியில் மே 22 2018 இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினரால் பொதுமக்கள் 15 நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டிருந்தார் அந்த விசாரணை நேற்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது இதில் காவல்துறை அத்துமீறி பொதுமக்களை சுட்டது அம்பலம் ஆகியுள்ளது இதுகுறித்து இன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த போது. நியாயமான மக்கள் போராட்டத்தை கொலைகளமாக மாற்றி 15 உயிகளை காவு வாங்கிய துப்பாக்கி சூடு தொடர்பாக நீதி அரசர் அருணா ஜெகதீசன் நடத்திய விசாரணை 4 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்திருக்கிறது இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலும் விவாதிக்கப்பட்டுவிட்டது இந்த அறிக்கை ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆவணம் மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் விசாரணை முன்னெடுத்து தகவல்களை திரட்டி தனது அறிக்கையை நிறைவு செய்து இருக்கிறார் நீதியரசர் அருணா ஜெகதீசன். குற்றத்தில் நேரடியாக அல்லது ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடைய அனைவரின் பங்கையும் அம்பலப்படுத்தியுள்ளார் இந்த அறிக்கையில் அதிமுக்கிய அம்சமாக,மே 22 2018 ல் நடந்த கலவரத்தில் பொதுமக்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார் மேலும் படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் அனைவரையும் பெயரைச் சொல்லி பட்டியலிட்டு அம்பலப்படுத்தி இருக்கிறார் நீதியரசர் அன்றைய முதல்வர் ,தொடங்கி அனைவரையும் பாரபட்சமின்றி குறிப்பிட்டிருக்கிறார் மாவட்ட ஆட்சியரின் பொறுப்பற்ற செயலை மிக கடுமையாக கண்டித்திருக்கிறார் திட்டமிட்டே நடத்தப்பட்ட தாக்குதல் என்பதற்கான தகவலையும் ஆவணபடுத்தியிருக்கிறார் ஒரு கலவர சூழல் ஏற்படும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படாதது மறைந்திருந்து தாக்கியது உயிரை காத்துக் கொள்ள தப்பிய ஓடிய முயன்றவர்களை பின்னால் இருந்து சுட்டது போன்ற ஈன செயல்களை அனைத்தையும் பதிவாக்கி இருக்கிறார் நீதிபதி. குதூகலமாக படுகொலை நிகழ்த்திய கொடூர கொலைகாரன் சுடலைக்கண்ணுவின் ஒவ்வொரு நகர்வையும் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறார் வரம்பு மீறி நிராயுதபாணியான மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல் அரச பயங்கரவாதத்தின் உச்சம் என்பதை ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறார் மரியாதைக்குரிய நீதி அரசர் .இந்த தருணத்தில் துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை சட்டமன்றத்தில் விரிவான விவாத சூழலை ஏற்படுத்திய தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நீதி அரசரின் பரிந்துரைகள் மீதான நடவடிக்கைகள் தொடர்பான முதல்வரின் உத்தரவாதத்துக்கும் எங்கள் நன்றிகள், சட்டமன்றத்தில் மக்களுக்கான குரலாக ஒழித்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள், தூத்துக்குடி மக்களுக்கு உங்கள் உடனிறுப்பு அவசியம் தேவை என்றும் கீழ்கண்ட கோரிக்கைகளையும் நீங்கள் நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

கோரிக்கைகள்

1. துப்பாக்கி சூட்டுக்கு திட்டமிட்டவர்கள் தூண்டியவர்கள் படுகொலையை நேரடியாக நிகழ்த்தியவர்கள் அந்த கொடுஞ்செயல் நிகழும் போது பார்த்துக்கொண்டு மௌனம் காத்தவர்கள் அனைவரின் மீதும் எந்தவித பாரபட்சமும் இன்றி துறைரீதியான நடவடிக்கையுடன் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
 பணிநீக்கம் செய்ய வேண்டும் .

2.நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்கள் பரிந்துரை செய்தது போல உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்தினருக்கும் காயம் ஏற்பட்டவர்களுக்கும் எந்த வித பாகுபாடும் இல்லாமல் நிவாரணம் வழங்கிட வேண்டும்.

3. பொருளாதார வளர்ச்சி தேவை தான் ஆனால் அதற்காக மக்கள் உயிர்களை காவு கொடுத்து வரக்கூடிய வளர்ச்சி வளர்ச்சி அல்ல என்ற அடிப்படையில் தமிழகத்தில் ஆபத்தான ஆலைகளுக்கு அனுமதி கிடையாது என்ற கொள்கையை முடிவு எடுக்க வேண்டும்

4.  முக்கியமாக எங்கள் மண்ணில் இருந்து ஸ்டெர்லைட் ஆலை அது இருந்த சுவடே தெரியாமல் அகற்றப்பட வேண்டும். அதன் ஆபத்தான போக்கால் ஏற்பட்ட  விபரீதங்கள் அனைத்துக்கும் இழப்பீடு ஆலையிடமிருந்து பெறப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர் .

நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்களை நடிகர் ரஜினிகாந்த் சமூக விரோதிகள் என கூறியிருந்தார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை என அருணா ஜெகதீசன் அறிக்கையை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் டைரக்டர் நடிக்க சொல்லும் நடிப்பை நடிக்கும் ரஜினிகாந்த் சினிமா போல் இந்த சம்பவத்திலும் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது அவரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கூறினர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...