தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் ''கேட்ட வரம் அருளும் ஸ்ரீவராஹி அம்மன்'' சிலை புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது.
ஷ்யாம் நியூஸ்
29.10.2022
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் ''கேட்ட வரம் அருளும் ஸ்ரீவராஹி அம்மன்'' சிலை புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் ஆன்மிக சிறப்புபெற்ற ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர் சித்தர் பீடம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர், சனீஸ்வரர், வீரணார், ஆஞ்சநேயர், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
ஸ்ரீசித்தர் பீடத்தில் கூடுதல் ஆன்மிக சிறப்பாக வாழ்வில் பிரச்சனைகள் யாவற்றையும் தலைமுறைக்கும் போக்கி கேட்ட வரம் அருளும் ஸ்ரீவராஹி அம்மன் சிலை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு யாக வழிபாடுகள் நடத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வராஹி அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்க அம்மனுக்கு தீபாரதனை உள்ளிட்ட வழிபாடுகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
வாராஹி அம்மனை செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகள் மற்றும் அமாவாசை, பௌர்ணமி, பஞ்சமி திதி நாட்களில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும்.
வாராஹி அம்மனை மனமுருகி வழிபாடு செய்தால் குடும்பம் செல்வ செழிப்போடு சீரும் சிறப்புமாக பல தலைமுறைகளுக்கு தழைத்தோங்கும்.
வாராஹி அம்மனை ‘ஓம் வாராஹி தேவியே துணை’ என்ற மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் கஷ்டங்கள், எதிரி தொல்லை, கடன் தொல்லை, பணப்பிரச்சனை உட்பட அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்பது ஐதீகமாகும்.
வழிபாடுகள் முடிவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.