முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது. விளாத்திகுளம் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் போச்சு.

 ஷ்யாம் நீயூஸ்

24.05.2022

திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது. விளாத்திகுளம் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்கள்.

தூத்துக்குடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அயராது உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் அருகில் ஜி.வி.மார்கண்டேயன் எம்.எல்.ஏ தலைமையில் திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து, வசந்தம் ஜெயக்குமார், செல்வராஜ், மும்மூர்த்தி, காசிவிஸ்வநாதன், நவநீதகண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜசேகரன் வரவேற்புரையாற்றினார். வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் பேசுகiயில் தமிழகத்தில் 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி இருந்தகாலமாக இருந்தது புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை. 2006 முதல் 2011 வரை முதலமைச்சராக இருந்த கலைஞர் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தியதை கூட முடக்கிய ஆட்சி தான் அதிமுக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தளபதி கருவுற்ற தாய்மார்கள் முதல் குழந்தைகளுக்கு கல்லூரி படிப்பு வரை பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் திட்டங்களை தொடங்கியுள்ளார். விளாத்திகுளம் தொகுதி வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக திமுக ஆட்சி அமைந்தபின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியின் போது சாலை மேம்படுத்தப்பட்டு புறவழிச்சாலை மூலம் போக்குவரத்து சீராக செயல்படுகிறது. எல்லாத்துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடைந்து தமிழக மக்கள் அனைவரும் பலனடைய வேண்டும். என்ற தொலைநோக்கு சிந்தனையோடு இருபது மணி நேரம் உழைக்கும் முதலமைச்சரை நாம் பெற்றுள்ளோம். இந்தியாவில் சிறந்த முதலமைச்சராக தளபதியார் விளங்குகிறார். அவருடைய உழைப்பும் மக்கள் நன்மையும் கடைகோடி மக்கள் வரை சென்றடைகிறது. ஆட்சி பொறுப்பேற்றதும் கொரோனா தொற்று 38 ஆயிரம் வரை இருந்தது. தடுப்பு ஊசி எல்லோரும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் முன் உதாராணமாக இருந்து தடுப்பு ஊசி எடுத்துக்கொண்டார் முதல்வர். அதனால் தமிழகத்தில் கொரோனா தடுக்கப்பட்டுள்ளது. ஓராண்டு ஆட்சியில் இவ்வளவு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இன்னும் நான்காண்டு ஆட்சியில் பல்வேறு சாதனைகள் நிகழ்;த்தி தமிழகம் எல்லா வகையிலும் முன்னேரிய மாநிலங்களில் நம்பர் ஒன்னாக திகழும் என்று பேசினார்கள்.

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் ஆரணி மாலா இராமர் சரத்பாலா ஆகியோரும் உரையாற்றினார்கள். பொதுக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...