முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வீரசக்க தேவி அம்மன் கோவிலை தமிழக அரசின் அறநிலைத்துறை நிர்வகிக்க வேண்டும். வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகள் கலெக்டருக்கு கோரிக்கை

 ஷ்யாம் நீயூஸ்

09.05.2022

அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வீரசக்க தேவி அம்மன் கோவிலை தமிழக அரசின் அறநிலைத்துறை நிர்வகிக்க வேண்டும். வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகள் கலெக்டருக்கு கோரிக்கை

தூத்துக்குடி வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசுகளான வீமராஜா, வீரசக்கம்மாள், ராஜமல்லம்மாள், பாஞ்சாலம்மாள், இந்துமதி, ரவீந்திரன், முத்துக்குமார், ஆகியோர் கலெக்டர் செந்தில்ராஜுடம் அளித்த மனுவில் வீரபாண்டியன் கட்டபொம்மன் நேரடி வாரிசுகள் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள சந்ததியினர் குடியிருப்பில் வாழந்து வருகிறோம். பாஞ்சாலங்குறிச்சி, தொல்லியல் துறை கட்டுபாட்டில் இருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையை பழைய பாரம்பரிய நினைவு சின்னங்களை அழிப்பது சேதப்படுத்துவது மற்றும் தொல்லியல்துறை விதிகளை மீறி கட்டடம் கட்டுவது போன்ற பல விதிமுறைகளை முருகபூபதி சில ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு செய்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு கோட்டையில் இருக்கும் வீரசக்க தேவி அம்மன் கோவில் முன்பு அகழாய்வு செய்யப்பட்டு எடுத்த 3 அடி பழைய செங்கல் கட்டிடத்தை பூங்கா அமைக்கிறேன் என்று முழுவது தகர்த்து விட்டார்கள்.

தனியாக ஒரு குழு அமைத்து கொண்டு தொல்லியல் துறை இடத்தில் பொதுமக்களிடம் முறைகேடாக பணம் வசூலித்து வணிக வளாகம் கட்டி வந்தார். அதனை தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்து தடுத்து நிறத்தி விட்டது. ஆனால் இன்னும் அந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றப்படாமல் உள்ளது. அரசு நிலங்களில் இருக்கும் ஆக்கிரமிப்பை உச்ச நீதிமன்ற உத்தரவு படி அகற்ற வேண்டும். கட்டபொம்மன் விழாவிற்கு அனுமதி இல்லாமல் ஜேசிபி வைத்து சுத்தம் செய்கிறேன் என்று சுவர்களை சேதம்படுத்தியுள்ளனர். கோட்டையின் பின்வாசல் சாவி முருகபூபதியிடம் உள்ளது. இரவு 7 மணிக்கு மேல் கோவில் நுழைவ வாயிலை திறந்து வைத்திருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் சட்ட விதிமீறல்களை மேற்கொண்டு வருவதற்கு சில அரசு அதிகாரிகளே துணை இருக்கிறார்கள். அவர்கள் ஆதரவோடு முருகபூபதி இந்த குற்றச்செயலில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் சேர்ந்து அக்கிரமம் செய்து தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவோருக்கு சட்ட நடவடிக்கை எடுத்து இனிமேல் இதுபோன்று எந்த ஓரு தனிநபரோ அல்லது குழுவோ சேர்ந்து கொண்டு தொல்லியியல் இடங்களை சேதப்படுத்தி அழிக்காமல் இருப்பதற்கு ஆவணம்  செய்ய வேண்டும்.

மற்றொரு மனுவில் வீரசக்க தேவி அம்மன் கோவில் பெயரை சொல்லி பொதுமக்களிடம் அரசு அனுமதியின்றி குழு அமைத்து கொண்டு கட்டாய வரி வசூல் செய்து வருகிறார். வசூல் தொகைக்கு எந்த ஓரு முறையான வரவு செலவ கணக்கு தமிழக அரசுக்கும் எங்களுக்கும் இதுவரை தரவில்லை வருடத்திற்கு 50 லட்சத்திற்கு மேல் பணம் வசூல் செய்கிறார்கள் சட்டத்திற்கு புறம்பான பணம் வசூலில் ஈடுபட்டு வரும் இந்த தனியார் குழுவை உடனடியாக கலைத்து விட்டு சட்ட நடவடிக்கை எடுத்து தமிழக அரசின் அறநிலைத்துறை நிர்வகிக்க வேண்டும். என்று மனுவில் கூறியுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...