முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிஜேபி பொய் பிரச்சாரத்தை திமுக தகவல் தொழில்நுட்ப அணி முறியடிக்க வேண்டும் .

 ஷ்யாம் நீயூஸ்

18.05.2022

பிஜேபி பொய் பிரச்சாரத்தை திமுக தகவல் தொழில்நுட்ப அணி முறியடிக்க வேண்டும் .

   தூத்துக்குடி திமுக தென்மண்டல தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் ரோட்டிலுள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநில துணை செயலாளர் டாக்டர் மகேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் சுப்பிரமணியன், கோவி லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் அபிராமிநாதன், வரவேற்புரையாற்றினார்.

      திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பேசுகையில் உங்களுடைய பணி கடந்த இரண்டு ஆண்டு காலமாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. திமுகவை பற்றியும் தலைவரை பற்றியும் தவறான கருத்துகளை பதிவிடுபவர்களுக்கு பதிலுரை வழங்கி வருகிறிர்கள். 10 வருடமாக ஆட்சியிலிருந்த அதிமுக செய்யாத சாதனைகளை ஓருவருடத்தில் நம்முடைய முதலமைச்சர் செய்துள்ளார். கொரோனா காலக் கட்டத்தில் அனைவருக்கும் முன் உதாரணமாக இருந்து தடுப்பு ஊசி எடுத்துக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதின் காரணமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் உங்கள் பணி சிறப்பாக நடைபெற வேண்டும். என்றார்..

      மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ பேசுகையில் சூரியனை போன்று சுறுசுறுப்பாக இயங்கும் அணி தொழிலாளர்கள் விவசாயிகள் அரசுத்துறை சார்ந்த செயல்பாடுகள் அனைவற்றையும் தகவல் தொழில்நுட்பத்துடன் வெளி உலகத்திற்கு கொண்டு சேர்ப்பவர்கள் நீங்கள் தான் ஒவ்வொரு தொகுதியிலும் நடைபெறும் பணிகளை மக்களிடம் முறையாக கொண்டு போய் சேர்த்தால் 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் இந்த மாவட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்.பி, ஆகியோர் தகவல் தொழில்நுட்ப அணியை நல்லமுறையில் ஊக்குவித்து சமூகவலை தளம் மூலம் அரசின் சாதனைகளை கொண்டு செல்ல இந்த அணியை பயன்படுத்தி வருகின்றனர். முதல்வரின் திட்டங்களையும் செயல்பாடுகளை இன்னும் வேகமாக எடுத்துச் செல்லுங்கள் என்றார்.

   மாநில துணைச்செயலாளர் டாக்டர் மகேந்திரன் பேசுகையில் கடல் போல் விரிந்த திமுகவிற்கு வலிமை சேர்ப்பது நமது அணி தான் நடக்கும் சம்பவங்கள் விஷயங்களை 24 மணி நேரமும் முதல்வர் செயல்பாடுகளை கொண்டு சேர்க்கும் அணிக்கு தலைமை கழக அலுவலகத்தில் அதற்கென ஓர் அலுவலகம் முழுமையாக செயல்படுவதற்கான பணிகள் முதல்வர் உத்தரவு படி நடைபெற்று வருகிறது. இந்த அணியில் பெண்களையும் அதிக அளவில் சேர்க்க வேண்டும். பிஜேபியின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் புதிதாக உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றார். 13 மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்த நிர்வாகிகளுக்கு நினைவு பரிசை டாக்டர் மகேந்திரன் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் அந்தோணி கண்ணன், ராம்குமார், பழனிக்குமார், ராஜதுரை, அருணாதேவி, மாநகர செயலாளர் பிரபு  தொகுதி செயலாளர்கள் பிரவீன், லெனின், நாகராஜன், ஸ்ரீதர், ஹரிஹரன், பகுதி செயலாளர்கள் மனோ, கௌதம், சுரேஷ்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...