முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வடக்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்.

 ஷ்யாம் நீயூஸ்

30.05.2022

வடக்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையி;ல் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் கடந்த திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்து கருணாநிதி புதிய தலைமை செயலகத்தை தனது நேரடி பார்வையில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து கட்டினார். அப்குதியில் பெரியார், அண்ணா, சிலைகளுக்கு மத்தியில் இரண்டு தினங்களுக்கு முன்பு முழு உருவ வெண்கல சிலை முதலமைச்சர் ஸ்டாலின் நேரடி பார்வையில் உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது வரும் 3ம் தேதி கருணாநிதி பிறந்தநாளை வடக்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திமுக கழகத்தை தோற்றுவித்த அண்ணா மறைவுக்குபின் அவர் வழி தொட்டு இயக்கத்தை கட்டிக்காத்தவர் கலைஞர். இயக்கத்திற்கு பல்வேறு சோதனைகள் வந்தபோது எல்லாம் அதை தகர்த்தெறிந்தவர் 13 முறை சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர்5 முறை தமிழகத்தில் முதலமைச்சராக பணியாற்றி பல்வேறு திட்டங்களை தந்து தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்தி காட்டியவர் பல ஜனாதிபதிகளையும் பிரதமர்களையும் உருவாக்கி அழகு பார்த்தவர். சமூகநிதி சமச்சீரான வளர்ச்சி சமஉரிமை இவற்றை அடித்தளமாக கொண்டு திராவிட மாடல் ஆட்சியை நடத்தியவரும் தமிழக மக்களுக்காகவும் தமிழ் மொழிக்காவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காவும் அல்லும் பகலும் அயராது தனது இறுதிகாலம் வரை உழைத்த கலைஞர் 99வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவின நம்1 முதலமைச்சரும் ஒராண்டில் நூறாண்டு சாதனை புரிந்து சரித்திரம் போற்றும் முதல்வர் ஸ்டாலின் சென்னை ஓமந்தூர் அரசின் தோட்டத்தில் முழுவுருவ வெண்கல சிலை அமைத்து அதனை இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டு கலைஞர் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தளபதியாருக்கு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்வது என வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகர நகர ஒன்றிய பகுதி வார்டு மற்றும் கிளைக்கழகங்கள் தோறும் கலைஞர் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியும் திமுக கொடியேற்றியும் இனிப்புகள் வழங்கியும் கழக கொள்கை பாடல்களை ஓலிப்பரப்பி ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி உற்சாகமாக கொண்டாட வேண்டும மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து முதியோர்கள் அனாதைகள் இல்லங்களுக்கு உணவகள் வழங்கி மருத்துவமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின்,  ஆறுமுகம், ஏஞ்சலா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணைச்செயலாளரகள்; கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட மாணவரணி துணைச் செயலாளரும் மாநகராட்சி மண்டல தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் ராமர், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சித்திரை செல்வன், நெசவாளர் அணி அமைப்பாளர் சங்கரநாராயணன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன்,  ராமகிருஷ்ணன், ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், சின்னமாரிமுத்து, வசந்தம் ஜெயக்குமார், செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதிகண்ணன், சின்னபாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கவுன்சிலர்கள் வைதேகி, சரவணக்குமார், பொன்னப்பன், கண்ணன், ராமர், இசக்கிராஜா, ஜாக்குலின் ஜெயா, ஜான்சிராணி, தெய்வேந்திரன், விஜயகுமார், கந்தசாமி, முத்துவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...