முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத், தமிழ்நாடு மின்தட்டுப்பாட்டுக்கு ஒன்றிய அரசு தான் காரணம்தூத்துக்குடியில் துரை வைகோ. குற்றச்சாட்டு

 பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத், தமிழ்நாடு மின்தட்டுப்பாட்டுக்கு ஒன்றிய அரசு தான் காரணம் தூத்துக்குடியில் துரை வைகோ. குற்றச்சாட்டு


மாநில மதிமுக தொண்டரணி துணை செயலாளர் பேச்சிராஜ் மகன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டபின் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் இந்தியாவில் தற்போது மின் தட்டுப்பாடு பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டிற்கு ஒன்றிய அரசு தான் காரணம். மே மாதம் மின் தேவை அதிகம் உள்ளது. அதற்கேற்றாற்போல் நிலக்கரியை வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் தான் உள்ளது. ஆனால் மாநில அரசை மட்டும் குறை சொல்வது தவறானதாகும். ஸ்டெர்லைட்டை பொறுத்தவரை தமிழக அரசு திறப்பதில்லை என்ற முடிவோடு முதலமைச்சர் உள்ளார். இந்த தொகுதி எம்.பி.யான கனிமொழி நிச்சயம் திறப்பதற்கும் சம்மதிக்க மாட்டார். அதற்கான வாய்ப்புகள் கிடையாது. கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நல்ல சுகாதாரமான காற்றையும் மாசு இல்லாத தண்ணீரையும் நாங்கள் பயன்படுத்தி பலனடைந்து வருகிறோம். ஒருவிதமான மாசுவால் முகத்தில் ஏற்படும் மாற்றம் கூட தற்போது இல்லாமல் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று கிராமத்து மக்கள் கூறுகின்றனர். திமுக அரசு பொறுப்பேற்றபின் கொரானாவின் தாக்கம் அதிகமாக உள்ள நேரம். அதேபோல் நிதி நெருக்கடி என்று பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளது. ஒன்றிய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி வரியை வழங்காது உள்ளது. இருப்பினும் கொடுத்த வாக்குறுதியை திமுக அரசாணையாக பிறப்பித்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. முதலமைச்சரும் அதற்கேற்றாற்போல் பணியாற்றி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பணி செய்து வருகிறார். இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக இந்த அரசு நிறைவேற்றும். 12 ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் சில பணிகளுக்காக தென்காசி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பலர் பாதிக்கப்படுவதால் கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் விரிவாக்கம் வேண்டும் என்று அரசுக்கும் அமைச்சருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இது சம்மந்தமாக தலைவர் வைகோ முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளார் என்று தெரிவித்தார். பின்னர் தூத்துக்குடியில் உள்ள சங்கொலி செய்தியாளா மகாராஜன் இருதய ஆப்பரேசன் செய்யப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து விட்டு பின்னர் மறைந்த வட்ட செயலாளர் விநாயகமூர்த்தி வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் மகனிடம் நலன் விசாரித்து கட்சியின் சார்பில் ஐம்பதாயிரத்தை துரை வைகோ வழங்கினார். மாநிலதொழிற் சங்க செயலாளர் கஜேந்திரன், மதிமுக மாநில துணைச் செயலாளர் ராஜேந்திரன், மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், தொழிற்சங்க பொருளாளர் அனல் செல்வராஜ், மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், ஒன்றிய செயலாளர் சரவணன், மணிராஜ், மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, மாநகர செயலாளர் முருகபூபதி, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன், துணை செயலாளர் சரவணபெருமாள், மாணவரணி குமார், தொழிற்சங்கம் அனல் டேவி;ட், நிர்வாகிகள் எல்.எஸ்.கணேசன், தெய்வேந்திரன், பொன் ஸ்ரீராம் உள்பட பலர் உடன் சென்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...