முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தும் 12 வது ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகள் மே,17 முதல் 28 தேதி வரை நடைபெறுகிறது கனிமொழி எம்பி தகவல்!

 ஷ்யாம் நீயூஸ்

02.04.2022

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தும் 12 வது ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகள் மே,17 முதல் 28  தேதி வரை நடைபெறுகிறது
கனிமொழி எம்பி தகவல்!

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தும் 12 வது ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகள் மே,17 முதல் 28  தேதி வரை நடைபெறுகிறது என கீதா ஓட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.
தெரிவித்தார்.
கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கை புல் தரை மைதானத்தில் பகல் மற்றும் மின்னொளியில் மே மாதம் 17 முதல் 28ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்த போட்டியில் மொத்தம் 30 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இதில் 540 வீரர்கள் பங்குபெறும் 50 போட்டிகள் நடக்க உள்ளன. இப் போட்டியில் இருந்து இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் போட்டிகள் காலை ஆறு முப்பது மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெறும் இப்போட்டிக்கான தமிழக அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக உத்தரபிரதேசம் மற்றும் சென்னையில் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது கடந்த ஆண்டு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்ற 11வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்ற காரணத்தினால் ஹாக்கி இந்தியா அமைப்பு இந்த ஆண்டும் கோவில்பட்டியில் இப்போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இருந்து தமிழக அணியில் இருந்து 5 வீரர்கள் இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டனர் மேலும் இந்த ஐந்து வீரர்களும் கோவில்பட்டி சார்ந்தவர் என்று கூறப்படுகிறது.

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தவுள்ள 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி குழு சேர்மனாக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியும் துணை சேர்மனாக  தமிழக சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவனும், தூத்துக்குடி மாநகராட்சிச மேயர் ஜெகன் பெரியசாமி அஆகியோரும், மற்றும் கே .ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் கே ஆர் அருணாச்சலம் போட்டிகளில் அமைப்புச் செயலாளராக ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாட்டின் தலைவர் சேகர் மனோகரன் ஆகியோரும் இணைந்து இப்போட்டியை நடத்த உள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஹாக்கிங் யூனிட் ஆப் தமிழ்நாட்டின் பொதுச்செயலாளர் செந்தில் ராஜ்குமார், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் ஒலிம்பியன் திருமாவளவன், துணைத்தலைவர் சங்கிலி காளை  மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் குரு சித்திரை சண்முக பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ராமஜெயம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, போல் பேட்டி பகுதி இளைஞரணி துணைச் செயலாளர் ஆல்பர்ட், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...