முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநகர பகுதியில் குடியிருப்பவர்கள் இணையதளம் மூலம் கருத்துக்களை பதிவு செய்யலாம். உள்பட 39 தீர்மானங்கள் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நிறைவேறியது.

ஷ்யாம் நீயூஸ்
30.05.2022

மாநகர பகுதியில் குடியிருப்பவர்கள் இணையதளம் மூலம் கருத்துக்களை பதிவு செய்யலாம். உள்பட 39 தீர்மானங்கள் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நிறைவேறியது.

தூத்துக்குடி மாநகராட்சி அவரச கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, முன்னிலையில் தொடங்கிய கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் வக்கீல் வீரபாகு, வெற்றிச்செல்வன், வக்கீல் மந்திரமூர்த்தி, முன்இருக்கையில் அமர்ந்து கொண்டனர். அகர வரிசை படி உறுப்பினர்களுக்கு இருப்பிடம் ஓதுக்கப்பட்டுள்ளது. மண்டல தலைவர்கள் 4 பேர் முன்வரிசையில் இடமளிக்கப்பட்டுள்ளது. ஆகவே உங்களுக்குரிய இடத்தில் அமரும்படி மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டார். அதன்படி அவர்களது இடத்திற்கு சென்றனர். பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி நகர் நல அலுவலர் மூலம் ஹோலிகிராஸ் பள்ளி அருகிலிருந்த ஆரம்ப சுகாதார மையம், சத்திரம் பகுதியில் மாற்றப்பட இருந்ததை மீண்டும் பழைய இடத்திலேயே அமைப்பதற்கும் சிவந்தாகுளம் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிகம் இருப்பதால் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு எதிரில் உள்ள உப்பு இலாக்காவிற்கு சொந்தமான மத்திய அரசு இடத்தை கனிமொழி எம்.பி மூலம் 10 ஏக்கர் கேட்டு பெற்றுக்கொள்வது வீட்டுத்தீர்வை சம்மந்தமாக வெப்சைட் இணையதளம் ஆரம்பிக்கப்பிக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் கருத்துகளை பதிவு செய்து கொள்ளலாம். மாநகராட்சி பகுதியில் 60வது வார்டுகளிலும் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் முழுமையாக சீரமைத்து மழைநீர் தேங்காதபடி பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் தீர்மானத்தை கொண்டு வந்தார். பின்னர் கூட்ட அரங்கில் மேயர் உதவியாளர் ரமேஷ், 35 தீர்மானங்களை வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

     கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், உதவி ஆணையர் சேகர், ராமசந்திரன், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கோட்டுராஜா, கலைச்செல்வி திலகராஜ், நிர்மல்ராஜ், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதரகுழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக்குழு தலைவர் அதிஷ்டமணி, நகர அமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், மற்றும் கவுன்சிலர்கள் சரண்யா, பேபி ஏஞ்சலின், ரெங்கசாமி,  கண்ணன், விஜயலட்சுமி, ரெக்ஸ்லின், தனலட்சுமி, சரவணக்குமார், ஜாக்குலின் ஜெயா, மெட்டில்டா, அந்தோணி பிரகாஷ் மார்ஷல், இசக்கிராஜா, கந்தசாமி, பொன்னப்பன், ராமர், மரியகீதா, மகேஷ்வரி, சந்திரபோஸ், எடின்டா, கற்பககனி, மும்தாஜ். ராமுத்தம்மாள், ராஜேந்திரன், விஜயகுமார், பாப்பாத்தி, வைதேகி, முத்துமாரி, பவாணி மார்ஷல், கனகராஜ், முத்துவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...