முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும், விற்கும் முடிவை கைவிட வேண்டும் கிராம மக்கள் தொடர் போராட்டம்

 ஷ்யாம் நீயூஸ்

22.06.2022

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும், விற்கும் முடிவை கைவிட வேண்டும் கிராம மக்கள் தொடர் போராட்டம்


தூத்துக்குடியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 400 கோடி மதிப்பில் ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு உற்பத்தியின் மூலம் மத்திய, மாநில அரசுக்கு பெறும் வருமானம் பல்வேறு வகையில் கிடைத்தது. துறைமுகத்தின் மூலம் சுங்கத்துறை மற்றும் துறைமுகத்திற்கும், தொழிற்லாளர்களுக்கும் வேலைவாய்ப்பும், வருமானமும் கிடைத்தன. ஸ்டெர்லைட்டை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றினார்கள். அதன் மூலம் பல குடும்பங்கள் வாழ்ந்தன. ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அடிப்படை தேவையான சாலை குடித்தண்ணீர், பள்ளிக்கட்டிடம், அங்கன்வாடி ஆகியவைகளை கட்டி கொடுத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவிகள் பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை பலருக்கும் கல்வி உதவித்தொகை என பல்வேறு வகையில் உதவிகள் செய்து வந்தன. மாவட்டமும் பல்வேறு வகையில் தொழில்துறையில் வளர்ச்சி அடைந்தது. அரசுக்கு தேவையான காப்பர் உற்பத்தி செய்து கொடுத்து வந்தனர். 4 வருடங்களுக்கு முன்பு எதிர்பாராமல் நடைபெற்ற ஒரு சம்பவத்தால் மூடி கிடக்கின்றது. இதன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்து வரும் நிலையில் திடீரென ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக நிர்வாகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஆலையால் பயனடைந்த ஆதாரவாளர்கள் மூடும் முடிவை கைவிட வேண்டும் என்று பேட்டி கொடுத்த நிலையில் மீண்டும் தொழிற்சாலை எங்களுக்கு வேண்டும். விற்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பண்டாரம்பட்டி, சங்கரபேரி, மீளவிட்டான், மடத்தூர், குமாரரெட்டியார்புரம், நடுவக்குறிச்சி, ராஜாவின்கோவில், புதூர் பாண்டியாபுரம், சில்லாநத்தம், சாமிநத்தம், அய்யனடைப்பு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தன் எழுச்சியாக தங்களது பகுதிகளில் தொடர் ஆதரவு உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஒருவர் கூறுகையில் மக்களுக்கான நன்மைகள் தொடர்ந்து செய்து வந்த இந்த நிறுவனம் சிலர் செய்த தவறுகளால் மூடப்பட்டுள்ளது. இதனால் எங்களை போன்ற பல்வேறு கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்தியா வளர்ச்சி அடைந்து வல்லரசாக வேண்டும் என்பதை போல் இந்த மாவட்டமும் வளர்ச்சி அடைந்து மக்களும் பலன் பெற்று மத்திய, மாநில அரசுகளுக்கும் நன்மை கிடைத்த நிறுவனத்தை மீண்டும் திறக்க வேண்டும். மூடும் முடிவை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்துவோம் என்றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...