முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்டெர்லைட் விற்பனை முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் மாற்று திறனாளிகள் நல சங்கம் கோரிக்கை

 ஷ்யாம் நீயூஸ்

29.06.2022

ஸ்டெர்லைட் விற்பனை முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் மாற்று திறனாளிகள் நல சங்கம் கோரிக்கை

முத்துநகர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் துளசி, பெல், தாயகம் உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவன நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடி பானு பிருந்தாவன் மஹாலில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். தொண்டுநிறுவன நிர்வாகிகள் தனலெட்சுமி, ஜெயக்கனி, ஜேசுதாஸ், மாரியப்பன், முருகன், முருகம்மாள், முத்துலெட்சுமி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தூத்துக்குடி மாநகர வளர்ச்சி மற்றும் அனைத்துமக்களின் நலனிலும் அக்கறை கொண்ட ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை விற்கும் முடிவினை அதன் உரிமையாளர் கைவிடவேண்டும்.

நடமாடும் மருத்துவ திட்டம், இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி திட்டம், பெண் குழந்தைகளுக்கான கல்வி வகுப்பு திட்டம், குஷி குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், இதயம் காப்போம் திட்டம், மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டம், கிராமங்கள்தோறும் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆகிய பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்துவரும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படவேண்டும். 

ஸ்டெர்லைட் நிறுவன தலைவர் அனில்அகர்வால் சட்டத்தின் மூலமாக போராடி வெற்றிபெறுவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். கடந்த 4ஆண்டுகளாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சட்டப்போராட்டத்திற்கு நீதிபதிகள் நல்ல முடிவை தரவேண்டும்.  ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக எங்களுடன் எங்களைப்போன்ற பலஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர்.

தமிழகத்தின் தொழில்வளர்ச்சியை கருத்தில்கொண்டு ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் செயல்பட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் ரமேஷ் பேசியதாவது, ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டுள்ளதால் வேலைவாய்ப்பு இல்லாமல் வருமானம் இன்றி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை மாறிடவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திடவும், மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சி பெருகிடவும்  ஸ்டெர்லைட் தொழிற்சாலைய திறப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் காலம்தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

யாரும் செய்யாத  உதவிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது. ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டுள்ளதால் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். இதன்காரணமாக பல சட்டவிரோத செயல்கள் நடைபெறும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், படித்த இளைஞர்களுக்கும், இந்த தொழிற்சாலையை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்திட ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் திறக்கவேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை விற்கும் முடிவை வேதாந்த குழுமத்தலைவர் அனில்அகர்வால் உடனடியாக கைவிடவேண்டும் என்றார்.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேரந்த மாற்றுத்திறனாளிகள், தொண்டு நிறுவனத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...