முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மேயர் அதிரடி ஆய்வு

 ஷ்யாம் நீயூஸ்

17.06.2022

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மேயர் அதிரடி ஆய்வு

  தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வகுப்பறைகள், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் மேயர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சராக தளபதியாளர் பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் அனைத்து துறைகளும் முன்னேற்ற பாதையில் எடுத்துச்செல்லப்படுகிறது. இந்தியாவிற்கே தமிழகம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எல்லோரையும் மக்கள் பணியை சிறப்பாக செய்யவேண்டும் என்ற அறிவுறுத்தியுள்ளார்கள். அதே போல்  தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். என்ற உத்தரவு அரசு விடுத்ததையடுத்து மாநகராட்;சி முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவிகளின் சேர்க்கையை அதிகாரிக்கவும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு தற்போது தூத்துக்குடியில் உள்ள அரசு பள்ளிகளில் அதிகமாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்களுக்காக கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கும், தேவையான அளவு பெஞ்ச், மேஜை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் 400ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை தற்போது 1200ஐ கடந்துள்ளது. இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும், பள்ளியின் வளர்ச்சிக்காக உப்பு இலாக்காவிற்கு சொந்தமான பள்ளி எதிரே உள்ள மைதானத்தை கனிமொழி எம்.பி. அமைச்சர் கீதாஜீவன் மூலம் இடம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு அதில் விளையாட்டு மைதானம்; அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார். ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியை எமல்டா, மேயரின் உதவியாளர்கள் ரமேஷ், பிரபாகர், ஜோஸ்பர், ஆணையரின் உதவியாளர் துரைமணி, உள்பட பலர் ஆய்வின் போது உடனிருந்தனர். மேயரின்  உற்சாகமான செயல்பாட்டை மக்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...