ஷ்யாம் நீயூஸ்
27.06.2022
மாப்பிள்ளையூரணி திமுக வேட்பாளர் சேவியர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணிடம் வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி 3வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்த கோயில்மணி மறைவை யொட்டி தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் அடுத்த மாதம் 9ம் தேதி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக வேட்பாளராக சேவியரை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதனையொட்டி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வேட்பாளர் சேவியர் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர் திமுக ஆட்சியின் தளபதியார் செயல்பாடுகளையும் சாதனைகளையும் எடுத்துக்கூறி எதிர்த்து நிற்கும் வேட்பாளர் யாராக இருந்தாலும் டெபாசிட் கிடைக்க கூடாது என்ற நோக்கத்தோடு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சண்முகையா எம்.எல்.ஏ முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் துணை அமைப்பாளர் அம்பாசங்கர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் ரவி என்ற பொண்பாண்டி, ஒன்றிய செயலாளர் மாடசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட பிரதிநிதி சப்பானிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணிதனுஷ்பாலன், மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் சிவக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, கிளைச்செயலாளர்கள் மாரியப்பன், ஜோதிடர் முருகன், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன், கௌதம் உள்பட பலர் உடனிருந்தனர்.