முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெற்கு ரயில்வேயின் தூத்துக்குடி நகர மக்கள் விரோத போக்கை கைவிட சிபிஎம் மாநகர் செயலாளர் ராஜா கோரிக்கை

 ஷ்யாம் நீயுஸ்

27.06.22

தெற்கு ரயில்வேயின் தூத்துக்குடி நகர மக்கள் விரோத போக்கை கைவிட  சிபிஎம் மாநகர் செயலாளர் ராஜா கோரிக்கை 

இது தொடர்பாக மாசிலாமணி புரத்தில் உள்ள சிபி எம் மாநகரக்குழு சார்பில் சிபிஎம் மாநகர் செயலாளர் தா.ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

நாகர்கோவில் - கோவை ரயிலில் தூத்துக்குடி மக்களுக்காக லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வந்தது. அந்த லிங்க் எக்ஸ்பிரஸ் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்டது. தற்பொழுது அந்த லிங்க் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

ஜூலை 2முதல் லிங்க் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டு, இணைப்பு ரயில் விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இணைப்பு ரயிலில் நள்ளிரவு மணியாச்சி சென்று கோவை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இரவு 11.30 மணிக்கு ஏறவேண்டும். கோவையிலிருந்து - தூததுக்குடிக்கு வரும் பயணிகள் அதிகாலை 2.40 மணிக்கு மணியாச்சியில் இறங்கி தூத்துக்குடி இணைப்பு ரயிலுக்கு மாற வேண்டும். இதனால் பயணிகள் இரவு முழுவதும் தூங்காமல் பயணிக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். தூத்துக்குடி-கோவை லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்ட பொழுது முன்பதிவு இல்லாத பெட்டிகளில் சுமார் 300 பேர் வரை தினசரி பயணம் செய்தனர். இணைப்பு ரயிலில் செல்லும் முன் பதிவு இல்லாமல் செல்லும் பயணிகளுக்கு நாகர்கோவில்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன் பதிவு இல்லா பெட்டிகளில் இடம் எப்படி கிடைக்கும். இடம் இல்லாத நிலையில் அவர்கள் நள்ளிரவில் தூத்துக்குடி திரும்ப என்ன செய்வார்கள்.

எனவே சாதாரண மக்களை பாதிக்கும் இந்த இணைப்பு ரயில் திட்டத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் கைவிட்டு, மீண்டும் லிங்க் எக்ஸ்ப்பிரஸையே இயக்க வேண்டும். அல்லது தூத்துக்குடி - கோயம்புத்தூர் புதிய ரயில் இயக்க வேண்டும்.

தெற்கு ரயில்வேயின் தூத்துக்குடி நகர மக்கள் விரோத போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிவை இயக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...