முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாப்பிள்ளையூரணி பகுதியில் தூய்மை பணியை சிறப்பாக செய்ய வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆலோசனை கூட்டத்தில் வேண்டுகோள்.

 ஷ்யாம் நியூஸ் 29.10.2022 மாப்பிள்ளையூரணி பகுதியில் தூய்மை பணியை சிறப்பாக செய்ய வேண்டும்  ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆலோசனை கூட்டத்தில் வேண்டுகோள். தூத்துக்குடி மத்திய அரசு இந்தியா முழுவதும் தூய்மை பாரதம் திட்டத்தை தொடங்கி கிராமங்கள் முதல் மாநகரம் வரை அனைத்து பகுதிகளும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று திட்டத்தை தொடங்கி வைத்து நடைபெற்று வருகின்றன. தமிழக அரசும் இதே போல் கிராம ஊராட்சி திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன.       ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தூய்மை காவலர்கள் மூலம் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் தூய்மை காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.      பின்னர் பேசுகையில் ஓரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது கிராம ஊராட்சி தான் ஊராட்சி வளர்ச்சி மூலம் தான் நாட்டின் வளர்ச்...

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் ''கேட்ட வரம் அருளும் ஸ்ரீவராஹி அம்மன்'' சிலை புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது.

ஷ்யாம் நியூஸ் 29.10.2022  தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் ''கேட்ட வரம் அருளும் ஸ்ரீவராஹி அம்மன்'' சிலை புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது. தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் ஆன்மிக சிறப்புபெற்ற ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர் சித்தர் பீடம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர், சனீஸ்வரர், வீரணார், ஆஞ்சநேயர், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். ஸ்ரீசித்தர் பீடத்தில் கூடுதல் ஆன்மிக சிறப்பாக வாழ்வில் பிரச்சனைகள் யாவற்றையும் தலைமுறைக்கும் போக்கி கேட்ட வரம் அருளும் ஸ்ரீவராஹி அம்மன் சிலை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு யாக வழிபாடுகள் நடத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வராஹி அம்மன் மலர் அலங்காரத்தில் பக்...

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

 ஷ்யாம் நியூஸ் 28.10.2022 தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.    தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையானது குறித்து பேசினார்கள்.  கூட்டத்தில் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட அழகேசபுரம் கிழக்கு மேற்கு முதல்தெரு நடராஜபுரம் வடக்கு தெற்கு 3வது தெரு, நந்தகோபாலபுரம் மெயின் முதல் அழகேசபுரம் மெயின் சாலை நடராஜபுரம் வடக்கு தெற்கு 2வது மற்றும் முதலாவது தெரு, அழகேசபுரம் கிழக்கு மேற்கு குறுக்கு 2வது தெரு நடராஜபுரம் வடக்கு தெற்கு சாலை, நந்தகோபாலபுரம் கிழக்கு 4வது தெரு, கிழக்கு 3வது தெரு, அழகேசபுரம் வடக்கு தெற்கு மெயின் ரோடு முதல் அமெரிக்கன் மருத்துவமணை சாலை பகுதிகளில் தார்சாலை மேம்படுத்தும் பணி, பங்களா தெரு, முதலாவது குறுக்கு தெரு, இரண்;டாவது குறுக்குசந்து வடக்கு பகுதி, 3வது குறுக்கு தெரு, பக்கிள்புரம் முதல்தெரு, 2வது தெரு, பங்...

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கு பரதர் நலசங்கம் நன்றி தெரிவித்தனர்.

ஷ்யாம் நியூஸ் 27.10.2022  தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கு பரதர் நலசங்கம் நன்றி தெரிவித்தனர்.     தூத்துக்குடி மாநகருக்கு முதலில் வல்லநாட்டிலிருந்து குடிதண்ணீர் திட்டம் கொண்டு வந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்துக்கு தமிழக அரசின் சார்பில் அவரது புகழை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடற்கரை சாலையில் உள்ள ரோச்பூங்காவில் அமைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு நிதி ஓதுக்கீடும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு அமைப்புகள் மாநகர மைய பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.        இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெணகள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் கலெக்டர் செந்தில்ராஜ், முன்னிலையில் பல்வேறு அமைப்புகள் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடைபெற்றது.     பின்னர் பாளை ரோட்டில் உள்ள எம...

மாப்பிள்ளையூரணி பகுதியில் புதிய சாலை அமைக்க கோரி ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்க!

ஷ்யாம் நியூஸ் 25.10.2022 மாப்பிள்ளையூரணி பகுதியில் புதிய சாலை அமைக்க கோரி ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்க! தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தொகுதியில் உள்ள பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை கண்டறிந்து அதனை உடனுக்குடன் சரி செய்து வருகிறார்.  அதனடிப்படையில் வருகிற பருவமழை காலத்திற்கு முன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி,  குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரிசெய்யும் பணி ஆகியவற்றை துரிதப்படுத்தி வருகிறார் ஓட்டப்பிடாரம்  சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா.  மேலும் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் மக்கள் பிரச்சனைகளை மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து சரவணக்குமாரிடம் கேட்டறிந்து அதனை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அப்பகுதி மக்களுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகின்றார்.  இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியத் தலைவர் செந்தில்ராஜிடம் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்துள்ளார்.  அதில் தெரிவித்துள்ளதாவது: ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம...

தூத்துக்குடி மாநகருக்கு எல்இடி விளக்குகள் அமைக்க முதல்வர் நிதி ஒதுக்கீடு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி

 ஷ்யாம் நியூஸ் 25.10.2022 தூத்துக்குடி மாநகருக்கு எல்இடி விளக்குகள் அமைக்க முதல்வர் நிதி ஒதுக்கீடு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்றப்பின் தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சியை முதன்மை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்று 60 வார்டு பகுதிகளிலும் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாநகராட்சியில் நடைபெற்ற முதல் மாமன்ற கூட்டத்தில் மாநகரை மேலும் ஒளிருட்டும் வண்ணம் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் மற்றும் தேவையான அனைத்து வார்டுகளிலும் புதிதாக எல்இடி விளக்குகள் அமைப்பேன் என்று உறுதி கூறியபடி தூத்துக்குடி மாநகருக்கு 2887 எல்இடி விளக்குகள் அமைக்க தமிழகம் முதலமைச்சர் முக.ஸ்டாலின் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு, ஆகியோர் நிதி ஓதுக்கீடு செய்துள்ளனர். இதற்கு உறுதுணையாக இருந்த திமுக துணை பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோருக்கு எனது சா...

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை மையத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கீதா ஜீவன்

ஷ்யாம் நியூஸ் 25.10.2022 தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை மையத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கீதா ஜீவன்  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவில் புதிய அறுவை சிகிச்சை மையத்தினை திறந்து வைத்தார் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை அமைச்சர்  கீதா ஜீவன். விபத்து காலத்தில் ஏற்படும் அறுவை சிகிச்சையை உடனடியாக செய்து விபத்துக்குட்பட்டவர்களை பாதுகாக்கும் வகையில் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பிலான நவீன அறுவை சிகிச்சை மையம் மற்றும் 8 நவீன படுக்கைகள் உள்டக்கியதாகும் இனி அவசர சிகிச்சையில் பிரிவில் சேர்க்கப்படும் பயணிகள் இனி மேல் தளத்திற்கு செல்லாமல் கீழ்த்தரத்திலேயே மருத்துவம் அளிக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் அவசர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் ராஜவேல் முருகன் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

24 மணி நேரத்திற்குள் நிவாரணை உதவித்தொகை வழங்கிய தூத்துக்குடி வட்டாட்சியர்.

 ஷ்யாம் நியூஸ் 23.10.2022 24 மணி நேரத்திற்குள் நிவாரணை உதவித்தொகை வழங்கிய தூத்துக்குடி வட்டாட்சியர் .   தூத்துக்குடி வட்டம் புதுக்கோட்டை குறுவட்டம்  கோரம்பள்ளம் பகுதி 1 கிராமம் வடக்கு காலாங்கரையை சேர்ந்த கந்தன் மகன் முருகேசன்  என்பவருக்கு சொந்தமான பசுமாடு(1) நேற்று(22.10.22) பிற்பகல் 3.30 மணியளவில்  மழையுடன் கூடிய இடி, மின்னல் தாக்கியதில்   கோரம்பள்ளம் குளம் கரையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு இறந்து விட்டது தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் ஆய்வாளர் சந்தனராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு இது தொடர்பாக புதுக்கோட்டை கால்நடைத்துறை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர் கால்நடை மருத்துவர் மூலம் இறந்த பசுமாடு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது பின்னர் பாதிக்கப்பட்ட மாட்டின் உரிமையாளருக்கு தமிழ்நாடு அரசு வழங்கும்  நிவாரணத்உதவித்தொகை ரூ.30,000 காசோலையாக இன்று தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார் வழங்கினார் முதுநிலை வருவாய் ஆய்வாளர் டென்சி புதுக்கோட்டை ஆய்வாளர் சந்தன்ராஜ் கோரம்பள்ளம் நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந...

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் வேண்டுகோள்

ஷ்யாம் நியூஸ் 20.10.2022 நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் வேண்டுகோள். தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணையில் உண்மையை வெளிக்கொண்டு வந்த அருணா ஜெகதீசனுக்கு நன்றி தெரிவித்தனர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் தூத்துக்குடியில் மே 22 2018 இல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினரால் பொதுமக்கள் 15 நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டிருந்தார் அந்த விசாரணை நேற்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது இதில் காவல்துறை அத்துமீறி பொதுமக்களை சுட்டது அம்பலம் ஆகியுள்ளது இதுகுறித்து இன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த போது. நியாயமான மக்கள் போராட்டத்தை கொலைகளமாக மாற்றி 15 உயிகளை காவு வாங்கிய துப்பாக்கி சூடு தொடர்பாக நீதி அரசர் அருணா ஜெகதீசன் நடத்திய விசாரணை 4 ஆண்டுகளுக்கு பிறகு முடிவ...

தூத்துக்குடி சிவன் கோவில் தேரோட்டம் வடம் பிடித்து அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.

 ஷ்யாம் நியூஸ் தூத்துக்குடி. அக்.20, தூத்துக்குடி சிவன் கோவில் தேரோட்டம் வடம் பிடித்து அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர். தூத்துக்குடியில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீசங்கரராமேஸ்வரர் திருக்கோவிலின் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.  கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் பூஜையுடன் நடைபெற்ற நிலையில், இன்று ஐப்பசி தேரோட்டத்தை முன்னிட்டு யானை, குதிரை, சிலம்பாட்டம், வால்சுருள் விளையாட்டு, தப்பாட்டம், கரகாட்டம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சியுடன் பெரிய தேரில் பாகம்பிரியாள் அம்பாள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தீபாராதனை காட்டினார். பக்தர்களின் கரகோஷம் விண்ணை முட்டும் அளவிற்கு ஒலித்தது. தேர் துவங்கிய நிலையில் இருந்து தெற்கு ரதவீதி, மேல ரத வீதி, வடக்கு ரதவீதி, கீழ ரத வீதி வழியாக  தேர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிவன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர்...

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக மக்களுக்கான பணிகளை செய்து வருகிறது. 37ம் ஆண்டு மாவட்ட தொடக்க நாளை முன்னிட்டு மரக்கன்று நட்டி மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

 ஷ்யாம் நியூஸ் 20.10.2022 தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக மக்களுக்கான பணிகளை செய்து வருகிறது. 37ம் ஆண்டு மாவட்ட தொடக்க நாளை முன்னிட்டு மரக்கன்று நட்டி மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்      தூத்துக்குடி ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்ததை 1986ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமசந்திரன் நெல்லை மாவட்டத்திலிருந்து பிரித்து வஉசிதம்பரனார் மாவட்டம் என புதிய மாவட்டத்தை துவக்கி வைத்தார். 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய மாவட்டமாக இருந்த வஉசிதம்பரனார் என்ற பல பெயர்கள் கொண்டவை நீக்கப்பட்டு தமிழகம் முழுவதும் பின்னர் தலைநகரின் பெயரை குறிப்பிடும் வகையில் மாற்றப்பட்டு தற்போது 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ள தூத்துக்குடி மாவட்டம் உருவான 37ம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்கு சொந்தமான புல்தோட்டம் நுண்உரக்கிடங்கு மைய வளாகத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி 25 மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்தார்.    ...

தூத்துக்குடிக்கு அழகு சேர்க்கும் நம்ம தூத்துக்குடி செல்பி பாயின்ட் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

 ஷ்யாம் நியூஸ் 20.10.2020 தூத்துக்குடிக்கு அழகு சேர்க்கும் நம்ம தூத்துக்குடி செல்பி பாயின்ட் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு தூத்துக்குடி மாநகராட்;சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்றுக்கொண்ட பின் 60 வார்டுகளிலும் உள்ள குறைகளை தனது நேரடி கவனத்திற்கு வருவதை குறிப்பேடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அந்த குறைகளை தீர்த்து வைக்கும் பணிகளை பாரபட்சமின்றி செய்து வருகிறார். அதே போல் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்காத வகையில் புதிய கால்வாய்கள் கட்டப்பட்டு அதற்கு தடையாக இருந்த சின்னஞ்சிறு ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வரும் நிலையில் மேம்பாலம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நம்ம தூத்துக்குடி என்ற செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டு பணி நடைபெற்று வருகின்றது.     அப்பணியை ஆய்வு செய்தபின் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாகவும் வளர்ச்சியடைந்த மாநிலமாகவும் இருக்க வேண்டும். என்ற தொலை நோக்கு திட்டத்தை உருவாக்கி 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டுமக்களுக்காக உழைக்கும் முதல்வர் வழ...

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் சார்பாக தூய்மைப்பணி நடைப்பெற்றது

 ஷ்யாம் நியூஸ் 19.10.2022 தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் சார்பாக தூய்மைப்பணி நடைப்பெற்றது தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்ட அணி எண் 47 மற்றும் 57 சார்பாக தூய்மைப்பணித் திட்டம் டி.சவேரியார்புரம் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் இன்று (19.10.2022) நடைபெற்றது.   35 நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் மற்றும் இரண்டு பேராசிரியர்கள் முனைவர் தே.சண்முகப் பிரியா, வேதியியல் துறைப்பேராசிரியர் மற்றும் முனைவர் ஜெ.வசந்த சேனா, ஆங்கிலத்துறைப் பேராசிரியர் ஆகியோர் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். 16.5 கிலோ மக்கும,; குப்பைகள் 68 கிலோ மக்காத குப்பைகள் (நெகிழிப்பைகள் உள்பட) நாட்டுநலப்பணித்திட்ட மாணவிகளால் அகற்றப்பட்டு உரக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டது. இறுதியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றம்  தலைவர் ரா.சரவணகுமார் தூய்மைப்பணியில் ஈடுபட்ட ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவிகளின் சேவையைப் பாராட்டி நாட்டுநலப்பணித் திட்ட அணிக்கு சான்றிதழ் வழங்கினார்.  தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவி...

முதலாளியும் தொழிலாளியும் இரு கண்கள் போன்றவர்கள் என போனஸ் வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

 ஷ்யாம் நியூஸ் 19.10.2022 முதலாளியும் தொழிலாளியும் இரு கண்கள் போன்றவர்கள் என போனஸ் வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். தூத்துக்குடியின்; பிரதான தொழிலாக உப்பு உற்பத்தி இருந்து வருகிறது. உப்பிற்கு பெயர் பெற்ற தூத்துக்குடி உப்பு இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.  தூத்துக்குடியில் தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க உறுப்பினர்களுக்கு சங்க பொதுச்செயலாளரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி 135 பேர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கினார்.  பின்னர் உப்பு தொழிலாளர்கள் மத்தியில் பேசுகையில் இந்த சங்கம் உருவாகிய காலத்திலிருந்து மறைந்த எனது தந்தை தொடர்ந்து பணியாற்றி தொழிலாளர்களின் தோழனாக வாழ்ந்து மறைந்தார். அவரது காலத்திற்கு பின்பு இந்த பொறுப்பேற்ற பின் கடந்த பல ஆண்டுகளாக இந்த பணியை நான் செய்து வருகிறேன். தொழிலாளர்கள் நலன் முக்கியம். அதே போல் முதலாளிகளின் நலனும் முக்கியம் என்று கருதி நாம் பணியாற்ற வேண்டும். முதலாளியும் தொழிலாளியும் இருகண்களைப் போன்றவர்கள். தொழிலாளர்கள் பணி செய்வதில் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். உங்களத...

கராத்தே பிரீமியர் லீக் போட்டியில் ஸ்பிக் நகர் மாணவர்கள் சாதனை....

 ஷ்யாம் நியூஸ் 19.10.2022 கராத்தே பிரீமியர் லீக் போட்டியில் ஸ்பிக் நகர் மாணவர்கள் சாதனை....  மதுரை காமராஜர் பல்கலைக்கழக உள் அரங்கத்தில்  நடைபெற்ற 2வது பிரீமியர் லீக் கராத்தே   போட்டியில் தமிழகத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.   இப்போட்டியின் தலைமை நடுவராக சோபுக்காய் கோஜுரியு கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி.   சுரேஷ்குமார் செயல்பட்டார் .இதில் ஸ்பிக்நகரை சேர்ந்த மாணவர்கள்  மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா தலைமையில்  கட்டா மற்றும் சண்டை பிரிவில் பங்கேற்று 8 தங்கப்பதக்கம் 8 வெள்ளிப் பதக்கம் 6 வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர் .வெற்றி பெற்ற  மாணவர்களை தூத்துக்குடி மாவட்ட  சோபுக்காய் கோஜுரியு கராத்தே சங்கத்தின் கராத்தே தலைவர்  சென்சாய் செந்தில் மாவட்டத் துணைத் தலைவர் பாலாஜி, மற்றும் பெற்றோர் பாராட்டினர்.

தமிழக முதல்வர் கனவை நனவாக்க பள்ளி மாணவ, மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் - மேயர் ஜெகன் பெரியசாமி உருக்கமான பேச்சு

 ஷ்யாம் நியூஸ் 18.10.2022 தமிழக முதல்வர் கனவை நனவாக்க பள்ளி மாணவ, மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் - மேயர் ஜெகன் பெரியசாமி உருக்கமான பேச்சு தமிழக அரசின் 2021-2022ம் ஆண்டிற்கான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள எஸ்.ஏ.வி, காரப்பேட்டை பள்ளியில் சைக்கிள் வழங்கியப்பின் கால்டுவெல் பள்ளியில் 159 மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.  பின்னர் பேசுகையில் இந்த பள்ளி 231 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது வெள்ளைக்காரன் ஆட்சிச் செய்த காலத்திற்கு முன்பே கால்டுவெல் என்பவரால் நடத்தப்பட்டு, வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத்திட்டத்தைக் கொண்டு வந்தார். கலைஞர் ஆட்சியில் அது விரிவுப்படுத்தப்பட்டது. தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் 1 முதல் 5 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை துவக்கியுள்ளார். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 21 பள்ளிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  அதேபோல் பெண்களுக்கு பாதுகாப்பு, போதை ஒழிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்வுக...

தூத்துக்குடியில் மூன்று ஜோடிக்கு கூட்டுத்திருமணம் நடைபெற்றது.

 ஷ்யாம் நியூஸ் 18.10.2022 தூத்துக்குடியில் மூன்று ஜோடிக்கு கூட்டுத்திருமணம் நடைபெற்றது.   தூத்துக்குடி மறைமாவட்டம் பாத்திமாநகர் பரிசுத்த பாத்திமா அன்னை ஆலயத்தில் 64ம் ஆண்டு மகோன்னத பெருவிழாவை முன்னிட்டு மண இணையர்களுக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு பீட்டர் ரெம்ஜியூஸ் தலைமையில் கூட்டுத்திருமண திருப்பலி நடைபெற்றது. அதில் சில்வஸ்டர் சூர்யா, பிராங்கோ கிராஸ்வின், அகஸ்டின் சுபர்னா ஆகிய மூன்று மண இணையர்களுக்கு 26 கிராம் தங்கத்தாலி கட்டில் பீரோல், வாஷிங்மிஷின் பிரிட்ஜ் என சுமார் 13 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் நடைபெற்ற மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பரதர் நல தலைமை சங்க தலைவர் டாக்டர் ரெனால்டு வில்லவராயர் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரைட்டர், உள்ளிட்ட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள். அதன்பின் அசைவ விருந்து வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை பாத்திமா நகர் பங்கு இறைமக்களோடு இணைந்து இருதய சபை அருட்சகோதரிகள் பங்குதந்தை ஜேசுதாஸ், பர்னாந்து உதவி பங்குதந்தை விமல்ஜென், ஓலிபர், சில்வா, செ...

திருசெந்தூர் சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு _ஆணையர் தகவல்.

 ஷ்யாம் நியூஸ் 17.10.2022 திருசெந்தூர் சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு _ஆணையர் தகவல். திருசெந்தூர் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு சிறப்பு ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக அருள்மிகு திருசெந்தூர் முருகன் கோவில் ஆணையர் தெரிவித்துள்ளார் அவர் தெரிவித்த அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டம் , திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் , ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் பாடல் பெற்ற சிறப்பு ஸ்தலம் ஆகும். கந்த சஷ்டி திருவிழா இத்திருக்கோயிலில் பிரசித்தி பெற்ற முக்கிய திருவிழாவாக நடைபெற்று வருகிறது. மேற்படி திருவிழாவில் சுமார் 5 இலட்சம் பக்தர்கள் விரதமிருந்து சூரசம்ஹார திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.  இந்நிலையில் , அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 28.09.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி மூலம் சுமார் 300 கோடி செலவில் பெருந்திட்ட வரைவு (Master Plan) பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மேற்படி பணி அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து , பணிகள் துவக்கப்பட்டு பழைய கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பண...

தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

 ஷ்யாம் நியூஸ் 17.10.2022 தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.       தூத்துக்குடி தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை தூத்துக்குடி மாவட்ட நூலக அலுவலகம் சார்பில் இராஜா ராம் மோகன்ராய் 250வது பிறந்தநாளை முன்னிட்டு பெண்கள் மேம்பாடு குறித்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி டூவிபுரம் மாவட்ட நூலக அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முக்கிய சாலைகள் வழியாக சென்ற 250 மாணவிகளின் பேரணி மாவட்ட கல்வி அலுவலகத்தை சென்றடைந்தது. பெண்கள் மேம்பாடு குறித்து பள்ளி மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற பேச்சுபோட்டியில் சாதி ஓழிப்பு தலைப்பில் செல்வி ரோகிணி பெண்களுக்கு சொத்துரிமை செல்வி இசக்கியம்மாள் விதவை மறுமணம் செல்வி பிரியதர்ஷினி, பெண்கல்வி செல்வி சுவீகா குழந்தை திருமணம் தடை வைஷ்ணவி பேசினார்கள். விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நிறைவு செய்து பள்ளி மாணவியர்களுக்கு மாவட்...

தூத்துக்குடியில் அதிமுக பொன்விழா நிறைவு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படத்திற்கு எஸ்.பி.சண்முகநாதன் மலர் தூவி மரியாதை

 ஷ்யாம் நியூஸ் 17.10.2022 தூத்துக்குடியில் அதிமுக பொன்விழா நிறைவு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படத்திற்கு எஸ்.பி.சண்முகநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆணையின் படி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் 50வது ஆண்டு பொன்விழா நிறைவு 51வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி டூவிபுரம் மாவட்ட அலுவலகம் முன்பு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் அலங்கரிக்கப்;பட்ட எம்.ஜி.ஆர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிpவித்து மலர் தூவி மரியாதை செய்து இனிப்பு வழங்கினார். பின்னர் பழைய மாநகராட்சி வளாகத்திலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.   நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மாநில மருத்துவ அணி துணைச்செயலாளர் ராஜசேகர், அவைத்தலைவர் திருபாற்கடல், மாவட்ட துணை செயலாளர் சந்தனம், இணைச்செயலாளர் செரினா பாக்கியராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், தொழிற்சங்க செயலாளர் ராஜா, இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாணவரணி செயல...

மாப்பிள்ளையூரணி பகுதியில் பழுதடைந்த சாலைகளை சண்முகையா எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.

 ஷ்யாம் நியூஸ் 16.10.2022 மாப்பிள்ளையூரணி பகுதியில் பழுதடைந்த சாலைகளை சண்முகையா எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராமசபை கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அக்கூட்டத்தில் பொதுமக்கள் பலர் பல்வேறு பகுதி சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. அதை சரிசெய்து பொதுமக்கள் நலன் காக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். அக் கோரிக்கையை சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் தெரிவித்திருந்த நிலையில் டேவிஸ்புரம் முதல் சிலுவைப்பட்டி சாலை, தாளமுத்துநகர் முதல் சவேரியார்புரம் சாலை, மாதாநகர் முதல் வண்ணார்பேட்டை, மாதாநகர் முதல் ராஜபாளையம் சாலை, சோட்டையன் தோப்பு முதல் கேவிகே சாமி நகர் சாலை, தொழுநோய் மருத்துவமணை ஆரோக்கியபுரம் சாலை ஆகிய 6 பகுதிகளில் புதிய சாலைகள் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.     பின்னர் சண்முகையா எம்.எல்.ஏ கூறுகையில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் மக்கள் நலன் தான் எனக்கு முக்கியம் என்று தினமும் 24 மணிநேரத...

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு பகுதிகளில் ஆய்வு

 ஷ்யாம் நியூஸ் 16.10.2022 தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு பகுதிகளில் ஆய்வு தூத்துக்குடி மாநகர பகுதியில் மழை நீர் தேங்காதவாறு வடிகால் அமைக்கும் பணியை துரிதபடுத்த மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். மழைகாலம் வந்துவிட்டாலே தூத்துக்குடி மக்கள் மழை தண்ணீர் வடியாமல் தவிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் விட்டு விட்டதால் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் அதிக அளவில் மழை தண்ணீரில் தத்தளித்தனர். குறிப்பாக பிரையண்ட்நகர், சிதம்பரநகர், முத்தம்மாள்காலனி, ரஹ்மத்நகர், குமரன்நகர், ஸ்டேட்பேங்காலனி, அம்பேத்கர்நகர், எஸ்.எஸ்.மாணிக்கபுரம், கதிர்வேல்நகர், தபால்தந்திகாலனி, திரவியரத்தினம்நகர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  இந்தநிலையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையினால் இப்பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக மழை நீர் தேங்கி நின்றது. இதனையடுத்து  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாநகருக்கு நேரடியாக வந்து பாதிக...

மோடி ஒரு ஊதாரி !பொதுத்துறை நிறுவனத்தை விற்றதுதான் மோடியின் சாதனை தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கடும்தாக்கு

 ஷ்யாம் நியூஸ் 14.10.2022 மோடி ஒரு ஊதாரி !பொதுத்துறை நிறுவனத்தை விற்றதுதான் மோடியின் சாதனை தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கடும்தாக்கு        தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், மேகநாதன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.      வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில் முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி என்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும் ஏழை பணக்காரன் பாகுபாடு இல்லாமல் இருக்க வேண்டும். ஜாதி மதம் பிரிவினை இருக்க கூடாது. தொழில்வளம் பெருகுவதற்கு பல புரிந்துணர்வு ஓப்பந்தம் போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் பர்னிச்சர் பார்க் உள்பட பல தொழில்கள் வரவுள்ளன. அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவா...

ஆரோக்கியமான வாழ்வுக்கு பாரம்பரிய உணவு அவசியம் கீதாஜீவன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

 ஷ்யாம் நியூஸ் 13.10.2022 ஆரோக்கியமான வாழ்வுக்கு பாரம்பரிய உணவு அவசியம் கீதாஜீவன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு       தூத்துக்குடி சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட உணவு பாதுகாப்பு திட்ட நியமண அலுவலர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி வரவேற்புரையாற்றினார். ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்;ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்ட விளக்கவுரையாற்றினார்.      பாரம்பரிய உணவு திருவிழாவை பார்வையிட்டு சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் எதிர்கால வாழ்க்கை எல்லோருக்கும் நல்ல முறையில் அமைவதற்கு உடல் ஆரோக்கியம் முக்கியம் அதற்கு பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் சத்தான ஆகாரம் எது என்று பார்த்து சாப்பிட வேண்டும் இதுபோன்ற சில குறைபாடுகள் இருப்பதால் 51சதவீத பெண்களுக்கு இரத்த சோகை பாதிப்பு ஏற்...

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் கனிமொழி எம்.பிக்கு உற்சாக வரவேற்பு

 ஷ்யாம் நியூஸ் 11.10.2022 தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் கனிமொழி எம்.பிக்கு உற்சாக வரவேற்பு தூத்துக்குடி திமுக துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கனிமொழி எம்.பி, சென்னையில் இருந்து விமானம் மூலம் வாகைக்குளம் வந்தடைந்த அவருக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் எம்எல்ஏ மார்க்கண்டேயன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலையில் பி;ன்னர் மாநகர எல்லையான எப்சிஐ குடோன் அருகில் ராஜஸ்தான் மேளதாளத்துடன் மகளிர் அணி சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கி உற்சாகமாக வரவேற்பளித்தனர்.      இந்நிகழ்ச்சியில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சந்திரசேகர், துணை மேயர் ஜெனிட்டா மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்;சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட...

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி பங்கேற்பு அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

ஷ்யாம் நியூஸ் 10.10.2022  திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி கோவில்பட்டியில் கனிமொழி எம்.பி பங்கேற்பு அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை    தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்திடும் வகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் கட்ட சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. அதன்படி 13.10.2022 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள திடலிலும் 14.10.2022 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலிலும், பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.    இக்கூட்டங்களில் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி. மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத...

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு இந்து முன்னணி சார்பில் பாராட்டு

 ஷ்யாம் நியூஸ் 10.10.2022 தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு இந்து முன்னணி சார்பில் பாராட்டு         தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி இணைந்து நடத்திய தசரா திருநாள் அனைத்து அம்பாள்களின் அருட் சப்பர பேரணி மாவிளக்கு ஊர்வலம் கடந்த 7ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக இந்து முன்னணி சார்பில் சப்பரம் வீதி உலா வரும் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் தூய்மை பணி மற்றும் சாலை சீரமைப்பு சப்பரம் வந்து செல்வதற்கு வசதியாக சாலையோரங்களில் இருந்த மரக்கிளைகளை அகற்றி தருமாறு இந்து முன்னணி சார்பில் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி தரும் வகையில் நேரடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு இந்துகளில் முக்கிய நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு பாதிப்பின்றி செய்து கொடுத்த மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை மாநகராட்சி அலுவலகத்தில் சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம்பட்டர் சப்பர பேரணி கமிட்டி தலைவர் தனபாலன், அமைப்பாளர் சிவக்குமார் பொருளாளர் இசக்கி முத்துக்குமார், பாலசரஸ்வதி, சிட்பன்ட்ஸ் பாலு, கவின் சண்முகம், ஆகியோர் இந்து அமைப்புகளின் சார்பில் சால்வை அணிவித்து பிரசாதம்...

தூத்துக்குடியில் தனக்கு தானே ஊதியத்தை உயர்த்திய தலமை ஆசிரியை!ஊழலை மறைக்க பள்ளி ஆசிரியர்களை பலிகடா ஆக்க முயற்ச்சியா?

ஷ்யாம் நியூஸ்  10.10.2022 தூத்துக்குடியில் தனக்கு தானே ஊதியத்தை உயர்த்திய தலமை ஆசிரியை!ஊழலை மறைக்க பள்ளி ஆசிரியர்களை பலிகடா ஆக்க முயற்ச்சியா? தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு உட்பட்ட  விக்டோரியா CBSE பள்ளி மற்றும்  நிர்வாகம் தற்சமயம் பழைய நிர்வாகிகளான SDK ராஜனிடம் இருந்து மாறி  புதிதாக தேர்வு செய்யப்பட்ட  நிர்வாகிகள் DFS கிப்சன் தலமையில் இயங்கி வருகிறது.SDK ராஜன் அணியை சார்ந்த  VCS  பள்ளியின் தலைமை ஆசிரியர் தலமையில் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர், வாட்ச்மேன்,  மற்றும் உதவியாளர்கள் ஆகியோருக்கு இரண்டு மாதம் சம்பளம் வழங்கவில்லை என கூறி    பள்ளியில் வேலை செய்யும் அத்துணை ஆசிரியர்களும் இன்று பள்ளிக்கு வெளியே போராட்டம் நடத்தினார் பின்பு காவல்துறையினர்  பேச்சுவார்த்தைக்கு  பின்னர்  அது  உள்ளிருப்பு போராட்டமாக மாறியது  .கடந்த SDK ராஜன் ஆதரவாளராக இருந்து பணிபுரிந்து வரும் VCS பள்ளி தலைமை ஆசிரியர் ஷோபியா செல்வராணி கடந்த காலங்களில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல முறைகேடுளில் ஈடுபட்டுள்ளதாக நாசரேத் திருமண்டல நி...

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி புதிய கால்வாய் அமைக்கும் பணி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

 ஷ்யாம் நியூஸ் 09.10.2022 தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி புதிய கால்வாய் அமைக்கும் பணி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு தூத்துக்குடி மாநகராட்சியாக 2008ல் தரம் உயர்த்தப்பட்ட பிறகு 5 ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. 2011ல் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் புறநகர் பகுதியில் இணைக்கப்பட்டு 60 வார்டுகள் உள்ளடக்கிய பகுதிகளாக மாநகராட்சி செயல்பட்டது. இதற்கிடையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் புதிய திட்டங்கள் வகுக்கப்படாமல் வளர்ச்சி பணிகளும் பாதிக்கப்பட்டன. இதற்கிடையில் மாநரகாட்சி பகுதியான பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலணி, ரஹ்மத்நகர், தனசேகரன் நகர், உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மழையால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் வரமுடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கிய நிலையில் பைபர் படகு மூலம் பலர் மீட்கப்பட்டனர். சில குடும்பங்களுக்கு அரசின்சார்பில் தேவையான உதவிகளை செய்தனர். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் நடை...

தூத்துக்குடி 3ம் கேட் மேம்பாலம் பணி நிறைவு பெற்று 11ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு

 தூத்துக்குடி 3ம் கேட் மேம்பாலம் பணி நிறைவு பெற்று 11ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு தூத்துக்குடி மாநகரரில் முக்கிய பிரதான சாலையான 3ம் கேட் மேம்பாலம் இருந்து வருகிறது. அதில் கனரக இலகு ரக வாகனங்கள் உள்பட பொதுமக்கள் நான்கு பகுதிகளிலும் சென்று பயன்படுத்தி வந்தனர். அதில் சில விரிசல்கள் விழுந்ததையடுத்து வரும் முன் காப்போம் திட்டம் போல் அதை சீர் செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரி;க்கை வைத்தனர். இதனையடுத்து பாலம் சீரமைக்கும் பணி இரவு பகலாக பணியாளர்களை கொண்டு நடைபெற்று வருகிறது.  அப்பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.      அதே போல் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும் விரைவாக மழைகாலத்திற்குள் முடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பாலம் பணிகள் நடைபெறுவதால் 2ம் கேட் 4ம்கேட் 1ம் கேட் ஆகிய பகுதிகளையும் பீச்ரோட்டையும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்  4ம் கேட் மேம்பாலம் விரைவாக முடிக்கப்பட்டு வரும் 11ம் தேதி திறக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெர...

தூத்துக்குடி கருப்பசாமி கோவிலில் அன்னதானம் அமைச்சர் கீதாஜீவன்

ஷ்யாம் நியூஸ் 07.10.2022  தூத்துக்குடி கருப்பசாமி கோவிலில் அன்னதானம் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி 1ம் கேட் அருகேயுள்ள 18ம் படி கருப்பசாமி கோவிலில் தசரா நிறைவுநாளன்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பின்னர் நடைபெற்ற அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.      நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பிரதிநிதி ராஜ்குமார். கவுன்சிலர் சரண்யா, அவைத்தலைவர் மாயாண்டி, வட்டச்செயலாளர் சாமிநாதன், துணைச்செயலாளர்கள் கந்தன், ஸ்டீபன் அருள்தாஸ், லட்சுமி, பொருளாளர் சரவணன், வட்டப்பிரதிநிதிகள் ராம்வெங்கடேஷ், ஷெல்டன், மோகன்ராஜ், சந்தனராஜ், மைதீன் பாட்ஷா, நிர்வாகிகள் முகம்மது பாஷில், ஆசிக் மைதீன், சும்சுகனி, சுடலைமாரியப்பன், மாரியப்பன், சந்தனராஜ், முத்துகிருஷ்ணன், ஆவுடையப்பன், மெடிக்கல் பாலு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் வர்த்தக அணி தலைவர் வக்கீல் டேவிட் பிரபாகரன், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், முன்னாள் கவுன்சிலர்கள் மீனாட்சி சுந்தரம்,  செந்தில்குமார், உள்பட பல...

தூத்துக்குடியில் சூரசம்ஹார விழா மூன்று கோவில்களில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

 ஷ்யாம் நியூஸ் 07.10.2022 தூத்துக்குடியில் சூரசம்ஹார விழா மூன்று கோவில்களில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு தூத்துக்குடி தசரா திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாதாரணைகள் நடைபெற்று 10 நாள் நடைபெற்ற சூரசம்ஹாரவிழாவில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார்.        தூத்துக்குடியில் பிரதிபெற்ற தெப்பகுளம் மாரியம்மன் கோவில், முத்தாரம்மன் கோவில், கிராமதேவதை மேலூர் பத்திரகாளியம்மன் ஆகிய கோவில்களில் நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில் நிறைவு நாளான சூரசம்ஹார விழா நடைபெற்றது. அத்திருக்கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.        விழாவில் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், வட்ட செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், கங்காராஜேஷ், முத்தாரம்மன் கோவில் தலைவர் சோமநாதன், செயலாளரும் மாவட்ட திமுக பிரதிநிதியுமான சக்திவேல், பொருளாளரும் அதிமுக வட்டச்செயலாளருமான திருச்சிற்றம்பலம், முன...