H ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும்.ஜனநாயக மக்கள் எழுச்சி கழக மாநில தலைவர் காயல் அப்பாஸ் கண்டண அறிக்கை!
ஹெச். ராஜாவை குண்டர் சட்டத்தில் உடனடியாக கைது செய்க . ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா திட்டமிட்டு, கலவரத்தை தூண்டும் வகையில், நீதிமன்ற தீர்ப்பை மீறி, சிலையை ஊருக்குள் எடுத்துச் செல்ல முயற்சித்தபோது அனுமதி மறுத்த காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசியும், இந்து விரோதி என்று பொய்யாக குற்றம் சாட்டியும், உயர்நீதிமன்றத்தை மிக தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தும் பேசியுள்ளார். ஹெச். ராஜாவின் இத்தகைய வெறியூட்டும் பேச்சுக்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
ஏற்கனவே ஹெச். ராஜா, பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென்று பகிரங்கமாக பேசியதன் விளைவாக பெரியார் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
அவர் போகிற இடங்களில் எல்லாம் குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்களை தூண்டும் வகையிலேயே பேசி வருகிற எச் ராஜாவின் இத்தகை செயல் கண்டிக்கதக்கது.
எனவே : தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து, மதவாத வன்முறையைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும் ஹெச். ராஜாவை உடடினயாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டு மென தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா திட்டமிட்டு, கலவரத்தை தூண்டும் வகையில், நீதிமன்ற தீர்ப்பை மீறி, சிலையை ஊருக்குள் எடுத்துச் செல்ல முயற்சித்தபோது அனுமதி மறுத்த காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசியும், இந்து விரோதி என்று பொய்யாக குற்றம் சாட்டியும், உயர்நீதிமன்றத்தை மிக தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தும் பேசியுள்ளார். ஹெச். ராஜாவின் இத்தகைய வெறியூட்டும் பேச்சுக்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
ஏற்கனவே ஹெச். ராஜா, பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென்று பகிரங்கமாக பேசியதன் விளைவாக பெரியார் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
அவர் போகிற இடங்களில் எல்லாம் குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்களை தூண்டும் வகையிலேயே பேசி வருகிற எச் ராஜாவின் இத்தகை செயல் கண்டிக்கதக்கது.
எனவே : தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து, மதவாத வன்முறையைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வரும் ஹெச். ராஜாவை உடடினயாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டு மென தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.