முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமெரிக்காவில் அதிவேகமாக வளரும் தமிழ்! ஆச்சர்யமூட்டும் சர்வே முடிவுகள்!

தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ்
21 செப்டம்பர் 2018

நியூயார்க்: 

அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழிகளில் தமிழ் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. அதேசமயம் எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் தமிழ் வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்கன் கம்யூனிட்டி சர்வே என்று அழைக்கப்படும் சர்வே கடந்த வருடம் டிசம்பரில் நடத்தப்பட்டது.

 தற்போது இதன் சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த முறை அங்கு மொழி சார்ந்த சர்வேக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள 30.5 கோடி மக்களில் மொத்தம் 21.8 சதவிகித மக்கள் ஆங்கிலம் அல்லாத மொழிகள் பேசுகிறார்கள். அதாவது சுமார் 6.5 கோடி மக்கள் பிரென்ச், ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகள் பேசுகிறார்கள். ஹிந்தியின் நிலை இந்த 6.5 கோடி பேரில் 20.6 சதவிகிதம் மக்கள், அதாவது 8.63 லட்சம் பேர் ஹிந்தி பேசுகிறார்கள். இந்திய மொழிகளில் இந்திதான் அமெரிக்காவில் அதிகம் பேசப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக குஜராத்தி உள்ளது. அதன்படி 4.34 லட்சம் பேர் அமெரிக்காவில் குஜராத்தி பேசுகிறார்கள். தெலுங்கு சாதனை தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை வேகவேகமாக அமெரிக்காவில் வளர்ந்து வருகிறது. 

அதன்படி அமெரிக்காவில் தற்போது 4.15 லட்சம் பேர் தெலுங்கு பேசுகிறார்கள். இது 84.5 சதவிகித வளர்ச்சி ஆகும். அமெரிக்காவில் வேகமாக வளரும் இந்திய மொழிகளில் தெலுங்குதான் முதலிடம் பிடித்து இருக்கிறது. 

தமிழ் என்ன இடம் இதில் தமிழ் பிடித்து இருக்கும் இடம்தான் வித்தியாசமானது. இந்தியாவில் இருந்து மட்டும் சென்று இருக்கும் தமிழர்களை கணக்கில் கொள்ளாமல் சிங்கப்பூர், மலேசியா, இலங்கையில் இருந்து அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களை கணக்கில் கொண்டால் தமிழ் மொழி மூன்றாம் இடம் பிடிக்கிறது. அதன்படி 4.20 லட்சம் மக்கள் அமெரிக்காவில் தமிழ் பேசுகிறார்கள். வளர்ச்சி ஆனால் வளர்ச்சியின் அடிப்படையில் அமெரிக்காவில் தமிழும் தெலுங்கும்தான் வேகமாக வளர்ந்து வருகிறது. 
அங்கு தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை 60 சதவிகிதம் வளர்ந்து இருக்கிறது. தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை 84.5 சதவிகிதம் வளர்ந்து உள்ளது. ஹிந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை 45 சதவிகிதம் வளர்ந்து உள்ளது. குஜராத்தி பேசும் மக்களின் எண்ணிக்கை 22 சதவிகிதம் வளர்ந்து இருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...