முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அணு ஆயுத ஒழிப்பு: "ஏவுகணை தளத்தை மூட ஒப்புக்கொண்டது வடகொரியா"

19sep2018
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்காக வட கொரிய தலைநகரில் இரு நாட்டு உயர் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது அந்த சந்திப்பின்போது, கிம் ஜாங்-உன், தனது நாட்டின் முக்கிய ஏவுகணை சோதனை மற்றும் ஏவுதளங்களை மூட ஒப்புக் கொண்டதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.
பியாங்யாங்கில் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு, அணு ஆயுத ஒழிப்பு என்ற இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மூன் ஜே இன் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தமானது, கொரிய தீபகற்பத்தில் ராணுவ அமைதியை இலக்காக கொண்ட "முன்னோக்கிய பாய்ச்சல்" என்று கிம் தெரிவித்தார்.
மேலும், விரைவில் தான் தென் கொரியத் தலைநகர் சோல் நகருக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று வட கொரிய உயர் தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்தார். அவர் கூறியது நிறைவேறினால், தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் வட கொரியத் தலைவர் ஆவார்.
கொரியாபடத்தின் காப்புரிமை

உச்சிமாநாடு: ஆணு ஆயுத ஒழிப்பு

அணு ஆயுத ஒழிப்பு என்பதே இந்த உச்சி மாநாட்டின் பிரதான நோக்கம். இந்த இலக்கை நோக்கி அமெரிக்காவும் வட கொரியாவும் இந்த ஆண்டு தொடக்கத்தில் விரிவான அடிப்படையில் உடன்பட்டன. இருந்தபோதிலும், தற்போது அதன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் தடைபட்டுள்ளன.
தற்போது தனது நிலைப்பாட்டை பியோங்யாங் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது.
தாங்சாங்-ரி ஏவுகணை பரிசோதனைத் தளம் மற்றும் ஏவுகணை தளத்தை நிரந்தரமாக மூடவும் அதை "சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் முன்னிலையில்" செய்யவும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஒப்புக்கொண்டதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்தார்.
தாங்சாங்-ரி ஏவுகணை பரிசோதனைத் தளம் மற்றும் ஏவுகணை தளத்தில் ஆய்வு செய்ய சுயாதீன ஆய்வாளர்களை அனுமதிப்பது முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுவதாக பிபிசி சோல் செய்தியாளர் லாரா பிக்கெர் கூறுகிறார்.
கொரியாபடத்தின் காப்புரிமை
தாங்சாங்-ரி ஏவுகணை தளம் அழிக்கப்படுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக கூறிய லாரா, அங்கு ஆய்வாளர்கள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.
  • தாங்சாங்-ரி தளம், 2012ஆம் ஆண்டில் இருந்து வடகொரியாவின் பிரதான ஏவுகணை தளம்.
  • அமெரிக்காவை இலக்கு வைத்து இயங்கும் வட கொரிய ஏவுகணைகளுக்கான இயந்திரங்களை பரிசோதனை செய்ய இந்த தளம் பயன்படுத்தப்பட்டது.

மேலும், வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கப்படுவதாக நம்பப்படும் யோங்பியான் அணு ஆயுத தளத்தையும் வடகொரியா மூடிவிடும். ஆனால், அமெரிக்கா சில பரஸ்பர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இத்தளம் மூடப்படும்.
கடந்த ஜூன் மாதம் அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சிங்கப்பூரில் சந்தித்தனர். அதில் அணு ஆயுத ஒழிப்பு குறித்த வேலைகளில் ஈடுபவதற்கு இரு தலைவர்களும் உறுதியளித்தனர். அதற்கு சற்று முன்பு தனது புங்க்யே-ரி அணு ஆயுத பரிசோதனை தளத்தை வடகொரியா தகர்த்தது.
கொரியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
"அமெரிக்க-வட கொரிய தலைவர்களின் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றதற்கு தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னின் முக்கியமான பங்களிப்பே காரணம்" என்று டிப்ளமேட் பத்திரிகை ஆசிரியர் அங்கித் பாண்டா பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால் உண்மையில் இந்த இழப்புகள் எதுவுமே கிம்முக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. குறுகிய காலத்திற்கு ஆயுதங்களை கைவிட வேண்டியிருக்கும். அவ்வளவுதான். ஆனால் அமெரிக்க-வட கொரியா பேச்சுவார்த்தைகளை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இது உதவும்.

மாநாட்டு முடிவுகள்: வட மற்றும் தென் கொரியா

தென்கொரியாவுக்கு வரவேண்டும் என வட கொரிய அதிபருக்கு மூன் ஜே இன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் கிம் ஜாங்-உன் தென்கொரியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.
அதுபோல 2032 கோடைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை இரு நாடுகளும் ஒன்றாக நடத்தவிருக்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ பதற்றங்களை குறைப்பது, இரு நாடுகளுக்கும் நடுவில் உள்ள ராணுவ கண்காணிப்பற்ற பகுதியில் அவ்வப்போது ஏற்படும் மோதல்களை தவிர்ப்பது போன்ற முக்கிய அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தில், தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வட கொரிய ராணுவத் தலைவரும் கையெழுத்திட்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...