முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்

தூத்துக்குடி: 19 செப் 2018 தமிழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் 
சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
 மோகன் பகவத் பேச்சு



படத்தின் காப்புரிமை

"நமது நாடு ஓர் இந்து தேசம் என்று கூறுவதால் அதில் இஸ்லாமியர்களுக்கு இடம் இல்லை என்று பொருள் ஆகிவிடாது," என்று புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
"இஸ்லாமியர்கள் வேண்டாம் என்று கூறும் நாளில் இந்துத்துவா இல்லாமல் போய்விடும்," என்றும் அவர் அந்நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு என்பது இந்நாட்டின் மனசாட்சி என்றும், ஆர்.எஸ்.எஸ் அரசியலைப்புக்கு உண்மையானதாக இருக்கிறது என்றும் பகவத் பேசினார்.




Presentational grey line

 ரஃபேல் விவகாரம்

இந்திய விமானப் படைக்கு ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைப்பதில் மத்திய அரசுக்கு ஏன் தயக்கம் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தலைமைத் தணிக்கை அலுவலகம் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றை அணுகப் போவதாகவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி கூறியுள்ளார்.


Presentational grey line

ஹாங்காங் அணியை போராடி வென்ற இந்தியா


படத்தின் காப்புரிமை

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் செவ்வாய்க்கிழமை நடந்த லீக் போட்டியில் ஹாங்காங் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.
முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பு 285 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 127 ரன்கள் எடுத்தார்.
286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது ஆட்டத்தை தொடங்கிய ஹாங்காங் அணி, மிக சிறப்பான தொடக்கத்தை பெற்றது. முதல் விக்கெட்டை எடுக்க இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை .
முதல் விக்கெட்டுக்கு 174 ரன்களை எடுத்து இந்திய அணிக்கு ஹாங்காங் அதிர்ச்சியளித்தது. பின்னர் ஹாங்காங் அணியின் விக்கெட்டுகள் வரிசையாக சரிய, இந்தியா 26 ரன்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.


Presentational grey line ஸ்டெர்லைட் ஆய்வுக்கு எதிர்ப்பு

நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை மறுபரிசீலனை செய்யக்கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தக்கூடாது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் குழு வரும் 22ஆம் தேதி முதல் ஆலையைப் பார்வையிட முடிவு செய்துள்ளது.


Presentational grey line தமிழகத்துக்கு நிலக்கரி
படத்தின் காப்புரிமை

தமிழகத்துக்கு தினமும் 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக, மாநில மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...