முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம்.ஜி.ஆர். விழாவுக்கு மு.க. ஸ்டாலின், டிடிவிக்கு அழைப்பு ஏன்?

எம்.ஜி.ஆர். விழாவுக்கு மு.க. ஸ்டாலின், டிடிவிக்கு அழைப்பு ஏன்?

  • தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ்(AMMA ARASU)
  • 25 செப்டம்பர் 2018

ஸ்டாலின்படத்தின் காப்புரிமைFACEBOOK/MK STALIN

இம்மாத இறுதியில் சென்னையில் தமிழக அரசு நடத்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆகியோர் பங்கேற்பதாக வெளியாகியுள்ள அழைப்பிதழ் அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனின் நூற்றாண்டுவிழாவை கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு எல்லா மாவட்டங்களிலும் நடத்திவந்தது. அதன் நிறைவு விழா இந்த ஆண்டு பிப்ரவரியிலேயே சென்னையில் நடந்திருக்க வேண்டும். ஆனால், அந்த விழா நடப்பது தொடர்ந்து தள்ளிப்போனது.
இந்த விழா தற்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு அரசின் ஐம்பதாண்டுப் பொன்விழா என்ற பெயரில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று வெளியான இந்த விழாவுக்கான அழைப்பிதழில் வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழி ஆகியோரது பெயரும் அ.தி.முகவுக்குப் போட்டியாக செயல்பட்டுவரும் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்த அழைப்பிதழ் வெளியானதும் சமூக வலைதளங்களில் விவாதமானதோடு தொலைக்காட்சி ஊடகங்களிலும் செய்தியானது.

எம்.ஜி.ஆர். விழாவுக்கு மு.க. ஸ்டாலின், டிடிவிக்கு அழைப்பு ஏன்?படத்தின் காப்புரிமைFACEBOOK

இதற்கு முன்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் காலகட்டத்தில் சென்னையில் அரசு விழாக்கள் நடைபெற்றாலும் தி.மு.க. உறுப்பினர்களில் பெயர்கள் பெரும்பாலும் இடம்பெற்றதில்லையென்றே சொல்லலாம். ஆனால், இப்போது இந்த நிலை மாறியிருக்கிறது.
இந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைப் பொறுத்தவரை, மற்ற மாவட்டங்களில் நடைபெற்றபோதும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றதை அரசு வட்டாரங்களில் சுட்டிக்காட்டுகிறார்கள்.
  • இந்த விழாவில் தி.மு.க. பங்கேற்குமா என்பது குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ். இளங்கோவனிடம் பிபிசி கேட்டபோது, "என்னுடைய பெயரும் அழைப்பிதழில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், என்னிடம் இது தொடர்பாகப் பேசவில்லை. விழாவில் கலந்துகொள்வது குறித்து கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும். சென்னையில் விழா நடப்பதால் எங்களது பெயர் மரபுரீதியாக இடம்பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன்" என்றார்.

டிடிவி தினகரன்
Image captionடிடிவி தினகரன்

இந்த அழைப்பிதழில் வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் தி.மு.கவினர் பெயர் இடம்பெற்றதைவிட, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கடும் மோதலில் ஈடுபட்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் பெயர் இடம்பெற்றிருப்பதுதான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
டிடிவி தினகரன் தரப்பில் இந்த அழைப்பிதழ் குறித்துக் கேட்டபோது, தங்களுக்கு இன்னும் அந்த அழைப்பிதழ் வரவில்லையென்றும் வந்தவுடன் கலந்துகொள்வது குறித்து முடிவுசெய்வோம் என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, "சென்னையில் இந்த விழா நடப்பதால், சென்னையைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அவ்வளவுதான்" என்று கூறி, சலசலப்புக்கு இப்போதைக்கு ஒரு முடிவுகட்டியிருக்கிறார்.

ஸ்டாலின்படத்தின் காப்புரிமைFACEBOOK/MK STALIN

இம்மாத இறுதியில் சென்னையில் தமிழக அரசு நடத்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆகியோர் பங்கேற்பதாக வெளியாகியுள்ள அழைப்பிதழ் அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனின் நூற்றாண்டுவிழாவை கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு எல்லா மாவட்டங்களிலும் நடத்திவந்தது. அதன் நிறைவு விழா இந்த ஆண்டு பிப்ரவரியிலேயே சென்னையில் நடந்திருக்க வேண்டும். ஆனால், அந்த விழா நடப்பது தொடர்ந்து தள்ளிப்போனது.
இந்த விழா தற்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு அரசின் ஐம்பதாண்டுப் பொன்விழா என்ற பெயரில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று வெளியான இந்த விழாவுக்கான அழைப்பிதழில் வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழி ஆகியோரது பெயரும் அ.தி.முகவுக்குப் போட்டியாக செயல்பட்டுவரும் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்த அழைப்பிதழ் வெளியானதும் சமூக வலைதளங்களில் விவாதமானதோடு தொலைக்காட்சி ஊடகங்களிலும் செய்தியானது.

எம்.ஜி.ஆர். விழாவுக்கு மு.க. ஸ்டாலின், டிடிவிக்கு அழைப்பு ஏன்?படத்தின் காப்புரிமைFACEBOOK

இதற்கு முன்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் காலகட்டத்தில் சென்னையில் அரசு விழாக்கள் நடைபெற்றாலும் தி.மு.க. உறுப்பினர்களில் பெயர்கள் பெரும்பாலும் இடம்பெற்றதில்லையென்றே சொல்லலாம். ஆனால், இப்போது இந்த நிலை மாறியிருக்கிறது.
இந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைப் பொறுத்தவரை, மற்ற மாவட்டங்களில் நடைபெற்றபோதும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றதை அரசு வட்டாரங்களில் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இந்த விழாவில் தி.மு.க. பங்கேற்குமா என்பது குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ். இளங்கோவனிடம் பிபிசி கேட்டபோது, "என்னுடைய பெயரும் அழைப்பிதழில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், என்னிடம் இது தொடர்பாகப் பேசவில்லை. விழாவில் கலந்துகொள்வது குறித்து கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும். சென்னையில் விழா நடப்பதால் எங்களது பெயர் மரபுரீதியாக இடம்பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன்" என்றார்.

டிடிவி தினகரன்
Image captionடிடிவி தினகரன்

இந்த அழைப்பிதழில் வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் தி.மு.கவினர் பெயர் இடம்பெற்றதைவிட, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கடும் மோதலில் ஈடுபட்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் பெயர் இடம்பெற்றிருப்பதுதான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
டிடிவி தினகரன் தரப்பில் இந்த அழைப்பிதழ் குறித்துக் கேட்டபோது, தங்களுக்கு இன்னும் அந்த அழைப்பிதழ் வரவில்லையென்றும் வந்தவுடன் கலந்துகொள்வது குறித்து முடிவுசெய்வோம் என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, "சென்னையில் இந்த விழா நடப்பதால், சென்னையைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அவ்வளவுதான்" என்று கூறி, சலசலப்புக்கு இப்போதைக்கு ஒரு முடிவுகட்டியிருக்கிறார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...