2 மணி நேரங்களுக்கு முன்னர்
ஊழல் குற்றச்சாட்டில் பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதமாக சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் நீதிமன்றம்.

நவாசுடன் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள அவரது மகள் மரியமுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நவாசின் மனைவி குல்சூம் நவாஸ் கடந்த வாரம் லண்டனில் இறந்த நிலையில் இவர்களின் விடுதலைக்கான உத்தரவு வந்துள்ளது.
தங்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர்கள் இருவரும் செய்த மேல்முறையீட்டில் இந்தத் தீர்ப்பு வெளியானது.