முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெலங்கானா: காதல் மனைவியின் கண் முன்னே தலித் கணவர் வெட்டிக் கொலை

தெலங்கானா: காதல் மனைவியின் கண் முன்னே தலித் கணவர் வெட்டிக் கொலை

  • 19 செப்டம்பர் 2018
தெலங்கானா மாநிலத்தில் தலித் வகுப்பை சேர்ந்த பெருமாள பிரனாய், சாதியை மீறி காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது மனைவி அம்ருதாவின் கண்முன்னே வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரனாய் மற்றும் அம்ருதாபடத்தின் காப்புரிமைAMRUTHA.PRANAY.3 / FACEBOOK

தெலங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள மிர்யாளகுடா பகுதியை சேர்ந்த பெருமாள பிரனாய், கர்ப்பிணியான தனது மனைவி அம்ருதாவை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்று திரும்பிய நேரத்தில் வெள்ளிக்கிழமை மதியம் கழுத்தில் வெட்டப்பட்டார். சம்பவ இடத்திலே அவரது உயிர் பிரிந்துள்ளது.
மிர்யாளகுடாவில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், ஆதிக்க சாதியை சேர்ந்தவருமான மாருதி ராவின் மகளான அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்தான் 24 வயதான பெருமாள பிரனாய்.
10ம் வகுப்பில் படித்து கொண்டிருந்தபோதே, அறிமுகமாகியிருந்த இவர்கள் இருவரும், சில ஆண்டுகளுக்குப் பின்னர் காதலித்து, திருமணம் செய்து கொள்ள குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

பிரனாய் மற்றும் அம்ருதாபடத்தின் காப்புரிமைAMRUTHA.PRANAY.3 / FACEBOOK

ஆனால், பெருமாள பிரனாய் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த காதல் திருணமத்திற்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இந்த எதிர்ப்பை மீறி ஹைதராபாத் சென்ற பெருமாள பிரனாயும், அம்ருதாவும், அங்குள்ள ஆரிய சமாஜில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி திருமணம் செய்துள்ளனர்.
இதனால் கோபம் கொண்ட மாருதி ராவ், பெருமாள பிரனாயை மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை கர்ப்பிணியான தனது மனைவியை பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு பிரனாயும், அவரது தாயும் அழைத்து சென்றுள்ளனர்.

பிரனாய் மற்றும் அம்ருதாபடத்தின் காப்புரிமைAMRUTHA PRANAY / FB

பரிசோதனை முடிந்து வெளியே வந்தபோது, மருத்துவமனையின் வாயிலுக்கருகில் பிரனாய் ராவை கழுத்தில் இருமுறை வெட்டி கொன்றுள்ளனர்.
இந்த சம்பவம் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தாக்கியவர் அந்த ஆயுதத்தை அங்கேயே விட்டு சென்றுள்ளார்.
இதற்கு முன்னரும் சில நேரங்களில் பிரனாயை தாக்க முயற்சிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
நல்கொண்டா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரெங்கநாத் தெரிவிக்கையில், "இதுவொரு ஆணவக்கொலை. குற்றவாளிகளை விரைவில் பிடிக்க முயற்சித்து வருகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

பிரனாய் மற்றும் அம்ருதாவை ஆயுதத்தோடு பின்தொடரும் தாக்குதலாளி.படத்தின் காப்புரிமைUGC
Image captionபிரனாய் மற்றும் அம்ருதாவை ஆயுதத்தோடு பின்தொடரும் தாக்குதலாளி.

அம்ருதாவின் தந்தை மாருதி ராவும், அவரது தம்பி ஷிவானும் இணைந்து திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி இந்த கொலையை நடத்தியிருக்கலாம் என்று காவல் துறை சந்தேகப்படுகிறது.
"மாருதி ராவ் கோடீஸ்வரர். அவர் தொந்தரவு அளிக்கலாம். எனவே, இருவக்கும் திருமணமானவுடன், வேறிடத்திற்கு சென்றுவிட மகனையும், மருமகளையும் வற்புறுத்தினேன். தனது தந்தையின் கோபத்தை தானே தணித்து விடுவேன் என்றும் அம்ருதா கூறிவிட்டார்" என்று பிரனாயின் தந்தை பாலசாமி பிபிசியிடம் தெரிவித்தார்,
"திருமணத்திற்கு பிறகு அவர்கள் எனது மகனை கொல்ல திட்டமிட்டிருந்தனர். பிரானயும் எச்சரிக்கையுடன்தான் இருந்தார். ஆனாலும், இந்த கொடிய சம்பவம் நடத்துவிட்டது" என்று அவர் கூறினார்.

அம்ருதா மற்றும் அவரது தந்தை மாருதி ராவ்படத்தின் காப்புரிமைAMRUTHA.PRANAY.3 / FACEBOOK
Image captionஅம்ருதா மற்றும் அவரது தந்தை மாருதி ராவ்

தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறை ஐ.ஜியிடம் இந்த ஜோடி முன்னதாக கேட்டுள்ளது.
இந்த விடயத்தில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவை அழைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.



காவல்துறை கண்காணிப்பாளரின் அறிவுரைக்கு கீழ்படிவதாக மாருதி ராவ் வாக்குறுதியும் அளித்துள்ளார்.
பின்னர், அம்ருதாவின் பெற்றோர் தொலைபேசியில் பேசி வந்துள்ளனர். இவ்வாறு தாங்களின் கோபம் சற்று தணிவடைந்து விட்டதுபோல் காட்டி இந்த கொலையை செய்துள்ளதாக கருதப்படுகிறது.

மாருதி ராவின் தம்பி ஷிவான்படத்தின் காப்புரிமைNALGONDA POLICE / FB
Image captionமாருதி ராவின் தம்பி ஷிவான்

இது தொடர்பான வழக்கில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் முதல் குற்றவாளியாகவும், அவரது தம்பி ஷிவான் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனிடையே மாருதி ராவ், ஷிவான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் துறை தெரிவித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தலித் அமைப்புகள் கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...