முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சில முக்கிய இந்திய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.


21 செப்டம்பர் 2018

சில முக்கிய இந்திய  செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது கலாச்சாரத்தின் வெற்றி" - அமித் ஷா



அமித் ஷாபடத்தின் காப்புரிமை

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் போராட்டத்துக்கு கிடைக்கும் வெற்றி நமது கலாச்சாரத்தின் வெற்றியாக இருக்குமென்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
"நமது சமூகத்துக்கு விரைவில் நீதி கொடுக்கப்பட வேண்டும் என்றால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும். அதற்கான சரியான பாதையில் நாம் சென்றுக்கொண்டிருக்கிறோம். அயோத்தியில் ராமர் கோயில் இடிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து சுமார் 600 ஆண்டுகளாக அதற்கான போராட்டம் நடைபெற்று வருகிறது" என்று அமித் ஷா பேசியுள்ளார்.
இதே விவகாரம் குறித்து கடந்த புதன்கிழமை பேசியிருந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், அயோத்தியில் ராமர் கோயிலை காட்டினால்தான் இந்து-முஸ்லீம்கள் இடையிலான மோதல்போக்கு குறையும்" என்று கூறியதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



Presentational grey line

 எட்டுவழிச்சாலை திட்டம்: "உரிய அனுமதியின்றி செயற்படுத்தப்படாது"



எட்டுவழிச்சாலை திட்டம்படத்தின் காப்புரிமை

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கவில்லை என்றால், சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை தொடரமாட்டோம் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டத்துக்கு பொதுமக்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில், நிலம் கையகப்படுத்துவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் போது, மறுபுறம் நிலங்களை உட்பிரிவு செய்தது ஏன்? என்று நீதிபதிகள் மத்திய அரசின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசிய மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், " மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை மேற்கொண்டு மேற்கொள்ள முடியாது. அதனால், இந்த திட்டத்தை தொடர மாட்டோம்" என்று வெளியிட்டுள்ளது.



Presentational grey line

 கரையை கடந்தது 'டாயே புயல்'



கரையை கடந்த 'டாயே புயல்' - மிக அதிக அளவில் மழைபடத்தின் காப்புரிமைISTOCK

ஒடிசாவில் கோபால்பூர் அருகே வெள்ளிகிழமை காலையில் கரையை கடந்த டாயே புயலால் அந்த மாநிலம் முழுவதும் கடும் மழை பெய்து வருகிறது. மேலும் மிக வேகமான அளவில் காற்று வீசுகிறது .
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வியாழக்கிழமை நள்ளிரவு புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வங்க கடலில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக  குறிப்பிட்டுள்ளது.
மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்படுவதாகவும், மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தி மேலும் கூறுகிறது.
இந்த புயல் தொடர்பாக ஒடிசா மாநில அரசு முழு அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்துள்ளது.



Presentational grey line

 எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்



எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப் பட்டுள்ளதாகது.
உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கொன்றில் விசாரணையின்போது, "'எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க தனி திட்டத்தை உருவாக்க வேண் டும். அதற்குரிய நிதியை ஒதுக்கி, வழக்குகள் அதிகம் உள்ள மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்களை திறக்க வேண்டும்" நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் முதல் தளத்தில் இந்த சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீது நேரடியாக வழக்கு தொடர முடியாது. அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள் மூலம் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் வழக்குகள் மட்டுமே இங்கு விசாரிக்கப்பட உள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...