முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவில்; கொடைவிழா மேயர் ஜெகன்பெரியசாமி பங்கேற்பு

 ஷ்யாம் நீயூஸ் 30.06.22 தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவில்; கொடைவிழா மேயர் ஜெகன்பெரியசாமி பங்கேற்பு   தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன்  கோவிலில் கொடைவிழாவை  கடந்த 28ம் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. இரவு நிகழ்ச்சிக்கு கோவில் தர்மகர்த்தா கோட்டுராஜா தலைமை வகித்தார்.        ஐயா ஸ்ரீ குரு சிவசந்திரன் அருளிசை வழிபாட்டு கச்சேரியை துவக்கி வைத்து திமுக பொதுக்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன்பெரியசாமி பேசுகையில் ஆண்டு தோறும் இந்த கோவில் கொடைவிழாவிற்கு எனது தந்தை வருவதுண்டு அவரது மறைவிற்கு பின்பு கடந்த ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு அவரது வழியில் நான் வருகிறேன். இங்குள்ள மக்கள் எல்லோருக்கும் எல்லா செல்வங்களும் கிடைத்து வாழ்க்கையில் நலமுடன் வாழ வேண்டுகிறேன். அனைவரும் ஒற்றுமையுடன் பொது வாழ்க்கையில் ஈடுபடுபட்டு பல நல்ல பணிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.         நிகழ்ச்சியில் கோவில் செயலாளர்கள் சுப்பிரமணியன், ஞான்ராஜ்,  பொருளாளர் பழனிக்குமார், துணைத்தலைவர்கள் எஸ்.பொன்ராஜ், ஜி.பொன்ராஜ், பிரபு...

ஸ்டெர்லைட் விற்பனை முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் மாற்று திறனாளிகள் நல சங்கம் கோரிக்கை

 ஷ்யாம் நீயூஸ் 29.06.2022 ஸ்டெர்லைட் விற்பனை முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் மாற்று திறனாளிகள் நல சங்கம் கோரிக்கை முத்துநகர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் துளசி, பெல், தாயகம் உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவன நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடி பானு பிருந்தாவன் மஹாலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். தொண்டுநிறுவன நிர்வாகிகள் தனலெட்சுமி, ஜெயக்கனி, ஜேசுதாஸ், மாரியப்பன், முருகன், முருகம்மாள், முத்துலெட்சுமி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தூத்துக்குடி மாநகர வளர்ச்சி மற்றும் அனைத்துமக்களின் நலனிலும் அக்கறை கொண்ட ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை விற்கும் முடிவினை அதன் உரிமையாளர் கைவிடவேண்டும். நடமாடும் மருத்துவ திட்டம், இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி திட்டம், பெண் குழந்தைகளுக்கான கல்வி வகுப்பு திட்டம், குஷி குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், இதயம் காப்போம் திட்டம், மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டம், கிராமங்கள்தோறும் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் ஆகிய பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய...

தூத்துக்குடி டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி பணம் கொள்ளைகஞ்சா போதை கும்பல் அட்டூழியம்

 ஷ்யாம் நீயூஸ் 29.06.2022 தூத்துக்குடி டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி பணம் கொள்ளை. கஞ்சா போதை கும்பல் அட்டூழியம் தூத்துக்குடி சிவந்த குளம் 5வது தெருவில்  அரசு டாஸ்மாக் கடை எண் 10147 இயங்கி வருகிறது இன்று மாலை 4.30 மணி அளவில் மது வாங்குவது போல் நான்கைந்து நபர்கள் வந்து கடையில் இருந்த டாஸ்மாக் விற்பனையாளர் சங்கர் ,ரமேஷைபீர் பாட்டிலால் தாக்கி விட்டு விற்பனைத் தொகை சுமார் ஒரு லட்சம் அளவில் உள்ள பணத்தை எடுத்து விட்டு தப்பி சென்றனர் இதை தடுத்த விற்பனையாளர் சங்கருக்கு தலையில் அடிபட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மற்றொரு விற்பனையாளர் ரமேஷுக்கு  காயம் ஏற்பட்டுள்ளது கடையின் மேற்பார்வையாளர் முத்துக்குமார் தூத்துக்குடி மாவட்ட மேலாளர் முருகனுக்கு தகவல் கொடுத்தார் மற்றும் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த காவல் நிலைய காவலர்கள் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர் .

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்

 ஷ்யாம் நீயூஸ் 29.06.2022 தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள். goog_936731576   தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையானது குறித்து பேசினார்கள். அப்போது மேயர் பேசுகையில் அனைத்து பகுதிகளும் முழுமையாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரைவில் பணிகள் முடிவு பெறவுள்ளன. அதே போல் மாநகரில் பள்ளி செல்லும் குழந்தைகள் பகுதிகளில் புதிய தார்சாலைகள் அமைக்கப்படவுள்ளது. அனைவருடைய பகுதிகளிலும் அனைத்து பணிகளும் முழுமையாக நடைபெறுவதற்கு ஓத்துழைக்க வேண்டும். பொதுமக்களுக்கு கவுன்சிலர் மூலம் குடிதண்ணீர் வரும் நேரம் தெரிவிக்கப்படுகிறது. வரும் 1ம் தேதி முதல் அதே போல் குப்பை எடுப்பதற்கான வாகனம் எந்த பகுதிக்கு எப்போது வரும் என்ற தகவல் கவுன்சிலர்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதற்கு பொதுமக்களிடம் கவுன்சிலர்கள் சொல்லவேண்டும். புறநகர் பக...

தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி டாஸ்மாக் ஊழியர் பலி

 ஷ்யாம் நீயூஸ் 29.06.2022 தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி டாஸ்மாக் ஊழியர் பலி! தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (48) த/பெ சிவனைந்த பெருமாள். இவர் இன்று காலை தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை பொட்டலூரணி விலக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை காவல் துறை ஆய்வாளர் ரமேஷ், சார்பு ஆய்வாளர் முத்து விஜயன் ஆகியோர் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் தூத்துக்குடி டாஸ்மாக் கடை எண்10110 கடையில் உதவி விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு குறைந்த அளவு ஊதியம் என்பதால் ஓய்வு நேரங்களில் இவர் நடமாடும் வாழைப்பழ வியாபாரம் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் தனது சைக்கிளில் காய்கறிகள் பழங்களை வைத்துக் கொண்டு சுற்று வட்டார கிராமங்களில் வியாபாரத்திற்கு சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது இவருக்கு மனைவி சுடர்மதி(45) மகன் சதீஷ் (13) மகள் திவ்யா(12) ஆகியோர் உள்ளனர். இச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழக டாஸ்மாக் ஊழி...

தூத்துக்குடி மாவட்ட அளவிலானப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

   ஷ்யாம் நீயூஸ் 28.06.2022 தூத்துக்குடி  மாவட்ட அளவிலானப்  போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது  தூத்துக்குடி மாவட்ட அளவிலான மாணவ, மாணவியர்களுக்குப் பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை எழுதும் போட்டியை தூத்துக்குடி தமிழ் இயக்கம் நடத்தியது இதில் மாவட்டக் கல்லூரி அளவிலானக் கவிதை எழுதும் போட்டியில் தூத்துக்குடி வ.உசி.கல்வியியல் கல்லூரி மாணவி த.நர்மதா, கட்டுரைப் போட்டியில் மறவன்மடம் கால்டுவெல் கல்லூரி மாணவி க.வேலம்மாள், பேச்சுப்போட்டியில் தூயமரியன்னைக் கல்லூரி மாணவி அ.முத்துமதுமிதாவும், பள்ளி அளவிலானப் பாட்டுப்போட்டியில் மறவன்மடம் அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவன் சோ.வள்ளிவிநாயகம், பேச்சுப்போட்டியில் சக்திவிநாயகர் பள்ளி மாணவி கே.சனனி, கட்டுரைப்போட்டியில் சக்திவிநாயகர் பள்ளி மாணவி மித்ரா ஆகியோர் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2வது, 3வது தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கும், போட்டியில்கலந்து கொண்டவர்களுக்கும் சான்றிதழ், நூல் வழங்கும் விழா சி.எம்.மேனிலைப்பள்ளி அரங்கில் தமிழியக்கத்தின் மாவட்டச் செயலாளர் மோ.அன்பழகன் தலைமையிலும், ...

திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ஸ்டெர்லைட் ஆலை திறப்பது அவசியம்

 ஷ்யாம் நீயூஸ் 28.06.2022 திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ஸ்டெர்லைட் ஆலை திறப்பது அவசியம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி 2018-ஆம் ஆண்டு மார்ச்22ல் போராட்டம் நடத்தியதில், காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு 13 நபர்கள் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஆலையை மூட உத்தரவிட்டது அதன்பின் இன்றுவரை நான்காண்டுகளாக ஆலையை திறப்பதற்கு வேதாந்தா நிறுவனம் பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தது நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்தும் ஆலய திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால் வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை கடந்த வாரம்  விற்பனை செய்யப் போவதாக பத்திரிக்கையில் விளம்பரம் செய்தது அதனை தொடர்ந்து ஆலைகளிள் பணிபுரியும் பணியாளர்கள்  மகளிர் சுய உதவி குழுக்கள் ஆலையில் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆலையை விற்பனை செய்யும் முடிவை வேதாந்தா சேர்மன் அனில் அகர்வால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பத்திரிக்கை வாயிலாக பலமுறை கேட்டுக் கொண்டனர் அதனைத் தொடர்ந்து இன்றும் ஸ்டெர்லைட் விற்பனை செய்வதை மறுபரிசீலனை செய...

தூத்துக்குடி அருகே தீயணைப்பு ஒத்திகை பயிற்சி !

ஷ்யாம் நீயூஸ் 28.06.2022  தூத்துக்குடி அருகே தீயணைப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது  தூத்துக்குடி அருகே உள்ள காலாங்கரை கிராமத்தில் தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலையம் மற்றும் மீட்புப் பணிகள் சார்பாக அபாயகரமான நீர்நிலை மற்றும் இயற்கை பேரிடர் நிகழும் பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒத்திகை மற்றும் பிரச்சாரம் நடைபெற்றது.  கோரம்பள்ளம் கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமியின் ஏற்பாட்டில் தூத்துக்குடி மாவட்ட அலுவலர் உத்தரவின் பேரில் நிலை அலுவலர் முனியசாமி மற்றும் போக்குவரத்து அலுவலர் புன்னைகட்டி முன்னிலையில் மழைக்கால வெள்ளத்தடுப்பு வகுப்பு மற்றும் தற்காப்பு பயிற்சி நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வருவாய் ஆய்வாளர் சந்தன ராஜ் ,கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வப்பிரபா அதிசயராஜ், காலாங்கரை வார்டு உறுப்பினர் ஞானக்கண் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

தூத்துக்குடி சிப்காட் நிறுவன பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது கலெக்டர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார

 ஷ்யாம் நீயூஸ் 27.06.2022 தூத்துக்குடி சிப்காட் நிறுவன பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது கலெக்டர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம், சிப்காட் வளாகத்தில் சர்வதேச குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் தின விழாவினை முன்னிட்டு குறு சிறு நடுத்தர தொழில் நிறுவன பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்  நடைபெற்றது இன்று காலை நடந்த மருத்துவ முகாமினை தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் (இஆப)தொடங்கி வைத்தார். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 71 மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன அதில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு நடைபெற்ற மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயனடைந்தனர் இதில் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சொர்ணலதா தலைமை தாங்கினார் தூத்துக்குடி சுகாதாரத் துறை இணைச் செயலாளர் மருத்துவர் பொன் செல்வன் சிப்காட் திட்ட அலுவலர் ஜோ பிரகாஷ் மற்றும் சொர்ணலதா, தாசில்தார் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

திமுக வேட்பாளர் தொம்மை சேவியர் சண்முகையா எம்.எல்.ஏ முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 ஷ்யாம் நீயூஸ் 27.06.2022 மாப்பிள்ளையூரணி திமுக வேட்பாளர் தொம்மை சேவியர் சண்முகையா எம்.எல்.ஏ முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.    தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி 3வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்த கோயில்மணி மறைவை யொட்டி தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் அடுத்த மாதம் 9ம் தேதி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக வேட்பாளராக தொம்மை சேவியரை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.     இதனையொட்டி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வேட்பாளர் சேவியர் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் நாகராஜுடம் சண்முகையா எம்.எல்.ஏ, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் தொம்மை சேவியர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.      முன்னாள் எம்.எல்.ஏ ...

மாப்பிள்ளையூரணி திமுக வேட்பாளர் சேவியர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணிடம் வாழ்த்து பெற்றார்.

 ஷ்யாம் நீயூஸ் 27.06.2022 மாப்பிள்ளையூரணி திமுக வேட்பாளர் சேவியர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணிடம் வாழ்த்து பெற்றார்.  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி 3வது வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்த கோயில்மணி மறைவை யொட்டி தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் அடுத்த மாதம் 9ம் தேதி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக வேட்பாளராக சேவியரை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதனையொட்டி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வேட்பாளர் சேவியர் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர் திமுக ஆட்சியின் தளபதியார் செயல்பாடுகளையும் சாதனைகளையும் எடுத்துக்கூறி எதிர்த்து நிற்கும் வேட்பாளர் யாராக இருந்தாலும் டெபாசிட் கிடைக்க கூடாது என்ற நோக்கத்தோடு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  சண்முகையா எம்.எல்.ஏ முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் ...

தெற்கு ரயில்வேயின் தூத்துக்குடி நகர மக்கள் விரோத போக்கை கைவிட சிபிஎம் மாநகர் செயலாளர் ராஜா கோரிக்கை

 ஷ்யாம் நீயுஸ் 27.06.22 தெற்கு ரயில்வேயின் தூத்துக்குடி நகர மக்கள் விரோத போக்கை கைவிட  சிபிஎம் மாநகர் செயலாளர் ராஜா கோரிக்கை  இது தொடர்பாக மாசிலாமணி புரத்தில் உள்ள சிபி எம் மாநகரக்குழு சார்பில் சிபிஎம் மாநகர் செயலாளர் தா.ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாகர்கோவில் - கோவை ரயிலில் தூத்துக்குடி மக்களுக்காக லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வந்தது. அந்த லிங்க் எக்ஸ்பிரஸ் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்டது. தற்பொழுது அந்த லிங்க் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். ஜூலை 2முதல் லிங்க் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டு, இணைப்பு ரயில் விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இணைப்பு ரயிலில் நள்ளிரவு மணியாச்சி சென்று கோவை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இரவு 11.30 மணிக்கு ஏறவேண்டும். கோவையிலிருந்து - தூததுக்குடிக்கு வரும் பயணிகள் அதிகாலை 2.40 மணிக்கு மணியாச்சியில் இறங்கி தூத்துக்குடி இணைப்பு ரயிலுக்கு மாற வேண்டும். இதனால் பயணிகள் இரவு முழுவதும் தூங்காமல் பயணிக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். தூத்துக்குடி-கோவை லிங்க் எக்ஸ்பிரஸ் இயக...

எம்மதமும் சம்மதம் மதஉணர்வை மதிக்கிறோம். மதவெறியை எதிர்க்கிறோம் அமைச்சர் கீதாஜீவன்

 ஷ்யாம் நீயூஸ் 26.06.22 எம்மதமும் சம்மதம் மதஉணர்வை மதிக்கிறோம். மதவெறியை எதிர்க்கிறோம் அமைச்சர் கீதாஜீவன் பேசினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மாணவரணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி அரங்கம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி வரவேற்புரையாற்றினார். அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் திமுக திராவிடமாடல் ஆட்;சி என்பது அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் 1949ல் தொடங்கிய திமுக ஜாதி மத வேறுபாடு இன்றி உழைக்கும் கட்சி 1921ல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. நீதிகட்சி தொடங்கிய பின்பு 1929ல் தந்தை பெரியார் பெண்களுக்கு கல்வி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிகளை செய்ய வேண்டும். அடிமையாக இருக்க கூடாது. சொத்து சமஉரிமை வழங்க வேண்டும் என்று கூறினார். அதை சட்டமாக்கி பெண்களுக்கு வழங்கியவர் கலைஞர் ஏழை எளிய ஓதுக்கப்பட்ட மக்களுக்காக தி...

தமிழக அரசால் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் இலங்கை சென்று அடைந்தது

ஷ்யாம் நீயூஸ் 35.06.2022  தமிழக அரசால் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் இலங்கை சென்று அடைந்தது. தமிழக மக்கள் சார்பில் இலங்கைக்கு 2-ம் கட்டமாக நிவாரணப் பொருட்களுடன் தூத்துக்குடியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் கொழும்பு சென்றடைந்தது. இலங்கையில் ஏற்பட்டுள்ல பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டைத் தொடர்ந்து தமிழக மக்கள் சார்பில் அனைத்து இலங்கை மக்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனடிப்படையில் கடந்த மே மாதம் 18-ந் தேதி முதல் கட்டமாக சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ30 கோடி மதிப்பிலான அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.தமிழக அரசின் இந்த நிவாரணப் பொருட்கள் ஈழத் தமிழர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதையடுத்து 2-ம் கட்டமாக ரூ67.70 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிவாரணப் பொருட்களுடனான கப்பல் நேற்று கொழும்பு துறைமுகம் சென்றடைந்தது. இலங்கைக்கு தமிழக அரசு 4,712 மெட்ரிக் டன் அரிசி, 250 மெட்...

இன்று (26.06.22)மின்தடை ஏற்படும் பகுதிகள்

 ஷ்யாம் நீயூஸ் 26.06.2022 இன்று 26.06.2022தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், மின் நிறுத்தம் அறிவிப்பு செய்துள்ளது தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், தூத்துக்குடி  நகர் கோட்டத்திற்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று 24.06.2022  வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 02.00 மணிவரை* கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. *110/ 22கிவோ*  *டவுன் * உப மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் வழங்கும் *22 கிவோ* *வாட்டர் ஒர்க்ஸ்* மின் தொடரில்  *மீனாட்சிபுரம், ஜெயராஜ் ரோடு ,டூவிபுரம் 1 முதல் 10 வரை* *கிழக்கு பால விநாயகர் கோவில் தெரு ,மேலூர் பங்களா தெரு, வட்டத்தெப்பம் ,பாளைரோடு*    மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்  *110* / *22கிவோ* *சிப்காட்* உபமின்  நிலையத்திலிருந்து மின்னோட்டம் வழங்கும்  **பாரத் பெட்ரோலியம் மின்தொடர்** பகுதிகள்  *ஆசீர்வாத நகர் ,முத்துநகர், பசும்பொன் நகர் , 3வது மைல், புதுக்* *குடி* , *பிஎன் டி காலனி , சங்கர் காலனி,காமராஜ் நகர், பாளை மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுத...

தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலய 29ம் ஆண்டு அசன விழா நடைபெறுகிறது.

 ஷ்யாம் நீயூஸ் 23.06.2022 தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு ஆலய 29ம் ஆண்டு அசன விழா நடைபெறுகிறது. தூத்துக்குடி தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமணடலத்திற்குட்பட்ட சண்முகபுரம் தூய பேதுரு ஆலய 29ம் ஆண்டு அசனவிழா மற்றும் 72வது ஆலய பிரதிஷ்டை பண்டிகை வரும் 29ம் தேதி புதன்கிழமை வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்கான அசன விழா நிகழ்வுகளை சேகர தலைவர் செல்வின் ராஜ் சார்லஸ் செயலாளர் ஜவஹர் சுந்தர்ராஜ், பொருளாளர் ஞான்ராஜ் டேனியல், அசன கமிட்டி ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் செயலாளர் ஜாய்சன் பொன்னுத்துரை, உள்பட நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ஆலய அசன விழா கமிட்டி உறுப்பினர்கள் கௌரவ சங்கத்தினர் செய்து வருகின்றனர். சேகர தலைவர் செல்வின்ராஜ் சார்லஸ் உதவி குருவானவர் கிங்ஸ்;லி ஜான், ஆகியோர் ஜெபம் செய்து விழா நடைபெறுகிறது.

தூத்துக்குடியில் நாளை(23.06.2022) மின்தடை நடைபெறும் பகுதிகள் அறிவிப்பு!

ஷ்யாம் நீயூஸ் 22.06.2022 தூத்துக்குடியில் நாளை(23.06.2022) முன்நிறுத்தம் நடைபெறும் பகுதிகளை தூத்துக்குடி மின்சாரவாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது! தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், தூத்துக்குடி  நகர் கோட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, விபத்து ஏற்படாமல் இருக்க வேண்டி கீழ்க்கண்ட உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், சாய்ந்த நிலையிலுள்ள மின்கம்பங்களை சரி செய்தல், மரக்கிளைகளை அகற்றுதல், மின்கம்பங்களின் அளவுகளை பெரிதாக்க மற்றும் ஆங்காங்கே மின்பாதையில் அறுந்து தொங்கி கொண்டிருக்கும் பட்டங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ள இருப்பதால்  *நாளை 23.06.2022  வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 02.00 மணிவரை* கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.  *சுனாமி காலனி மற்றும் காளவாசல் உப்பள பகுதிகள் மற்றும் திரேஸ்புரம் தோமையார் கோவில் பகுதி மற்றும் முத்தம்மாள் காலனி 1வது தெரு* *110/ 22கிவோ*  *டவுண்* உப மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் வழங்கும் *22 கிவோ* *டவுண்* மின் தொடர் பகுதிகள்   **ரஹ்மத்துல்லாபுரம்  ,ரெங்கநாதபுரம் ,பத்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும், விற்கும் முடிவை கைவிட வேண்டும் கிராம மக்கள் தொடர் போராட்டம்

 ஷ்யாம் நீயூஸ் 22.06.2022 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும், விற்கும் முடிவை கைவிட வேண்டும் கிராம மக்கள் தொடர் போராட்டம் தூத்துக்குடியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 400 கோடி மதிப்பில் ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு உற்பத்தியின் மூலம் மத்திய, மாநில அரசுக்கு பெறும் வருமானம் பல்வேறு வகையில் கிடைத்தது. துறைமுகத்தின் மூலம் சுங்கத்துறை மற்றும் துறைமுகத்திற்கும், தொழிற்லாளர்களுக்கும் வேலைவாய்ப்பும், வருமானமும் கிடைத்தன. ஸ்டெர்லைட்டை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றினார்கள். அதன் மூலம் பல குடும்பங்கள் வாழ்ந்தன. ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அடிப்படை தேவையான சாலை குடித்தண்ணீர், பள்ளிக்கட்டிடம், அங்கன்வாடி ஆகியவைகளை கட்டி கொடுத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவிகள் பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை பலருக்கும் கல்வி உதவித்தொகை என பல்வேறு வகையில் உதவிகள் செய்து வந்தன. மாவட்டமும் பல்வேறு வகையில் தொழில்துறையில் வளர்ச்சி அடைந்தது. அரசுக்கு தேவையான காப்பர் உற்பத்தி செய்து ...

கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு இசக்கிராஜா கோரிக்கை

 ஷ்யாம் நீயூஸ் 22.06.2022 கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு இசக்கிராஜா கோரிக்கை தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பி.எம்.டி. நிறுவன தலைவர் கே.என்.இசக்கிராஜா வெளீயிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழக முதலமைச்சராக அதிமுக பொது செயலாளரும் மறைந்த ஜெயலலிதா பணியாற்றினார். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்பு அதிமுகவில் தொடர் முதலமைச்சராக இருந்த காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா பல சமயங்களில் ஓய்வு எடுப்பதும், அரசியல் சம்பந்தமாக சில முடிவுகளையும் எடுக்கும் மற்றும் ஒரு வேதாந்தா இல்லம் போல் கொடநாடு பங்களா இருந்தது. அவரது மறைவுக்குப் பின் ஜெயலலிதா இருந்த சிம்மாசனத்தில் சசிகலா துணையோடு எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்து பணியாற்றினார். ஜெயலலிதா இருந்த காலத்தில் தனது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த பலருடைய சொத்துக்கள் அவர்கள் சார்ந்த தொழில்கள் உறவினர்களின் பணிகள் என்னவென்று உளவுத்துறை மூலம் சேகரிக்கப்பட்டு அதன் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பி...

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஸ்டெர்லைட் நிறுவனத்தை சுற்றியுள்ள கிராமங்களில் தொடர் பட்டினி போராட்டம் நடத்திட தீர்மானித்துள்ளோம் என்று ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஷ்யாம் நீயுஸ் 20.06.2022 ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஸ்டெர்லைட் நிறுவனத்தை சுற்றியுள்ள கிராமங்களில் தொடர் பட்டினி போராட்டம் நடத்திட தீர்மானித்துள்ளோம் என்று ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர். தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த 4வருடங்களுக்கு முன்பாக இந்த நிறுவனத்திற்கு எதிராக போராடியவர்களால் ஏற்பட்ட வன்முறை காரணமாக இந்த நிறுவனம் மூடப்பட்டு விட்டது. இதனால் இந்த தொழிற்சாலையை நம்பி இருந்தவர்கள் மட்டுமின்றி இந்த தொழிற்சாலையை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையானது தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை மூலமாக மூடப்பட்டு இருந்தபோதும், தொடர்ந்து இந்த நிறுவனம் தனது சமூக பங்களிப்பு நிதி உதவி திட்டத்தின் மூலமாக சுற்றியுள்ள கிராம ம...

அ.இ.அதிமுக-வில் இனி ஒற்றைத் தலைமை தான்.அது எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தான்தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம்.

 ஷ்யாம் நீயூஸ் 20.06.2022 அ.இ.அதிமுக-வில் இனி ஒற்றைத் தலைமை தான்.அது எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தான்.தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம். அதிமுகவில் ஒற்றைத் தலைமை தான் வரவேண்டும், அது சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தான் வரவேண்டும் அதையே அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் விரும்புகின்றனர் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 20.06.2022 அன்று காலை மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி நிர்வாகிகள் மத்தில் எஸ்.பி.சண்முகநாதன் பேச்சு.  இந்நிகழ்விற்கு கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்து மாவட்ட நிர்வாகிகள் அவர்களின் கருத்துக்களை கூறினர் அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 100 சதவிகீதம் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.  மேலு...

தூத்துக்குடி மாநகாரட்சி பகுதியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

ஷ்யாம் நீயூஸ் 18.06.2022 தூத்துக்குடி மாநகாரட்சி பகுதியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அண்மைக்காலமாக சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை பாதிக்கும் வகையிலும் விளம்பர பதாகைகள் வைக்கப்படுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது. எனவே, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றால் மண்டபங்களின் வளாகத்துக்குள் மட்டுமே பதாகைகளை வைக்க வேண்டும்.  மீறி சாலையோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக விளம்பர பதாகைகள் வைப்போர் மீது காவல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பதாகைகள் அகற்றப்படும். மேலும், மாநகராட்சி சார்பிலும், அரசு சார்பிலும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை மறைத்து பதாகைகள் வைப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  இதுதவிர, தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ...

ஏபிசிவி சண்முகம் தலைமையில் காங்கிரசார் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!

 ஷ்யாம் நீயூஸ் 17.06.2022 ஏபிசிவி சண்முகம் தலைமையில் காங்கிரசார் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்! அமலாக்கத்துறை கண்டித்து தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராகுல் காந்தி மீது நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை நிறுவனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை சுப்ரமணியசாமி தொடுத்த வழக்கில் நோட்டீஸ் வழங்கி விசாரணை செய்து வருகிறது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடுக்கப்பட்ட வழக்கு பலமுறை விளக்கம் கொடுத்தும் வழக்கு பதியாமல் விசாரித்து வருகின்றனர் இதனை கண்டித்து தூத்துக்குடி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏபிசிவி சண்முகம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி, டேனியல் ராஜ், தூத்துக்குடி தொழிலாளர் யூனியன் தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சகாயராஜ், முத்தையாபுரம் பிரபாகரன் மற்றும் சில காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே உள்ள கருத்து வேற...

துத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஸ்டெர்லைட் சார்பில் 12பேருக்கு தலா ரூ.2.5லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

 ஷ்யாம் நீயூஸ் 17.06.2022 துத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஸ்டெர்லைட் சார்பில் 12பேருக்கு தலா ரூ.2.5லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.   தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த 12பேர்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் தலா ரூ.2.5லட்சம்  நிதியுதவி வழங்கப்பட்டது. தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது அதனை கட்டுபடுத்த தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அதிகளவில் காயமடைந்தவர்களுக்கு உடலுறுப்பு பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக இயல்பாக வேலை செய்யமுடியாத அவர்கள் இயல்பு வாழ்வை இழந்தனர். பலரது உதவியை அவர்கள் நாடியுள்ளனர் என்று தெரிவித்தனர். இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை நாடியபொழுது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 12 பேருக்கு  ரூ.2.5லட்சம்  நிதியுதவியை  ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கியது. இந்த நிதியுதவியை பெற்ற பயனாளிகள் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு நன்றியைத்  தெரிவித்து கொண்டனர். மேலும் இந்த நிதி அவர்களின் வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனர் இவ்வாறு ஸ்டெர...

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மேயர் அதிரடி ஆய்வு

 ஷ்யாம் நீயூஸ் 17.06.2022 தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மேயர் அதிரடி ஆய்வு   தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் வகுப்பறைகள், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு செய்தனர்.     பின்னர் மேயர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச்சராக தளபதியாளர் பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் அனைத்து துறைகளும் முன்னேற்ற பாதையில் எடுத்துச்செல்லப்படுகிறது. இந்தியாவிற்கே தமிழகம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எல்லோரையும் மக்கள் பணியை சிறப்பாக செய்யவேண்டும் என்ற அறிவுறுத்தியுள்ளார்கள். அதே போல்  தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். என்ற உத்தரவு அரசு விடுத்ததையடுத்து மாநகராட்;சி முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ மாணவிகளின் சேர்க்கையை அதிகாரிக்கவும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு தற்...

அரசு பள்ளியில் ஜாதியை பேசிய ஆசிரியரை கைது செய்ய வேண்டும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வேண்டுகோள்

ஷ்யாம் நீயூஸ் 16.06.2022 அரசு பள்ளியில் ஜாதியை பேசிய ஆசிரியரை கைது செய்ய வேண்டும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வேண்டுகோள்! தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியரான கலைச்செல்வி மற்றும் கணினி ஆசிரியர் மீனா என்பவரும் தன் பள்ளியில் பயிலும் மாணவனிடம் ஜாதியை தூண்டும் வகையிலும், பள்ளியில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தலில் தலித் ஒருவர் தலைவராக வந்து விடக்கூடாது என்ற ஜாதிய வண்மத்துடன் பேசியிருப்பது மிகவும் கண்டனத்திற்குறியது. பள்ளியில் பயிலும் பிற மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில்  தலித் ஆசிரியர்கள். மாணவர்களை பிரித்து தீண்டாமையை உருவாக்கும்.  மாணவர்கள் மத்தியில் தீண்டாமையை விதைக்கும் வகையில் பேசிய குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி. உறுதுணையாக ருந்த கணினி ஆசிரியர் மீனா ஆகியோர் மீது தீண்டாமை வண்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, பணி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும். மேலும் இது போன்ற தீண்டாமை சம்பவங்கள் தொடராமல் இருக்க கடும...

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தூய்மை பணி அமைச்சர், கலெக்டர், மேயர், ஆணையர் அதிரடி

ஷ்யாம் நீயூஸ் 12.06.2022  தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தூய்மை பணி அமைச்சர், கலெக்டர், மேயர், ஆணையர் அதிரடி   தூத்துக்குடி பிரையண்ட்நகரில் மாநகராட்சி பூங்காவை சுத்தம் செய்யும் பணியை கலெக்டர், மேயர் தொடங்கி வைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரையண்ட் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா பயன்பாடின்றி கிடந்தது. இதனால் பூங்கா முழுவதும் முள்செடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சி பொருளாக கிடந்தது.  இந்த பூங்கா பகுதியில் சமூக விரோத செயல்கள் நடந்து வருவதாக பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் இந்த பூங்காவை சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் பூங்காவை சுத்தம் செய்யும் பணிகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் மண்வெட்டியை வைத்து வெட்டி தொடங்கி வைத்தனர்.   இதைதொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் ...

தூத்துக்குடி திமுக பிரமுகர் இல்லத்திருமண விழா அமைச்சர் மேயர் பங்கேற்பு

 ஷ்யாம் நீயூஸ் 11.06.2022 தூத்துக்குடி திமுக பிரமுகர் இல்லத்திருமண விழா அமைச்சர் மேயர் பங்கேற்பு தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அஜய்கோஸ் ஜெயலட்சுமி மகள் மதுபாலா, குழந்தை ஆழ்வார் தங்கலட்சுமி மகன் இசக்கிதுரை ஆகியோரது திருமணம் ஜெஜெ நகர் அங்காள பரமேஸ்வர்p திருக்கோவிலில் வைத்து நடைபெற்று ஜெ ஜெ நகர் மணமகள் இல்லத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு வருகை தந்தவர்களை தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செய்தியாளர்கள் பாலகிருஷ்ணன், மாரிமுத்து, நாடார் மகமை நிர்வாககுழு உறுப்பினர் உத்திரபாண்டி, ஆகியோர் வரவேற்றார்கள். வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கீதாமுருகசேன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநில பேச்சாளர் சரத்பாலா, ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், வடக்கு மாவட்ட இளைஞர...

தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் வீணாக போன குடிநீர் உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார் தூத்துக்குடி மேயர் ஜெகன்

ஷ்யாம் நீயூஸ் 08.06.2022 தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் வீணாக போன குடிநீர் உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார் தூத்துக்குடி மேயர் ஜெகன்! தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிதண்ணீர் ஒரு வருடத்திற்கு மேலாக வீணாகி உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் பலமுறை பொதுமக்கள் புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது இன்று பிற்பகல் 12 மணி அளவில் தூத்துக்குடி மேயர் ஜெகன் வேறு ஒரு வேலையாக அந்த வழியாக சென்றுள்ளார் அப்போது ரோட்டில் தண்ணீர் தேங்கி குடி நீர் வீணாவதை கண்டுள்ளார் உடனே தான் சென்ற வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்துள்ளார் அப்போது ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த பகுதியில் குடிநீர் வீணாக சென்றுள்ளதை தெரிந்து கொண்டார் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு குழாயை அடைத்து குடிநீர் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் இது அப்பகுதியில் பொதுமக்கள் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை சூப்பர். எம்.பி, அமைச்சர், கலெக்டர், மேயர், ஆணையர் பெருமிதம்

 ஷ்யாம் நீயூஸ் 06.06.2022 தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை சூப்பர். எம்.பி, அமைச்சர், கலெக்டர், மேயர், ஆணையர் பெருமிதம்!    தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின் கீழ் 4.45 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு புதிய உத்திகளை கையாண்டு புதுப்பிக்கப்பட்ட முத்துநகர் கடற்கரை சென்னை மெரினா கடற்கரையை போன்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து இருந்து செல்வதற்கு ஏற்றவாறு கேளரி போன்ற இருக்கை அமைப்புகள் அழகிய முத்துபோன்ற சிலை செல்பி பியர்களை கவர்வதற்காக ஐ லவ் டூடி என்ற எழுத்து கொண்ட கண்களை கவரும் அழகான விளக்குகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதைகள் ஊஞ்சல் உள்பட மற்றும் மாற்றுதிறனாளிகள் சருக்கு மூலம் வீல் சேரில் சென்று கடலில் நீராடுவதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்துநகர் கடற்கரை திறப்பு விழாவிற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி கலெக்டர் செந்தில்ராஜ், ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா, கவுன்சிலர் எடின்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.     கனிமொழி எம்.பி திறந்து வைத்து மரக்கன்று நட்டி மாற்று திறனாளிகளின் ப...

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

 ஷ்யாம் நீயூஸ் 03.06.2022 தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி  சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்புக், ஸ்கூல் பேக், மற்றும் சிறுகுறிப்பு தொண்டர் நாயனார் பள்ளி வளாகத்தில் ரூபாய் 2 லட்சம் செலவில் புதிய வகுப்பறைக்கு அடிக்கல் நாட்டுதல் நிகழ்ச்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ஜோதிராஜா ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக தலைவர் சன்னாசி , செயலாளர் மாடசாமி, பொருளாளர் சக்திவேல்,குரூஸ்புரம்  திமுக கிளைச் செயலாளர் உலகநாதன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் ஆனந்தகுமார், கூட்டாம்புளி ரூபன் மற்றும் மாரிச்செல்வம் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

துத்துக்குடியில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி தங்க மோதிரம் வழங்கினார்கள்.

 ஷ்யாம் நீயூஸ் 03.05.2022 துத்துக்குடியில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி தங்க மோதிரம் வழங்கினார்கள். தூத்துக்குடி திமுக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 99வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி சிலைக்கு மாவட்ட பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்.  பின்னர் பழைய பேருந்து நிலையம் முன்பு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி அரசு மருத்துமணையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்கள்.     நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், வக்கீல்  பாலகுருசாமி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலளார்கள் ஆறுமுகம், ராஜ்மோகன்செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்...