தனி கிராமத்து மக்களுக்கு குடிநீருக்கு பதிலாக குளத்து நீரை கொடுத்த கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஷ்யாம் நீயூஸ்
03.02.2023
தனி கிராமத்து மக்களுக்கு குடிநீருக்கு பதிலாக குளத்து நீரை கொடுத்த கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் காலாங் கரை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதாரமான குடிநீர் இதுவரை வழங்கப்படாமல் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அரசால் கிராமத்திற்கு சுகாதாரமான குடிநீர் வழங்கிய குடிநீரை தனியார் ஹோட்டலுக்கும் ,தனியார் நிறுவனங்களுக்கும் தாரை வறுத்து விட்டு கிராம மக்களுக்கு அசுத்தமான குளத்து நீரை குடிநீராக வழங்கி வருகிறார் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயராஜ் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக அரசால் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது.அரசால் கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு வழங்கிய குடிநீரை தனி கிராமமான காலான்கரையை தவிர்த்து மற்ற கிராமங்களுக்கு திருவைகுண்டம் மற்றும் வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து சீரான சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறார் பஞ்சாயத்து தலைவர். இதுபோல் திருவைகுண்டம் வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து காலாங்கரை கிராமத்திற்கும் குடிதண்ணீர் வழங்கப்பட வேண்டும் குடிநீர் இல்லாததால் கூலி விவசாய வேலை செய்யும் இக்கிராம மக்கள் விற்பனைக்கு வரும் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் அவல நிலை கிராமத்திற்கு ஏற்பட்டுள்ளது.ஒரு குடம் குடி தண்ணீர் 15 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர் .குடிநீர் வாங்க முடியாத பொதுமக்கள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கபடும் குளத்து நீரை கலந்து கொடுக்கும் நீரை குடித்து வருகின்றனர். இதனால் பல நோய்களுக்கு இன்னலாகி வருகின்றனர் . 25 ஆண்டுகளுக்கு மேலாகவே சுகாதாரமாக குடிநீரை காணாத கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் சரியாக மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர்களும் கிராமத்திற்கு வந்து சோதனை செய்யாததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. தனி கிராமமான காலங்கரைக்கு குளத்துநீரை குடிநீராக கொடுத்து சட்டத்துக்கு புறமான செயலியில் ஈடுபட்ட கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயராஜ் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் தூத்துக்குடி ஆட்சித் தலைவர் காலாங்கரை கிராம மக்களின் குடிதண்ணீர் கோரிக்கையை ஏற்று சுகாதாரமான குடிநீர் வழங்கவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏற்கனவே இக்கிராமத்தின் சமுதாய நலக்கூடம் மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை டெண்டர் விடாமல் இடித்து தன் சுய தேவைக்காக பயன்படுத்திக் கொண்டு விட்டார் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபாதி அதிசயராஜ் மற்றும் அவரது கணவர் அதிசயராஜ் என்ற குற்றச்சாட்டு விசாரணையில் இருந்து வரும் போது குளத்துநீரை குடிநீராக வழங்கிய விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.