முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனி கிராமத்து மக்களுக்கு குடிநீருக்கு பதிலாக குளத்து நீரை கொடுத்த கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஷ்யாம் நீயூஸ்

03.02.2023

தனி கிராமத்து மக்களுக்கு குடிநீருக்கு பதிலாக குளத்து நீரை கொடுத்த கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் காலாங் கரை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதாரமான குடிநீர் இதுவரை வழங்கப்படாமல் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அரசால் கிராமத்திற்கு சுகாதாரமான குடிநீர் வழங்கிய குடிநீரை தனியார் ஹோட்டலுக்கும் ,தனியார் நிறுவனங்களுக்கும் தாரை வறுத்து விட்டு கிராம மக்களுக்கு அசுத்தமான குளத்து நீரை குடிநீராக வழங்கி வருகிறார் கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயராஜ் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக அரசால் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது.அரசால்  கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்கு  வழங்கிய குடிநீரை தனி கிராமமான காலான்கரையை தவிர்த்து மற்ற கிராமங்களுக்கு திருவைகுண்டம் மற்றும் வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து சீரான சுகாதாரமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறார் பஞ்சாயத்து தலைவர். இதுபோல் திருவைகுண்டம் வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து காலாங்கரை கிராமத்திற்கும் குடிதண்ணீர் வழங்கப்பட வேண்டும் குடிநீர் இல்லாததால் கூலி விவசாய வேலை செய்யும்  இக்கிராம மக்கள் விற்பனைக்கு வரும் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் அவல நிலை கிராமத்திற்கு  ஏற்பட்டுள்ளது.ஒரு குடம் குடி தண்ணீர் 15 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை பணம் கொடுத்து  வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர் .குடிநீர் வாங்க முடியாத பொதுமக்கள்  பஞ்சாயத்து தலைவரால் வழங்கபடும் குளத்து நீரை கலந்து கொடுக்கும் நீரை குடித்து வருகின்றனர். இதனால் பல நோய்களுக்கு இன்னலாகி வருகின்றனர் . 25 ஆண்டுகளுக்கு மேலாகவே சுகாதாரமாக குடிநீரை காணாத கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் சரியாக மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர்களும் கிராமத்திற்கு வந்து சோதனை செய்யாததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. தனி கிராமமான காலங்கரைக்கு குளத்துநீரை குடிநீராக கொடுத்து சட்டத்துக்கு புறமான செயலியில் ஈடுபட்ட கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபா அதிசயராஜ்  மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் தூத்துக்குடி ஆட்சித் தலைவர் காலாங்கரை கிராம மக்களின் குடிதண்ணீர் கோரிக்கையை ஏற்று சுகாதாரமான குடிநீர் வழங்கவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கனவே இக்கிராமத்தின் சமுதாய நலக்கூடம் மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை டெண்டர் விடாமல் இடித்து தன் சுய தேவைக்காக பயன்படுத்திக் கொண்டு விட்டார் பஞ்சாயத்து தலைவர் செல்வ பிரபாதி அதிசயராஜ் மற்றும் அவரது கணவர் அதிசயராஜ் என்ற குற்றச்சாட்டு விசாரணையில் இருந்து வரும் போது குளத்துநீரை குடிநீராக வழங்கிய விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...