முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதிமன்றத்தை அவமதிப்பு செய்யும் தூத்துக்குடி தாசில்தார்.

 ஷ்யாம் நீயூஸ்

14.02.2023

நீதிமன்றத்தை அவமதிப்பு செய்யும் தூத்துக்குடி தாசில்தார். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

தூத்துக்குடி மடத்தூரைச் சேர்ந்தவர் ஞானராஜ்.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிமைப் பொருள் வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கிரேசி விஜயா. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதியர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிரேசி விஜயா கணவரை பிரிந்து தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய தனது 2 குழந்தைகளையும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக கணவர் ஞானராஜ் தன்னுடன் அழைத்து விட்டதாகவும், குழந்தைகளை சரிவர பராமரிக்காமல் அவர் தனது உறவினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், எனவே குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்குமாறு தூத்துக்குடி நீதித்துறை நடுவர் எண்-3ல் கிரேசி விஜயா வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில் நீதித்துறை நடுவர் சேரலாதன் வழங்கிய தீர்ப்பில். குழந்தைகள் தந்தையின் பராமரிப்பில் இருப்பதை விட தாயின் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் இருப்பதே இயற்கை நீதி எனவே இரண்டு குழந்தைகளிலும் தாயான கிரேசி விஜயாவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.  இந்த வழக்கில் கிரேசி விஜயாவுக்கு ஆதரவாக வழக்கறிஞர் அதிசயகுமார் ஆஜரானார். தீர்ப்பு வந்த பின்னர் தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளி சென்று குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். பள்ளி நிர்வாகம்  தனது கணவருக்கு  போன் செய்து வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்பு தனது கணவர் ஞானராஜ் இரண்டு குழந்தைகளை காரில் கடத்தி சென்று உள்ளார் உடனடியாக குழந்தைகளை மீட்டு தரக்கோரி தாசில்தார் ஜான்ராஜ் வீட்டு முன்பு கிரேசி விஜயா கணவர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீதிமன்றம் இரு குழந்தைகளையும் தற்காலிகமாக தாயிடம் ஒப்படைக்க தீர்ப்பு வழங்கிய பின்னரும் தாசில்தார் ஞானராஜ் குழந்தைகளை ஒப்படைக்க மறுத்து வருவதாக தெரிகிறது.

அரசு உயர்  அதிகாரிகளான தாசில்தாரே நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்து வருவது தூத்துக்குடியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவால் வருவாய்த்துறை அதிகாரி விசாரணை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிகிறது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...