முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி அருகே ஆடுகள் விஷம் வைத்து உயிரிழப்பு : தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

ஷ்யாம் நீயூஸ்

04.03.2023

  தூத்துக்குடி அருகே  ஆடுகள் விஷம் வைத்து உயிரிழப்பு : தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

தூத்துக்குடி அருகே உள்ள துப்பாஸ்பட்டி பகுதியைச் சார்ந்தவர் வெள்ளைச்சாமி இவர் ஆடு வைத்து தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் புதியம்புத்தூர் ஆட்டுச் சந்தையில் வாங்கி வந்த ஐந்து ஆடுகளை தூத்துக்குடி துப்பாஸ்பட்டி எதிரே உள்ள பச்சை மாடன் கோவில் காட்டுப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் வாயில் முறை தள்ளி உயிரிழப்பதை கண்ட அவர் அருகில் சென்று பார்த்தபோது அரிசியுடன் விஷம் கலந்து ஆடுகள் தின்பதற்காகவைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஆடுகள் மற்றும் அதன் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் இதுகுறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை மருத்துவர்கள் ஆடுகள் எதனால் இறந்தது என்பது குறித்து பிரேத பரிசோதனை நடத்தி வருகின்றனர். ஆடுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆடு வளர்க்கும் வெள்ளைச்சாமி செய்தியாளரிடம் கூறுகையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது அப்பகுதியில் கருவாடு காயப்போடும் இடத்தின் அருகில் உள்ள தனராஜ் என்பவர் தொடர்ந்து தன்னிடம் ஆடுகளை இப்பகுதிக்கு கொண்டு வரக்கூடாது என அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும் இவர் தான் ஆடுகளை விஷம் வைத்து அவர்தான் கொலை செய்திருப்பதாக குற்றம் சாட்டிய அவர் இதே போல நேற்று தனது சகோதரரின் மாடு ஒன்றும் இறந்து போனது எனக் குறிப்பிட்டார். இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆடுகளை விஷம் வைத்து கொன்றவரிடம் இருந்து தனக்கு இழப்பீடாக ஒரு லட்ச ரூபாய் பெற்று தர வேண்டும் என கோரிக்கையை விடுத்த அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...