முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் 6 வட்டாட்சியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி எஸ் பி யிடம் சமூக ஆர்வலர் புகார் மனு அளித்தார்.

ஷ்யாம் நீயூஸ்

15.02.2023

தூத்துக்குடியில் 6 வட்டாட்சியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்! தூத்துக்குடி எஸ் பி யிடம் சமூக ஆர்வலர் புகார் மனு அளித்தார்!

தூத்துக்குடி மாவட்ட சமூக ஆர்வலர்,மற்றும் எழுத்தாளர் காந்திமதி நாதன் .இவர் நலிந்த மக்களுக்காகவும் சமூக அநீதி நடைபெறும் செயல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார் இவருக்கு சமூகத்தில் நல்ல நற்பெயர் இருந்து வருகிறது. இவர் பொது மக்களுக்கு செய்யும் நல்ல செயல்கள் அரசு வருவாய் துறை அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் வரும் வருமானத்திற்கு இடைஞ்சலாக இருந்ததாக தெரிகிறது. இவரின் நற்பெயரை கெடுக்கும் நோக்கோடு தூத்துக்குடி மாவட்ட வட்டாட்சியர்கள் தங்களுக்குள் உள்ள whatsapp குரூப்பில் அவரை பற்றி தவறாக தகவல்களை பரப்பி வந்துள்ளதாக  தகவல் தெரிகின்றன

 இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம்  வாட்சப் குரூப்பில் அவதூறு பரப்பிய ஆறு வட்டாட்சியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தார் அந்த அந்த புகாரில் தன் மீதும் தன் குடும்பத்தின் மீதும்  வட்டாட்சியர்கள் whatsapp வழியாக தவறான குறுஞ்செய்திகளை அனுப்பி எனது பெயருக்கும் மாண்பிற்கும் களங்கம் விளைவிக்க முயன்றதாகவும் களங்கம் விளைவிக்க முயன்ற ஆறு வட்டாட்சியர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தூத்துக்குடி வட்டாட்சியர் ஒருவர் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் மீண்டும் தூத்துக்குடியில் ஆறு வட்டாட்சியர்கள் சமூக ஆர்வலரைப் பற்றி தவறான தகவலை பரப்பி வந்ததாக குற்றவியல் புகார் கொடுத்திருப்பது  தூத்துக்குடியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு நீதிமன்ற அவமதிப்பு செய்த வட்டாட்சியர்தான் அவதூறு பரப்பிய வாட்ஸ் அப் குரூப்பின அட்மின் என்றும் கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் மனு கொடுக்கும் போது சமூக ஆர்வலர் சுப மாடசாமி, வழக்கறிஞர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...